முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜிம்மியும் சில நிகழ்வுகளும்...


ஒவ்வொருமுறை உதைபட்டாலும்
ஜிம்மிதான் கழற்றுமென் காலுறையை
அதில் எனக்கொரு வரம்புமீறலும்
அதற்கொரு ஆத்மதிருப்தியும்

தளைகலற்ற அன்பின்
சிறந்த சான்றை
தெரியாதவைகளாகவே இருக்கின்றன
நாயில்லா வீடுகள்

ஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும்
ரெண்டுரூபாய் எலும்பும்
சரிசம குதூகலம்
எங்களுக்கும் அதற்கும்

உணவிற்கே அது
உண்மையாய் நடப்பினும்
நேர்மையுண்டு அதில்
நாம் அப்படியா என்ன?

சாதம் பற்றாத
கடைசி கல்யாணபந்திபோல
ஒரு குறையாகத்தான் இருக்கிறது
ஜிம்மிக்கொரு நிழற்படம் இல்லாததும்

அன்பு மறுதலிக்கப்பட
எப்பொழுதும் வாய்ப்பில்லை
அம்மாவிடமும் ஜிம்மியிடமும்
டேக் இட் பார் கிரான்டடுகள்

அனைவருக்கும் பார்த்துச்செய்ய
வீட்டுக்கொரு அம்மா
அம்மா மட்டும் பார்த்துக்கொள்ள
வீட்டுக்கொரு ஜிம்மி

அம்மாவும் ஜிம்மியும் ஒரேவகையில்
இருக்கும் வரை உதாசீனப்பட்டும்
போனபிறகு அங்கலாய்ப்பாய்
பேசப்பட்டும்

வண்டியில் மாட்டிய ஜிம்மி
கூழாய் போனபோது
கதறித்தீர்த்தார்...
அக்கா ஓடிப்போனபோது
"ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்"
என்றதோடு நின்ற அப்பா

இப்பொழுதும் போகிறது வாழ்க்கை
ஆளுக்கொரு அறையிலும்
அதில் டிவியும் ஃபோனுமாய்

வெட்கமாகத்தான் இருக்கிறது
ஜிம்மியைபற்றி கவிதையெழுதி
பெயர் வாங்கவும்

கருத்துகள்

  1. உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. உங்க கவிதை ஒவ்வொண்ணா படிச்சிக்கிட்டே வரேன். இன்னைக்கு தான் உங்க பதிவு படிக்கவே ஆரம்பிச்சுருக்கேன். எல்லாமே அருமையான பதிவுகள். ஜிம்மி கவிதை ரொம்பவே அருமை.

    //ஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும்
    ரெண்டுரூபாய் எலும்பும்
    சரிசம குதூகலம்..
    எங்களுக்கும் அதற்கும்..//

    இந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்.

    உங்கூட்டு ஜிம்மி மேரி எங்கூட்லயும் ஒரு மணிப்பய இருந்தான்.

    அன்பு காட்டுறதுல சில சமயம் தாயையும் மிஞ்சுவான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...