அன்பே!
என் குளிர்கால
குமுட்டி அடுப்பே!
சுகமாகத்தான் இருக்கிறது
ஒரு பொட்டலம் சுண்டலில்
விரல்கள் துழாவி
பஞ்சப்பனாதியாய் பகிர்ந்துண்னுவதும்
சகிக்கத்தான் முடிவதில்லை
சுண்டலுக்கு காசு கொடுக்கும்
அற்ப(புத) தருணங்களில்
மட்டும்
நீ
வெட்கம் மேலிட
கடற்கரை மணலில்
முகம் புதைக்கும் மர்மம்
கற்றுக்கொண்டது
காதலில்
செலவினம் அதிகம்
பெருமைதான் எனக்கும்
பொட்டலத்தின்
அடிநுனியில் மாட்டிய
கடைசி சுண்டலுக்கான
அடிதடியில்
உன் வெற்றி
அதையும் மீறிய வலிகள்
என் கையில் விழுந்த
உன் கடைவாய்ப் பற்களின்
கடிதடங்கள்
கற்றுக்கொண்டது
காதலென்றால்
வலிகள் தாங்கனும்
ரோஸ்கலர் பிடிக்குமென்றே நம்பினேன்
நீ
ஒன்றுக்கு இரண்டாய்
பஞ்சுமிட்டாய் கேட்டபோது
அதிர்ந்துதான் போனேன்
பஞ்சுமிட்டாய் குச்சிகளை
நீ மட்டுமே
சாயம் போக
சப்பிய போது
கற்றுக்கொண்டது
காதலில்
விட்டுக் கொடுக்கனும்
சிலிர்க்கத்தான் செய்கிறது
விரலோடு விரல் கோர்த்து
முகமோடு முகம் வைத்து
வாயோடு உறவாட
உடலோடு விளையாட
குமட்டலே மிச்சம்!
சிக்கெடுக்காத தலையில்
விரல்கள் சிக்க
விளக்காத வாயின்
கப்பு தாக்க
கம்மாங்கூட்டின்
வீச்சம் தூக்க
கற்றுக்கொண்டது
காதலில்
காமமும் இருக்கனும்
பதவிசாகத்தான் இருக்கிறது
காதலியுடன்
டாஸ்மாக் சந்தில்
கமுக்கமாய் இருப்பது
பத்தும் பறந்தது
ஓல்டுமாங்க் ஆஃபும்
மீன்வருவல் பிளேட்டும்
போதவில்லையென
பக்கத்து டேபிளின்
மிச்ச ஊறுகாய் கவரை
உள்வெளி திருப்பி
நீ
சுத்தமாய் நக்கியபோது
கற்றுக்கொண்டது
காதலில்
சம உரிமை இருக்கனும்
சில்வியா குண்டலகேசியே...
எனக்கொரு சந்தேகம்!
காதலித்தே தீர வேண்டுமா என்ன?
காதலில்
இத்தனை கற்ற பின்னும்
அடைக்க முடியாதது அன்பு!
பரந்து விரிந்தது உலகம்!!
எல்லைகளற்றது பிரபஞ்சம்!!!
இதில்
காதலென்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமா?
அதனால்தான் கேட்கிறேன்...
நீயே இம்புட்டு அழகெனில்
உன் தம்பி எப்படி?!
ஹிஹி...
Thursday, February 14, 2008
காத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள்
Posted by
இளவஞ்சி
at
2/14/2008 07:49:00 PM
14
comments
Links to this post
Labels: மொக்கை
Subscribe to:
Posts (Atom)
