Monday, June 16, 2008

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில் ஆரம்பித்த அலப்பரை மீண்டும் திங்கள் அன்று சென்னை வந்து சேரும்வரை ஓயவில்லை :) நீண்ட நாட்கள் கழித்து ஒரு மனநிறைவான பயணம். என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) )

மாண்டியா வரை மைசூர் எக்ஸ்பிரசில் பயணம். பிறகு அங்கிருந்து இரண்டு நாளைக்கு ஒரு டாடா சூமோ பேசிக்கொண்டு அங்கிருந்து தென்னூரு ஏரி.. அங்கிருந்து மேல்கோட்டா... அப்படியே மைசூர் வழியாக குஷால்நகரில் ராத்தங்கல். காலையில் தங்கக்கோவிலில் நடந்த விழாவில் சிறப்பழைப்பாளார்களாக பங்கேற்பு(ஹிஹி... ) மதியமாக கிளம்பி மைசூரை ச்சும்மா பேருக்குத்தொட்டுவிட்டு சென்னை ரிட்டர்ன். இதுதான் பயண திட்டம். இந்த ட்ரிப்பை படுபயங்கரமா அனுபவிச்சது வண்டியோட்டுனர்தான். அவரை ஓட்ட விட்டாத்தானே? இடையிடையே தனிமரம், விவசாயி, மலை, கோணைக்கல்லு, எருமைமாடுன்னு எதுகிடைச்சாலும் வண்டியை நிறுத்தி டேரா போட்டு படமெடுக்கறதுன்னு படுரகளையா நேரம் போனதுன்னாலும் படமெடுக்கறதுல பலவிடயங்கள் கற்றுக்கொள்ள முடிந்ததென்பது உண்மை. அப்பறம்... தென்னூரு ஏரிக்கரை காவாயில் ஒரு அற்புதக்குளியல்! அடடா.. சென்னையின் காக்கா குளியலுக்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! :)

படமெடுப்பதை விட இனிமையான அனுபவம் பயணம் முழுவதும் நடந்த ஆழ்ந்த தமிழ் இலக்கிய விவாதங்கள்தான்! அட அதாங்க... பொரளி பேசறது! ஜெஜெ சில குறிப்பு நாவல்தானா? ராமசேஷன் எழுதிய ஆதவன் இன்னைக்கு வரைக்கும் இருந்திருந்தா எப்படி இருக்கும்? ஜெமோவின் சமீபத்திய ஜகா வாங்கல், (1000வது முறையாக ) பின்நவீனத்துவம் என்றால் என்ன? இது போன்ற மற்ற நாடுகளின் வரலாற்றின் போக்கிலாக உருவாகும் கலையம்சங்கள் நமது நாட்டின் வரலாறுக்கும் வாழ்வுக்கும் தொடர்பின்றி ஒரு திணித்தலாக நமக்கு நெஜமாகவே தேவையா? இப்படி.. இதுபோக லோக்கல் பொங்கலாக... லச்சுமணரின் கவிதைகள் மீதான இலக்கியத்திறனாய்வு, போலி கம்யூனிஸ்ட்டான மோகந்தாஸுக்கு ஏணிந்த ஆணாதிக்க வெறி, அமீரக அண்ணாச்சியின் சமீபகால மொக்கைகளின் காரணம், CVRன் சமூகத்தவறுகளின் மீதான கோவம், அய்யனாரின் படைப்புகளில் மிஸ்ஸாவது என்ன? இளவஞ்சியின் ஒருரூபாய் ஈகையின் பின்னான சுயநலம், நிர்வாண புகைப்படக்கலை ( டிரைவரு ஒரு லுக்கு விட்டாரு பாருங்க! நாக்க புடிங்கிக்கனும்! :) ) போன்ற தமிழ் பதிவுலகம் அறிந்தே ஆகவேண்டிய மேட்டருகள்! :)

சரிவிடுங்க.. அங்க எடுத்த படங்களில் சில இங்கே.. படங்களை பலவிதமா நகாசுவேலை செஞ்சும் இம்புட்டுத்தான் நல்ல வந்ததான்னு திட்டாதீங்க. அதுக்கெல்லாம் மேல சொன்ன பிஸ்த்துகளின் லிங்கை தட்டிப்பாருங்கப்பு! :)

வழக்கம் போலவே, கூகிள் பேஜஸ் புட்டுக்கினு படங்கள் லோட் ஆகலைன்னா பிக்காசவெப்ல பாருங்கப்பு.




