முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீண்டும் தினமலர்! - ஒரு நெருடல்

இன்றய(23-03-05) தினமலரில்(www.dinamalar.com) "இது உங்கள் இடம்" பகுதியில் சி.ராதாகிருஷ்ணன் என்பவர் "தமிழை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்?" என்ற தலைப்பில் எழுதியதில் ஒரு பகுதி.

"சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.அதே போல தமிழ் சினிமாக்கள் பெயரில் மட்டும் தமிழாக மாறினாலும், உள்ளே கற்பழிப்பு, ஆடை அவிழ்ப்பு, ஆபாசம், வன்முறை, விரசம் என்று கதைக்கு பதிலாக சதை தான் வீறு நடை போடும்."

முகச்சவரமும் கற்பழிப்பும் ஒன்றா? ஒப்பிட்டு எழுத வேறு உதாரணமே இல்லையா? இதில் நான் சாதியை இழுக்கவில்லை. ஆனால் ஒரு தொழிலை இப்படியா கேவலப்படுத்துவது? இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா?

கருத்துகள்

  1. கண்டிக்கதக்கது.

    //இதில் நான் சாதியை இழுக்கவில்லை.//

    நல்ல வேளை disclaimer போட்டீங்க. இல்ல சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு நம் வாசக கண்மணிகளால் இங்கே திரும்ப சாதி இழுப்பட்டிருக்கும்.

    //இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா? //

    தினமலர் ஆசிரியர்கிட்ட கேட்கிறீருங்களா? :-)

    பதிலளிநீக்கு
  2. ஒரு உதாரணத்துக்கு அப்படி சலூன்னு சொல்லீருக்கரு பா ! பாவம் மன்னிச்சு உட்டுடுங்கோ

    சங்கு மணி

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தினமலருக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கேன்!

    பதிலளிநீக்கு
  4. இளவஞ்சி, ராதாகிருஷ்ணன் ஏதோ ஒரு சாம்பிள்க்கு போட்டுருகார்ன்னு நெனைக்கிறேன். பாவம் விடுங்க.

    வேணுன்னா இப்படி வெச்சுக்கலாம், "ஆர்.டி.ஓ ஆஃப்பீஸை வட்டார போக்குவரத்து அலுவலகம்ன்னு மாத்தினாலும் கூட அங்கெ லஞ்ச லாவண்யம் குறையவா போகுது?"

    இது எப்படி இருக்கு? ஓகேயா? :-)

    எம்.கே

    பதிலளிநீக்கு
  5. indhu onnum perisa alattikka vendiya vishayamillai enbadhu ennoda thazhmayana karuthu.....

    Thirumalaisamy

    பதிலளிநீக்கு
  6. ஒண்ணுமில்லாத விஷயம். ஒரு உதாரணத்துக்கு சொல்லி இருக்காங்க. வேற எதாவது சொல்லி இருக்க கூடாதான்னா, அதை சொன்னா மட்டும் சரியான்னு கேட்க ஆட்கள் வருவாங்க.

    இதை எல்லாம் பரபரப்பாக்காம இக்னோர் பண்ணுங்க ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  7. வாத்தி, மீண்டும் ஒரு முறை படிச்சேன். வேண்டாம் சாமி, இந்த பதிவை எடுத்திடுங்க. ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  8. மக்கா இளவஞ்சி

    சாதி சமாச்சாரமெல்லாம் ஒரு பக்க்ம் இருக்கட்டும். 'சலூனை சவரக்கடைன்னு மாத்துனாலும் உள்ள நடக்குறதுதானே நடக்கும்'னு எழுத வச்சு, 'தமிழ்ல பேரு மாத்துறதெல்லாம் வெட்டி வேலைப்பா'ன்னு ஒரு பொதுவான கருத்தியலை அப்படியே உள்ள புகுத்துற்தை கவனிக்கலையா?

    சத்யமேவ ஜெயதேன்னாதான் நமக்கெல்லாம் உறைக்கும். சத்தியமே வெல்லும்னா எவன் கேக்குறான்?

    சாத்தான்குளத்தான்

    பதிலளிநீக்கு
  9. அப்போ, தினமலரெல்லாம் வாசிச்சிக்கிட்டு இருக்கீங்க ..?!

    பதிலளிநீக்கு
  10. நண்பர்களே வருகைக்கு நன்றி!

    யாருமே தேதியை கவனிக்கவில்லையா?!

    இது 2 வருசத்துக்கு முன்னாடி எழுதுனது. இன்னைக்கு புதுசா எழுதுனது இது.

    காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்...

    "இடுகைகளைப் புதுப்பிக்க" பகுதியில் என் பிளாக் அட்ரசை குடுத்தா அது பழசையெல்லாம் தோண்டுது. :)

    இகோ, இது இன்னைக்கும் சரி அன்னைக்கும் சரி.. பரபரப்புக்காக எழுதலை... இனிமே தூக்கி என்ன ஆகப்போகுது? இருந்துட்டு போகட்டுமே! :)

    பதிலளிநீக்கு
  11. 'வாசகர் பகுதி' என்பது தினமலரைப் பொறுத்த அளவில் அதன் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகும். ஆகையால் இதை எதோ வாசகர் கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். தின மலத்தின் கருத்து தான் அது.! இன்றைகு அடித்துக் கொண்டும், ஊத்திக் கொடுத்து ஆள் பிடித்துக் கொண்டும் இருக்கும் காலைக்கதிரிலும், தினமலரிலும், ஒரே கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிப்பட்டதே நினைவிருக்கிறதா?

    சரி, அது கிடக்கட்டும்...
    அடப் பாவிகளா? இப்பத்தான் பார்க்கிறேன்... இது 2005-ல எழுதின பதிவா? சரி...சரி... விசயத்துக்கு வருவோம்.

    //சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.//
    சரிங்க வெண்ணைகளா... சவரக்கடைங்கிறதை சலூன்-னு சொன்னாலும், அங்க முடிவெட்டுதலும், முகமழித்தலும் தானடா நடக்கப்போகிறது. விளங்காதவங்களா?

    எடுத்துக்காட்டுக்கு அவர்கள் காட்டிய தொழில், முடிதிருத்தும் தொழில் என்று நல்ல எண்ணத்தோடு எடுத்துக் கொள்வோம்.ஆனாலும் ஏற்கனவே ஒருமுறை 'தினத்தந்தி' பேப்பரைக் காட்டி, இது சவரம் செய்த நுரையைத் தேய்க்கத்தான் லாயக்கு என்ற பொருளில் விளம்பரம் எடுத்து, வாங்கிக் கட்டிக்கொண்டதும், இன்னுமொருமுறை முடிதிருத்துவோர் குறித்து எழுதி, வாங்கிக்கட்டிக்கொண்டதும் நினைவுக்கு வந்துவிடுகிறது.

    (இப்பின்னூட்டம் தனிப் பதிவாக இடம்பெற்றுள்ள இடம்:
    http://princenrsama.blogspot.com/2007/05/blog-post_23.html)

    பதிலளிநீக்கு
  12. //சாதி சமாச்சாரமெல்லாம் ஒரு பக்க்ம் இருக்கட்டும். 'சலூனை சவரக்கடைன்னு மாத்துனாலும் உள்ள நடக்குறதுதானே நடக்கும்'னு எழுத வச்சு, 'தமிழ்ல பேரு மாத்துறதெல்லாம் வெட்டி வேலைப்பா'ன்னு ஒரு பொதுவான கருத்தியலை அப்படியே உள்ள புகுத்துற்தை கவனிக்கலையா?
    //
    தொழிலை இழுத்ததை விட இது தான் கண்டிக்க வேண்டிய கருத்துத் திணிப்பு

    பதிலளிநீக்கு
  13. PRINCENRSAMA,

    வருகைக்கும் ஆதரப்பூர்வமான உங்கள் நீண்ட பதிலுக்கும் நன்றி!

    அண்ணாச்சி, ரவிசங்கர்,

    நீங்க சொல்லறது சரிதான்!

    இந்த வாசகர் கடிதம் எழுதப்பட்டதே ஏன் அனைத்து வார்த்தைகளையும் தூயதமிழில் மாற்றவேண்டும் என்ற கேள்வியோடுதான்! பா.ம.க பெயர்ப்பலகைகளை மாற்றிய காலத்தில் எழுதப்பட்டது. சரி! அவரவருக்கு அவரவர் கருத்து! ஆனால் சவரக்கடையை கொலை கொள்ளை கற்பழிப்போடு தொடர்புபடுத்தி எழுதியது உறுத்தியதாலேயா அந்தக்காலத்தில் போட்ட பதிவு.

    இந்த வாசகர் கடிதத்திற்க்கான சுட்டி கிடைத்தால் சேர்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. கொத்தனார் மட்டும் தினமலத்திற்கு சப்போர்ட்.ஸ்ஸ்ப்பா கல்லறைக்கே போனாலும் :))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...