முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது
சமீபத்திய இடுகைகள்

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு. எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க... அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு இருப்பவர்க

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான்

பெரீயம்மா

பெரீயம்மா என்னை முதன்முதலில் கிணத்துக்குள் தூக்கிப்போட்டபோது  எனக்கு பதினோரு வயது. திரும்பி நில்லுடா சுரபுட்டையை முதுகுல கட்டிவிடறேன்னு சொன்னதை நம்பி வாயெல்லாம் பல்லாக தண்ணீரில் இருந்து பத்தடிக்கு மேலிருக்கும் பம்ப்பு செட்டு மேடையில் நின்றிருந்தேன். எல்லா பயகளும் ஏற்கனவே உள்ளே குதித்து கும்மாளமிட ஆரம்பிச்சிருந்ததும் முந்தின நாள் இதே சுரபுட்டையை கட்டிக்கொண்டு நாளெல்லாம் கடைசிப்படியை இறுகப் பிடித்துக்கொண்டு காலை உதைத்து பழகிக்கொண்டிருந்ததும் சேர்த்து உடம்பில் ஒரு கிளுகிளுப்பு கூடிய விரைப்பு ஏறி எப்படா தண்ணியை தொடுவோம்னு எனக்கும் உந்திக்கொண்டே இருந்தது. அப்படியே கிணற்றின் கடைசி படிவரைக்கும் போய் தண்ணில கால் விட்டாப்ல ஒக்காந்துக்கிடலாங்கற நினைப்பில் தான் இருந்தேன். ஆனால் ஒரே ஒரு நொடி காற்றில் கைகால்களை துளாவியது நினைவிருக்கிறது. அப்பறம் யம்மேன்னு தொண்டை கமற கத்தியது. கத்தி முடிக்குமுன்னே பப்பரப்பேனு விழுந்தது, வெயிலின் கதிர்கள் பாய்ச்சிய கிணற்றின் அடர்பாசி கொடுத்த கரும்பச்சை வெளுப்பு வெளிச்சத்தில் மூக்கில் வாயில் தண்ணீரேற உள்ளாக்க அஞ்சடி போய் மேல வந்தது, கண்களுக்கு முன் கலங்கிய உருவமாய்

உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்

இந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்டியானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க? :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :)  இந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர்? ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்சிரு

திருடன் போலீஸ்

வாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல! கான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு! அதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம

நிம்போமேனியாக் ( Nymphomaniac )

நிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை. ஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கரு