முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்

ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு ஆசைங்க! அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா?”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற! இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது?! அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க? எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான்! :)

அதனால இந்தமுறை வெவரமா குலசைல தசரா முடிஞ்சதும் நெல்லைல எறங்கி அரைக்கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி தின்னுக்கிட்டே மதுரைக்கு வந்து தனியா எறங்கிட்டேன்! என்னமாதிரி வயசுப்பையன் மதுரலை தனியா சுத்தறது டேஞ்சருன்னாலும் அழகிரி நாட்டுல ஒன்னும் நடந்துறாதுங்கற நம்பிக்கைல துணிஞ்சு என்னோட வலதுகாலை வைச்சாச்சு. அப்படியே காலேஜ் ஹவுஸ் தாண்டுன ரெண்டாவது ரெட்டுல ஒரு ச்ச்ச்சின்ன கடைல நாலு இட்லி, ஒரு முட்டைதோசை, கல்தோசை, ஒரு ஆம்லேட் வித் நாலு சட்னி, அரைலிட்டரு கொழம்போட கொழப்பியடிச்சுட்டு ரூமெடுத்து செட்டில். அப்பறம் ஒருநாள் பூரா மேலே சொன்ன பரதேசி வாழ்வுதான் :)

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குணநலன் இருக்குங்க! சென்னைய தவிர்த்து வேற எங்க சுத்துனாலும் 100 கிலோமீட்டருல நடையுடைல இருந்து பேச்சுவழக்கு வரைக்கும் வித்தியாசம் பார்த்துறலாம். அதென்னவோ மதுரை ரொம்ப புடிச்சுப்போனதுக்கு காரணம் இதுவரைக்கும் எல்லா வேளையும் வஞ்சனையில்லாம சாப்பிட்ட ஒரு காரணத்துக்காகவே இருக்கலாம் :)

கோவில்லயும், கடைத்தெருவுலயும் எங்கனா ஓரமா ஒக்கார்ந்துக்கிட்ட போற வர்றவங்களைப்பார்க்கறதே பெருஞ்சுகம். சாயந்தரம் வரைக்கும் பொழுதை ஓட்டிட்டு அப்பறம் ஒருநாளைக்கும் மேல யாருகூடவும் பேசாமா இருந்தா எனக்கு பைத்தியம் தெளிஞ்சிரும்னு பயந்துக்கினு மணப்பாறைக்கு எஸ்கேப்பிக்கினேன். மக்களைப் படமெடுக்க மிகச்சிறந்த இடம் மீனாட்சி கோவிலுங்க. அப்படியே கோவிலுக்குள்ளயே சுத்திக்கிட்டே இருந்தா கண்டிப்பா பல நல்ல படங்கள் எடுக்க வாய்ப்புண்டு. அதுல சிலதுக இங்கே! ( அதாவது இதெல்லாம் நல்ல படங்களாம்! எப்பூடி?! :) )

வழக்கம்போலவே, பிடித்தவைகளை பெரிதாகப் பார்க்க படத்து மேல ஒரு க்ளிக்கு போடுங்கப்பு!

மேற்கு வாயிலில் இருந்து வடக்கு கோபுரம். கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!





வடக்கு கோபுரம்






தெய்வீகப் பயணம் - Zoom Burst முறையில் எடுத்தது. செம எபெக்ட்டுங்க!




திருவள்ளுவரும் திருக்குறளும்



தெய்வத்துக்கும் எனக்குமிடையேயான வழக்கு!



நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள்



குரூப்பு போட்டோகிராபி! மதுர மண்ணுக்கு வந்துட்டா மட்டுந்தேன் இது முடியும் போல! :)





பார்வையற்ற பிரார்த்தனைகள்




ஆஞ்சநேயரின் அருள்பாலிப்பு





மதுரை நாயக்கர் மாகால்


கருத்துகள்

  1. //ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க//

    எனக்கும் இதே ஆசை அப்படியும் ஒரு சந்தர்ப்பம் ஜுலை மாசம் அமைஞ்சு நீங்க சுத்தின கோவிலை சுத்தி சுத்தி வந்து மாஞ்சு மாஞ்சு போட்டோ எடுத்தும் பத்திரமா வைச்சிருக்கேன்! -அம்புட்டு திருப்தியா இல்ல எதோ கோளாறு :))

    ஜூம் பர்ஸ்ட் இமேஜும் அப்புறம் தரையில குந்திக்கிட்டு கோபுரம் டோட்டலா கவர் பண்ணியிருக்கிற இமேஜும் (வடக்கு கோபுரம்?!) அட்டகாசம் :))

    பதிலளிநீக்கு
  2. வாத்தி

    ஊரு ஞாவகத்தை கிளப்பிவிட்டுட்டீங்களே!

