
இந்த வார விகடனில் (அண்ணாச்சி: அதென்ன இந்தவார விகடன்? அட்டையக் கிழிச்சா வாராவாரம் அதே விகடன் தான் டே! ) சில எரிச்சலூட்டும் பகுதிகள்.
கவர்ஸ்டோரில ஆரம்பிக்குது உப்புக்காகிதம் வைச்சு மூஞ்சுல தேக்கற மாதிரியான எரிச்சல்! திமுக மகளீர் மாநாடு மூலம் போட்டி கனிமொழிக்கும் கயல்விழிக்குமாம்! ஊருல யாருக்குமே தோணாத பத்தவைக்கற நேக்குல இப்படி ஒரு கட்டுரை. இதை இப்படி எழுத விகடன் எதுக்கய்யா?
பருத்திவீரன் படத்துக்கு விமரிசனமாக எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டால் அறிவுசீவி விமர்சனமாக இருக்காதேன்னு சன் டீவி விமர்சன பன்ச் மாதிரி “க்ளைமாக்ஸ் வக்கிரம்”னு ஒரு பிட்டை போட்டது நினைவிருக்கலாம். இப்போ இந்தவாரம் 32 நபர்களால் ஒரு அபலைப்பெண் பலாத்காரப்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் பற்றிய ஒரு கட்டுரை. “உறைய வைக்கும் பூடகமான பலாத்கார காட்சிகளைக் கொண்டது” அப்படின்னு விமர்சனம். ஆனால் இதில் வக்கிரம் என்ற் வார்த்தையே காணோம்! அதென்னய்யா அமீர் எடுத்தால் வக்கிரம்! இன்னொருத்தரு எடுத்தால் சமூக அவலங்களைக் காட்டும் படைப்பா? என்ன விமர்சனமோ! என்ன அளவுகோலோ!!
அடுத்தது, வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களின் தரத்தில் 25% கூட இல்லாமல் பக்கா சப்பையான ஒரு விமர்சனம் தசாவதாரத்துக்கு. கமல் மட்டும் சூப்பர். மத்தபடி இது நொட்டை.. இது நொள்ளைன்னு... திரைக்கதைல மேஜிக்கும் கதைல லாஜிக்கும் இல்லைன்னு ஒரு குத்தம் கண்டுபுடிச்சிருக்காங்க! இதுபோக கதை பல தளங்களில் பயணிப்பதால் சாதாரண ரசிகன் குழம்பிருவானாம்! ஆமாமாம்! நம்ப ரசிகருங்க இரட்டைவேடத்தில் குழம்பாமல் இருக்க இளையதளபதி மாதிரி ஒரு கொடுமை மூனு நாள் தாடியோடவும், இன்னொரு கொடுமை ரெண்டேமுக்கா நாள் தாடியோடவும்(நன்றி: பெயர் மறந்த சகபதிவர்) வந்தா சரியா இருக்குமா? இதெல்லாம் விட கொடுமை இப்படத்துக்கும் 43 மார்க்காம்! இது எந்த மார்க்கு? குருவிக்கும், பழனிக்கும் போடற அதே மார்க்கு! இந்தப்படத்துக்கும் 43ன்னா வேற எந்தப்படத்துக்குயா நீரு 80 மார்க்கு போடுவீரு? 100க்கு 100 வாங்கற அப்படியாப்பட்ட ஒரு கதையும் திரைக்கதையும் உம்மகிட்ட இருந்தா கோடம்பாக்க மக்களுக்கு கொடுத்து ஒதவறது தானேயா! புண்ணியமாப்போகும்.
இத்தனை நொட்டை சொல்லற? அப்பறம் என்ன மயித்துக்குளே விகடனை வாங்கறன்னா கேக்கறீங்க?! அதுவும் சரிதான். இனிமே அடுத்த வெள்ளிக்கெழமை வரை வாங்கவே மாட்டேன்! :(
P.S: என்னய்யா இது பின்னூட்ட சைசுல பதிவுன்னு திட்டாதிங்க... இன்னைக்கு கோட்டா அவ்ளவ்தான். படம் எதுக்கா? விகடன் மாதிரியே இந்தபதிவும் மொத்தமா மொக்கையாகாம இருக்க! )
Friday, June 20, 2008
ஆனந்தவிகடனும் ஒரு விமர்சன எரிச்சலும்
Posted by
இளவஞ்சி
at
6/20/2008 03:25:00 PM
25
comments
Links to this post
Labels: செய்தி விமர்சனம்
Monday, June 16, 2008
கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...
போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில் ஆரம்பித்த அலப்பரை மீண்டும் திங்கள் அன்று சென்னை வந்து சேரும்வரை ஓயவில்லை :) நீண்ட நாட்கள் கழித்து ஒரு மனநிறைவான பயணம். என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) )
மாண்டியா வரை மைசூர் எக்ஸ்பிரசில் பயணம். பிறகு அங்கிருந்து இரண்டு நாளைக்கு ஒரு டாடா சூமோ பேசிக்கொண்டு அங்கிருந்து தென்னூரு ஏரி.. அங்கிருந்து மேல்கோட்டா... அப்படியே மைசூர் வழியாக குஷால்நகரில் ராத்தங்கல். காலையில் தங்கக்கோவிலில் நடந்த விழாவில் சிறப்பழைப்பாளார்களாக பங்கேற்பு(ஹிஹி... ) மதியமாக கிளம்பி மைசூரை ச்சும்மா பேருக்குத்தொட்டுவிட்டு சென்னை ரிட்டர்ன். இதுதான் பயண திட்டம். இந்த ட்ரிப்பை படுபயங்கரமா அனுபவிச்சது வண்டியோட்டுனர்தான். அவரை ஓட்ட விட்டாத்தானே? இடையிடையே தனிமரம், விவசாயி, மலை, கோணைக்கல்லு, எருமைமாடுன்னு எதுகிடைச்சாலும் வண்டியை நிறுத்தி டேரா போட்டு படமெடுக்கறதுன்னு படுரகளையா நேரம் போனதுன்னாலும் படமெடுக்கறதுல பலவிடயங்கள் கற்றுக்கொள்ள முடிந்ததென்பது உண்மை. அப்பறம்... தென்னூரு ஏரிக்கரை காவாயில் ஒரு அற்புதக்குளியல்! அடடா.. சென்னையின் காக்கா குளியலுக்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! :)
படமெடுப்பதை விட இனிமையான அனுபவம் பயணம் முழுவதும் நடந்த ஆழ்ந்த தமிழ் இலக்கிய விவாதங்கள்தான்! அட அதாங்க... பொரளி பேசறது! ஜெஜெ சில குறிப்பு நாவல்தானா? ராமசேஷன் எழுதிய ஆதவன் இன்னைக்கு வரைக்கும் இருந்திருந்தா எப்படி இருக்கும்? ஜெமோவின் சமீபத்திய ஜகா வாங்கல், (1000வது முறையாக ) பின்நவீனத்துவம் என்றால் என்ன? இது போன்ற மற்ற நாடுகளின் வரலாற்றின் போக்கிலாக உருவாகும் கலையம்சங்கள் நமது நாட்டின் வரலாறுக்கும் வாழ்வுக்கும் தொடர்பின்றி ஒரு திணித்தலாக நமக்கு நெஜமாகவே தேவையா? இப்படி.. இதுபோக லோக்கல் பொங்கலாக... லச்சுமணரின் கவிதைகள் மீதான இலக்கியத்திறனாய்வு, போலி கம்யூனிஸ்ட்டான மோகந்தாஸுக்கு ஏணிந்த ஆணாதிக்க வெறி, அமீரக அண்ணாச்சியின் சமீபகால மொக்கைகளின் காரணம், CVRன் சமூகத்தவறுகளின் மீதான கோவம், அய்யனாரின் படைப்புகளில் மிஸ்ஸாவது என்ன? இளவஞ்சியின் ஒருரூபாய் ஈகையின் பின்னான சுயநலம், நிர்வாண புகைப்படக்கலை ( டிரைவரு ஒரு லுக்கு விட்டாரு பாருங்க! நாக்க புடிங்கிக்கனும்! :) ) போன்ற தமிழ் பதிவுலகம் அறிந்தே ஆகவேண்டிய மேட்டருகள்! :)
சரிவிடுங்க.. அங்க எடுத்த படங்களில் சில இங்கே.. படங்களை பலவிதமா நகாசுவேலை செஞ்சும் இம்புட்டுத்தான் நல்ல வந்ததான்னு திட்டாதீங்க. அதுக்கெல்லாம் மேல சொன்ன பிஸ்த்துகளின் லிங்கை தட்டிப்பாருங்கப்பு! :)
வழக்கம் போலவே, கூகிள் பேஜஸ் புட்டுக்கினு படங்கள் லோட் ஆகலைன்னா பிக்காசவெப்ல பாருங்கப்பு.