தழலும் தணலும்...



கர்நாடக கிராமப்புறம் எப்படி இருக்குன்னு ஒரு திரொபதிக்குன்று பாறையிலிருந்து ஒரு பார்வை...



அதேபாறையில் கொரங்குத்தனம் பழகும் ஒரு தொரை!



தென்னூரு ஏரிக்கரையில் ஒர் சிலை! ஐடியா திருட்டு from ஆதி! :)



ஆயாவின் கண்களில் தெரிவது கோவமா? இல்லை.. ”பொழப்பத்த பயலுவ..” அப்படிங்கற அலுப்பா! :)



உஞ்சோட்டாளிங்கற மொறையில நான் என்ன சொல்லுதன்னா...



மேல்கோட்டே குளமும் கோவிலும்.. ( இங்கனதான் தளபதி எடுத்தாங்கலாம்.. என்ன பாட்டு சொல்லுங்க? )



மகுடிக்கு மயங்கிய நாகமும் சிலையின் வடிவில் மயங்கும் நாமும்...



மொட்டை போட்டாச்சு.. நாமம் இட்டாச்சு... காரியம் செஞ்சாச்சு... மறுவுலகிற்கு தகவல் சொல்லுறது யாரு?



ராயர்கோவில்



கட்டிமுடிக்கப்படாத ராயர்கோவில் தூண்களில் ஒன்று...



மேல்கோட்டே கோவில்.. ராயர்கோவிலில் இருந்து...



ஊரினுள் கண்ட ஒரு புத்தம்புதிய பூஞ்சிரிப்பு! :)



அடுத்தது எங்க என் புகைப்படப்பொட்டியை திறந்தேன்னா... கோல்டன் டெம்ப்பிள்.


கோவிலில் கொம்பூதும் திபெத்திய பிட்சுகள்.. ஊதுங்கய்யா! ஊதுங்க! சீனாவரைக்கும் கேக்கனும்!



அங்கன கோவில்ல 5 மணிநேரமா சளைக்காம ஸ்லோமோஷன்ல என்னத்த ஆடுனாய்ங்கன்னா...



ஆட்டத்த படமெடுக்க வாகா இடம் அமையாததால ஆளுங்களை எடுக்க திரும்பிட்டேன்... அதுல சில...

In safer Hands! :)



8 to 80 and a Bunch of Kaduvans! :)



தீனி கிடைத்த/கிடைக்காத பொடுசு... குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?



ஓட்டைப்பல்லின் வழியே சிதறும் ஒரு மதுரச்சிரிப்பு!



நம்ப மதுரை ஜில்லா ஒளிஓவிய புலியைப் பார்த்து போட்டுக்கின ஒரு சூடு! :)



நளினமே.... உந்தன் பேர் பெண்மையோ?!



மொக்கைத்தத்துவம் 234234234: ஆம்பளையாளுக்கு எதெல்லாம் தமாசுன்னு பொம்பளையாளுக்கும், பொம்பளையாளுக மவுனத்தின் பின்னான ரகசியமும் ஒருத்தருக்கொருத்தரு புரிஞ்சுக்கிட்டதா சரித்திரமே இல்லை! ஹிஹி...



கடைசியாக.... வயலும் வாழ்வும்...




அம்புட்டுத்தேன் மேட்டரு! :)

30 comments:

இராம்/Raam said...

அட்டகாசம்..... :)

ஆசிப் மீரான் said...

///அமீரக அண்ணாச்சியின் சமீபகால மொக்கைகளின் காரணம்,///

ஆனாலும் நீரு ரொம்ப நல்லவருய்யா...
சமீப காலமாத்தான் மொக்கை போடுதாரு அவருங்குற் மாதிரி சொன்னதை நெனச்சு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியலை.. நல்லா இருங்கடே!!

Prakash G.R. said...

