முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனுக்கி தேவை



பூவையர்க்கோர் விண்ணப்பம்...

அன்பாய் அணைத்து முத்தம் கொடுத்து
இதமாய் தட்டி எழுப்பிவிடவும்
எண்ணை தேய்த்து உடம்பு பிடித்து
தலையை அலசி குளித்துவிடவும்
துணிகளை துவைத்து உலர்த்தி மடித்து
காலையில் அனைத்தும் செட்டாய் வைத்தும்
வெண்ணிற சோறு கோழி வருவலை
நாக்குக்கு ருசியாய் பொங்கிப்போடவும்
குறுக்கிடாமல் நான் பேசக்கேட்டும்
கேட்கும்போது மட்டும் பேசியும்
வாரஇறுதி தம்மு தண்ணியை
புலம்பல் இன்றி மகிழ்வாய் ஏற்றும்
அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
மாமா மாமியை அண்டவிடாமலும்
எனக்கு மட்டும் அழகாய் தெரிந்தும்
இரவின் ஆட்டத்தை சொல்லி மகிழ்ந்தும்
தினப்படி செலவை சொல்லாமல் மறைத்தும்
கூடி வாழவோர் அனுக்கி தேவை...
அகவை ஒரு இருபதுக்குள்...

ஒரு கூடுதல் தகவல்...!
மேற்தகுதிகள் இருப்போர் சமமாய் வாழ
அனுக்கன் தேட எண்ணம் இருக்கும்
அப்படியொருவன் உலகில் இல்லை..
தேடுதல் அலைச்சல்... கால விரையம்...
அரிய வாய்ப்பு... மகிழ்வுடன் ஏற்பீர்...!

கருத்துகள்

  1. காருக்கு விளம்பரம் கொடுக்கலாமா வேண்டாமான்னு தயங்கி தயங்கி கொடுத்துட்டு இங்க பாத்தா....

    உண்மையிலேயே உலகம் ரம்ப பெர்சு மாமே :-)

    பதிலளிநீக்கு
  2. மூக்கன் சார்...

    காரு வாங்கத்தான் குழம்பனும்... இதுக்கெல்லாம் ஒரு கொழப்பமும் வராது... :)

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. இளவஞ்சி!

    உங்க பேர் நல்லா இருக்குங்க!. கவிதையும் நல்லாத்தான் இருக்கு..., நீங்க கேட்ட எல்லாம் கிடைக்கும், உகாண்டாவில போய் நம்ம மொழியே தெரியாத பொண்ண எடுத்திங்கன்னா., அதுவும் கூட,

    அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
    மாமா மாமியை அண்டவிடாமலும்

    இந்த 2 வரிக்கு ஒத்து வராது... ஏன்னா எந்த நாட்டிலயும் பெத்தவங்கள அண்ட விடாத பெண்கள் கிடைக்கமாட்டாங்க!... பெத்தவங்களையே அண்ட விடாதது... நம்ம தலையில அண்டாவத்தான் போடும்! எனவே உங்க வரிகளைத்தான் இதுக்கு பதிலாத்தரணும்.

    அப்படியொருத்தி உலகில் இல்லை..
    தேடுதல் அலைச்சல்... கால விரையம்...!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...