தழலும் தணலும்...
கர்நாடக கிராமப்புறம் எப்படி இருக்குன்னு ஒரு திரொபதிக்குன்று பாறையிலிருந்து ஒரு பார்வை...
அதேபாறையில் கொரங்குத்தனம் பழகும் ஒரு தொரை!
தென்னூரு ஏரிக்கரையில் ஒர் சிலை! ஐடியா திருட்டு from ஆதி! :)
ஆயாவின் கண்களில் தெரிவது கோவமா? இல்லை.. ”பொழப்பத்த பயலுவ..” அப்படிங்கற அலுப்பா! :)
உஞ்சோட்டாளிங்கற மொறையில நான் என்ன சொல்லுதன்னா...
மேல்கோட்டே குளமும் கோவிலும்.. ( இங்கனதான் தளபதி எடுத்தாங்கலாம்.. என்ன பாட்டு சொல்லுங்க? )
மகுடிக்கு மயங்கிய நாகமும் சிலையின் வடிவில் மயங்கும் நாமும்...
மொட்டை போட்டாச்சு.. நாமம் இட்டாச்சு... காரியம் செஞ்சாச்சு... மறுவுலகிற்கு தகவல் சொல்லுறது யாரு?
ராயர்கோவில்
கட்டிமுடிக்கப்படாத ராயர்கோவில் தூண்களில் ஒன்று...
மேல்கோட்டே கோவில்.. ராயர்கோவிலில் இருந்து...
ஊரினுள் கண்ட ஒரு புத்தம்புதிய பூஞ்சிரிப்பு! :)
அடுத்தது எங்க என் புகைப்படப்பொட்டியை திறந்தேன்னா... கோல்டன் டெம்ப்பிள்.
கோவிலில் கொம்பூதும் திபெத்திய பிட்சுகள்.. ஊதுங்கய்யா! ஊதுங்க! சீனாவரைக்கும் கேக்கனும்!
அங்கன கோவில்ல 5 மணிநேரமா சளைக்காம ஸ்லோமோஷன்ல என்னத்த ஆடுனாய்ங்கன்னா...
ஆட்டத்த படமெடுக்க வாகா இடம் அமையாததால ஆளுங்களை எடுக்க திரும்பிட்டேன்... அதுல சில...
In safer Hands! :)
8 to 80 and a Bunch of Kaduvans! :)
தீனி கிடைத்த/கிடைக்காத பொடுசு... குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன? 
ஓட்டைப்பல்லின் வழியே சிதறும் ஒரு மதுரச்சிரிப்பு!
நம்ப மதுரை ஜில்லா ஒளிஓவிய புலியைப் பார்த்து போட்டுக்கின ஒரு சூடு! :)
நளினமே.... உந்தன் பேர் பெண்மையோ?!
மொக்கைத்தத்துவம் 234234234: ஆம்பளையாளுக்கு எதெல்லாம் தமாசுன்னு பொம்பளையாளுக்கும், பொம்பளையாளுக மவுனத்தின் பின்னான ரகசியமும் ஒருத்தருக்கொருத்தரு புரிஞ்சுக்கிட்டதா சரித்திரமே இல்லை! ஹிஹி...
கடைசியாக.... வயலும் வாழ்வும்...
அம்புட்டுத்தேன் மேட்டரு! :)
Posted by
இளவஞ்சி
at
6/16/2008 07:54:00 PM
30
comments
Links to this post
Labels: Travel Photography, புகைப்படம்
Wednesday, June 04, 2008
அடங்கியிருக்கும் டோண்டு... அடங்க மறுத்து எல்லை மீறும் உண்மைத்தமிழன்!!!
இருவருமே நீளமாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்றாலும் உண்மைத்தமிழன் மட்டும் ஏன் இப்படி?! ஹிம்... :(
=========
இராயல்,
இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது? :)
Posted by
இளவஞ்சி
at
6/04/2008 05:11:00 PM
41
comments
Links to this post
Labels: மொக்கை
