முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளவஞ்சியின் தத்துவமுத்துக்கள்


Image hosted by Photobucket.com


1. வாழ்க்கைல யாரோ ரெண்டுபேரு மட்டும் அப்படி இப்படி புரட்டிட்டு மடிப்பு களையாம அலமாரிக்குபோற Hindu பேப்பரா இல்லாம காலைல இருந்து சாயந்தரம் வரை வர்றவங்க போறவங்க படிச்சு படிச்சே கிழிஞ்சிபோற டீக்கடை தினத்தந்தியா ஒரு 4 பேருக்கு உபயோகமா இருக்கறது எவ்வளவோமேல்!

2. ஆண்டவன் கெட்டவங்களுக்கு விதவிதமா பேண்ட் குடுப்பாரு. ஆனா பெல்ட்டு குடுக்காததால அடிக்கடி அவுந்துடும். நல்லவங்களுக்கு ஒரே ஒரு அண்டர்வேரு தான் குடுப்பாரு. இறுக்கமா கட்டிக்கறதுக்கு நாடாவோட! (எங்கயோ கேட்டமாதிரி இருந்தா நான் பொறுப்பல்ல!)

3. நகர வாழ்க்கைல பிஸ்சாவும் ஃபாஸ்ட்புட்டும் சாப்டுட்டு அடுத்தநாள் காலைல நியூஸ்பேப்பரையோ குண்டு புக்கையோ எடுத்துகிட்டு போய் ஒன்னரை மணிநேரம் முக்கியும் தோல்வியடையறவனைவிட, கிராமத்துல கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு விடிகாலைல போறபோக்குல காட்டுல கக்காபோறவந்தான் குடுத்துவச்சவன்!

4, காலங்காத்தால கார் எடுத்துகிட்டு 10 கிலோமீட்டர் தூரம் பீச்சுக்கு போய் அங்க ஒரு கிலோமீட்டர் நடக்கறதுக்கு, வீட்டசுத்தியே ஜிம்மிய கூட்டிகிட்டு 4 ரவுண்டுவர்றது ஜிம்மிக்கும் நல்லது. நம்ம மணிபர்சுக்கும் நல்லது,

5. நல்ல வேளை! நாம எல்லாம் இந்தியால பொறந்தோம். ஒரு ஃபிகர தேத்தி லவ் பண்ண துப்பு இல்லன்னாலும் ஒரு வயசுக்குமேல அப்பாம்மாவே ஒரு புள்ளய பார்த்து கல்யாணம்பண்ணிவச்சிடறாங்க. இதே நாம அமெரிக்கவுலயோ லண்டன்லயோ பொறந்திருந்தா நெலமைய நெணச்சுப்பாருங்க..! நம்ப மூஞ்சிக்கும் பர்சனாலிட்டிக்கும் என்னைக்கு ஃபிகர்மாட்டி செட்டில் ஆகறது??

6. கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளையயையும் பொண்ணையும் நல்லா பாருங்க! அவரு மொகம் நெறஞ்ச சிரிப்போட இருப்பாப்ல. பொண்ணு கேவி கேவி அழும். தம்மு தண்ணி அடிக்கறவங்க அந்த பழக்கத்தை நிறுத்தும்போது பார்த்திருக்கீங்களா? ஃபில்டரு தீயறவரைக்கும் வாய்சுட இழுப்பாங்க! கடைசிசொட்டு வரைக்கும் உறிவாங்க!! கடைசியா ஒன்ன செய்யும்போது புல்லா அனுபவிச்சிசெய்யனும். அதுக்குதான்.

7. பொண்டாட்டியா வர்றவகிட்ட அழகு மட்டும் இருந்தா போதும் நெனைக்கறவன் நெலம 1000 ரூபா செருப்பு வாங்குனவன் நெலமதான்! பத்திரமா பாத்துக்கறதுலயே வாழ்க்கை போயிரும்.

இன்னைக்கு இதுக்கு மேல சிந்திக்க முடியலைங்க... மிச்சத்த நாளைக்கு வச்சிப்போம்!

கருத்துகள்

  1. அடடா!
    என்ன தத்துவ முத்துக்கள்?
    இடைக்கிடை இப்பிடி எழுதவும்.

    பதிலளிநீக்கு
  2. வசந்தன், சுரேஷ்,

    கருத்துக்களுக்கு நன்றி. இதை எழுதுனதுக்காக எனக்கு யாரவது சாகித்திய ஆகாடமி குடுக்கறதா இருந்தாகூட முன்னாடியே சொல்லிடுங்க. அப்பதான் ஒரு நாலு பேர வர்ணமா.. அடச்சீ.. வண்ணமா திட்ட வசதியா இருக்கும்!

    ஹிஹி..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...

அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்

இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு. கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு. என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அம...