Wow! Wonderful snaps.

வீரசுந்தர் said...

அருமையான படங்கள். இவற்றைப் பார்த்தவுடன், நாமும் இங்கு செல்ல வேண்டுமென உணர்வை ஏற்படுத்தி விட்டன. :-)

மோகன்தாஸ் said...

//போலி கம்யூனிஸ்ட்டான மோகந்தாஸுக்கு ஏணிந்த ஆணாதிக்க வெறி, //

அய்யோ அய்யோ, உங்கக்கிட்ட எத்தனை தடவை சொல்லி அனுப்பிச்சேன். திரும்பவும் தப்பா சொல்றீங்களே.

நான் மார்க்ஸிஸ்டு, மார்க்ஸிஸ்டு, மார்க்ஸிஸ்டு.

அந்த ஊரில் கண்ட பூஞ்சிரிப்பு, பிரம்மாதம். இன்னும் அந்த நேரம் நினைவிருக்கிறது, எவ்வளவு அழகான வெட்கம், எவ்வளவு அழகான நளினம். இந்தக் காலத்துப் பெண்கள் கிட்ட இதையெல்லாம் பார்க்கிறப்ப எவ்வளவு சந்தோஷமா இருந்தது. :))))))))

நான் எடுத்த அந்தப் பெண்ணுடைய ஃபோட்டோ முழுக்க ஷேக் ஆகிவிட்டது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதற்கென்ன நீங்கள் தான் அருமையா எடுத்திருக்கீங்களே!

ரவிசங்கர் said...

அருமை

ஜேகே - JK said...

அருமையான படங்கள் இளவஞ்சி.

Anonymous said...

//
குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?
//

touching :)

Anonymous said...

//
குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?
//

touching :)

மனதின் ஓசை said...

போட்டோக்களும் அதற்கான கமெண்ட்ஸும் அருமை.

Athi said...

Kalakkureenga Ilavanji, blogs'um fotos'um. (I presonally like Bylakuppe snaps more than Melkote).

Sari... Santhadi saakkula Naathan, PV pakkathula en perai pottu yenya maanathai vaangureeru? Avanga fotos'ai paakkuravanga, thirumbi vanthu ennoadathai paatha kaari thuppa maattaanga?

தம்பி said...

பூஞ்சிரிப்பு பொண்ணு எக்ஸலண்ட். பாத்துட்டே இருக்கணும் போல ஒரு சிரிப்பு. கலக்கிட்டிங்க.

கோபிநாத் said...

அட்டகாசம் ஆசானே ;)

\\என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) )
\\

;))))

\\ஊரினுள் கண்ட ஒரு புத்தம்புதிய பூஞ்சிரிப்பு! :)

ஓட்டைப்பல்லின் வழியே சிதறும் ஒரு மதுரச்சிரிப்பு!

In safer Hands! :)

தீனி கிடைத்த/கிடைக்காத பொடுசு... குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?\\


அழகு...கலக்கிட்டிங்க ;))

nathan said...

Vaaarthaigalum, Pugaipadangalum ondrukku ondru potti podugirathu..I really missed taking a portrait of that girl..Kalakals.
-nathan

இளவஞ்சி said...

ராயல், பிரகாஸ், வீரசுந்தர், ரவிசங்கர், ஜேகே, அனானி, மனதின் ஓசை, தம்பி, கோபி...

வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! :)

அண்ணாச்சி,

// ஆனாலும் நீரு ரொம்ப நல்லவருய்யா...//

ஆஹா! நீராவது சொன்னீரே... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! :)

// சமீப காலமாத்தான் மொக்கை போடுதாரு //இதுமட்டுமா? நீரு மொக்கைக்காக தமிழ்மண சந்திப்பில் ஒரு உரிமைப்போராட்டம் நடத்தியபோதே எனக்கு டவுட்டு ஓய்! :)

இளவஞ்சி said...

தாஸு,

// நான் மார்க்ஸிஸ்டு //

அதைத்தான்யா நானும் சொல்லிருக்கேன், நீர் சொல்லிக்குடுத்த மாதிரியே!!! ;)

ஆதி,

சும்மாருங்கப்பு.. உங்க ரேஞ்சு என்னன்னு எங்களுக்குத் தெரியும்! :)

நாதன்,

குருவே வரணும். ஊக்கங்களுக்கு நன்றி! :)

லக்கிலுக் said...