    உங்களைப் போல் படங்களும் அழகு

    பதிலளிநீக்கு
  3. தல .... படங்கள் அருமையா இருக்கு .... கேமரா என்ன மாடல் வெச்சிருக்கீங்க ??

    பதிலளிநீக்கு
  4. இந்த ஊர்கார பயபுள்ள (மாப்பி ராம்) வரதுக்குள்ள நான் வந்துட்டேன் போல ! ? ;)

    பதிலளிநீக்கு
  5. ஆசானே..என்ன இப்பவே ஆன்மீக பயணம் எல்லாம்!! ;))

    எல்லாமே தூள்

    \\நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள்\\

    இது எல்லாத்தையும் விட தூள் ;))

    பதிலளிநீக்கு
  6. எங்க ஊரு கோயில அருமையாப் படம் எடுத்திருக்கீங்க. ஒவ்வொரு படமும் சும்மா பட்டையக் கிளப்புது.

    பதிலளிநீக்கு
  7. அனைத்து படங்களும் டாப்பு !

    //கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்! //
    நீங்க காமிராவ சாச்சு புடிச்சு இருக்கீங்க அதான் ;)

    பதிலளிநீக்கு
  8. //கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்! //

    தெரியல ஆசானே!?

    வழக்கம்போல பேச்சுல அரைகிலோ நக்கல் கூட இருக்கறதோட போட்டோவுக்கு கொடுத்திருக்கும் கமெண்டுகளும் அருமை..

    Zoom Burst முறையில் எடுத்த படம் அருமை. நான் ஏதோ கோயிலுக்குள்ள ஓடுன எஃபெக்ட் வந்துடுச்சு..

    பதிலளிநீக்கு
  9. படமும்சரி கமேண்டுஞ்சரி ரொம்ப நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  10. ஆயில்யன்,

    // அம்புட்டு திருப்தியா இல்ல எதோ கோளாறு // அடடா... வலைல ஏத்துங்க. நம்ப மக்கா நல்லதோ கெட்டதோ பார்த்துசொல்லட்டும். பின்ன எப்படி நாம தொழில் பழகறது?! :)

    முத்துகுமரன்,

    /// உங்களைப் போல் படங்களும் அழகு// அதானே. மதுரக்காரவிங்களுக்கு மண்ணை விட்டு தள்ளி இருந்தாலும் அந்த நக்கலு மட்டும் அப்படியே! :)

    சம்பத்,

    Nikon D80 + 18-200VR

    கோபி, அமல், நேசமித்திரன்,

    தொடர்ந்த ஊக்கங்களுக்கு நன்றி! :)

    நாதஸ், சென்ஷி,

    // நீங்க காமிராவ சாச்சு புடிச்சு இருக்கீங்க அதான்//

    அடடா எப்படிங்க?! நானே ச்சும்மா ஒரு உதாரு விட்டா நீங்க எனக்குமேல இருபீங்க போல! :)

    கோபுரத்துக்கு முன்னாடி இருக்கற சிலையை ஹரிசாண்டலா வைச்சு எடுத்தேன். அதாவது வித்தியாசமான கோணத்துல பார்க்கறாம்!

    அதான் டெக்குனிக்கு ஹிஹி...

    பதிலளிநீக்கு
  11. நல்லாருந்துச்சு படங்கள்!!

    /
    குரூப்பு போட்டோகிராபி!/

    வாய் விட்டு சிரித்துவிட்டேன்! :-))

    பதிலளிநீக்கு
  12. தெய்வீகப் பயணமும், மஹாலும் அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
  13. அந்த மஹால் படம் மிக அருமை
    பதிவிற்கு நன்றி.
    பதிவுலகிற்கு நான் புதியவன்.

    பதிலளிநீக்கு
  14. நம்பிக்கை ஒளிக்கீற்று படம் அருமை. நம்ம மீனாக்ஷி அம்மன் கோவிலின் அழகு மிளிர்கிறது உங்கள் படங்களில்.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அருமை இளவஞ்சி.. முக்கியமாக கோபுரமும், நாய்க்கர் மஹாலும் அசத்தல்.

    பதிலளிநீக்கு
  16. நாயக்கர் மாஹால் படம் ரொம்ப அழகு
    எல்லாமே கலக்கலான படங்கள்

    பதிலளிநீக்கு
  17. வாவ்! ரொம்ப ரொம்ப அற்புதமாய் எடுத்திருக்கிறீர்கள். இந்த அளவுக்கு இருக்காது என்றாலும் மதுரைப் படங்கள் சில இங்கே:)!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...