படங்களும், கமெண்ட்ஸுகளும் கலக்கல்!

ஆயில்யன் said...

எல்லா படங்களும் ரொம்ப அருமையாக இருக்கு :))

சில குறிப்பிட்ட படங்களாக பாப்பாவின் புன்சிரிப்பு!

குளத்தின் கரையோரத்து ஆசிர்வதிக்கும் பெரியவர்!

அந்த திபெத்திய பொடிசு!

கலக்கல்ஸ் :))))

OSAI Chella said...

nice shots thru the cam and also thru pen!

இளவஞ்சி said...

லக்கி, ஆயில்யன், ஓசையார்,

டாங்ஸ்... :)

Boston Bala said...

நன்றி

sathishkumar said...

Wonderful article. Please send me your new phone number.

G.Ragavan said...

நகைச்சுவையும் கண்ணீரும் கலந்து பதிவுகள் பல தரும் வலையுலகக் காமதேனுவே.... மீண்டும் உங்களது பதிவுகளைக் கண்டு சொல்லொனா மகிழ்வை மனம் எய்துகிறது.

பதிவுகளில் எழுத்துகள் மட்டுமல்ல புகைப்படங்களும் கவிபாடும் என்று காட்டிய கற்பகதருவே! இன்னும் எத்தனை புகைப்படங்கள் தருவே? :D அட நெறையக் குடுங்கன்னு சொன்னேன். :)

CVR said...

//CVRன் சமூகத்தவறுகளின் மீதான கோவம்//

அட! இது வேறயா???
நம்ம க்ரைம் ரேட்டு கூடிக்கிட்டே போகுதே!!!:P
அப்படி என்ன பொடலங்கா சமூகத்தவறு செஞ்சிட்டேன்னு எப்பயாச்சும் சொல்லுங்க அண்ணாச்சி!! :D

Madura said...

அருமையா இருக்கு ...
கமென்ட்சும் !!! :) ...
முதல் பரிசு, பாட்டி தாத்தாவுக்கு (போட்டோவும், கமென்ட்டும்),
இரண்டாவது, ஏரிக்கரை சிற்பத்திற்கு :) ...
மூணாவது அந்த தெப்பக்குளம் மொட்டை மற்றும் சில ... கதை சொல்லும் முகங்களுக்கு ... (இரண்டாவது "டை"ன்னு வச்சுக்கலாம்!)

ஆமா ... காப்பி ரைட்டெல்லாம் இல்லையா? :) திருடிக்கலாமா? :)

வேளராசி said...

படங்களும், கமெண்ட்ஸுகளும் கலக்கல்!

Thangamani said...

படங்களும், பதிவும் அருமை.

Voice on Wings said...

//கோவிலில் கொம்பூதும் திபெத்திய பிட்சுகள்.. ஊதுங்கய்யா! ஊதுங்க! சீனாவரைக்கும் கேக்கனும்!//

இதைப் படிக்கும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதென்னமோ உண்மை.

இளவஞ்சி said...

பாபா, சதீஷ், தங்கமணி, வேளராசி, விங்ஸ்,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

ஜீரா, வாய்யா! இப்பவாச்சும் வாக்கு குடும்வே! உம்ம கல்யாணத்துக்கு நாந்தேன் போட்டாகிராபருன்னு! :)

சிவிஆர்,

// அப்படி என்ன பொடலங்கா சமூகத்தவறு செஞ்சிட்டேன்னு எப்பயாச்சும் சொல்லுங்க அண்ணாச்சி!! :D//

அடடா! அதை இப்படி படிக்கனும்...

“சமூகத்தவறுகளின் மீதான CVRன் கோவம்”

தப்புக்கு மாப்பு! :)

மதுரா,

// ஆமா ... காப்பி ரைட்டெல்லாம் இல்லையா? :) திருடிக்கலாமா? :) //

யாம் பெற்ற இன்பம்.. :)

An& said...

அருமையான படங்கள்