முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை!

Source: http://www.bigbrother.net/~heather/pictures/ButterflyArt1.gif

பேசுவதே புரியும் பொழுது
முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு

விடுமுறையில் தூதாக
பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா
எனக்கேட்டு அனுப்பிய
பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்

என்னைவிட மாநிறமா
எனக்கையோடு கையொற்றி
முதன்முதலில் தொட்டபொழுது
முன்உணராத பட்டாம்பூச்சிகள்
என் அடிவயிற்றில்

பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் பறக்கவிட்ட
விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
நீலம்தெளித்த பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான்
கலவிக்கொண்டே பறக்குமென
நீ சொன்னதை உணர்ந்ததினம்
நம் கலவியின் உச்சகணம்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
பட்டாம்பூச்சிகளுக்குள்
பிரிவுத்துயர் இல்லையென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி முத்தம்

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை

கருத்துகள்

  1. ம்ம்...ம்..ம்
    வீட்டம்மாவுக்கு என்று தனியா ஒரு பொழிப்புரை தயார்தானே..?

    பதிலளிநீக்கு
  2. கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.

    அதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  3. கவிதை சூப்பர், போட்டோவும் அருமை.

    அதையெல்லாம் விட, தருமியின் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  4. பிரிவின் கனம்
    உண்மையின் வேதனையினை உணர்த்தும் கணம்

    உணர்வுகளின் வலி
    காணும் காட்சிகளிலும் தொடரும்
    தன் பதிவினை நிகழ்த்தி
    தவிர்க்கவே இயலாதபடி

    கவிதை நன்று இளவஞ்சி

    பதிலளிநீக்கு
  5. தருமி, சுரேஷ், எல்லோரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.. ஆஹா... ஒரு குரூப்பாத்தான் அலையறாய்ங்கப்பா...

    மதுமிதா, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நல்ல நிழற்படம். இளவஞ்சி உங்கள் பதிவின் urlஐ தினமலரில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... அவிங்க என்னையும் விட்டுவைக்கலையா?? :)

    தகவலுக்கு நன்றி பத்மா அரவிந்த்!

    பதிலளிநீக்கு
  8. :-) தவறே செய்யா பட்டாம்பூச்சிகளின் மேல் கோபமா ..

    கவிதைத்துவமான சிந்தனைதான்...

    பதிலளிநீக்கு
  9. இளவஞ்சி கலக்கியிருக்கீங்க...... எப்படிய்யா உம்மால மட்டும் முடியுது..... ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  10. கவிதை அருமை இளவஞ்சி.

    தியாகராஜன் (THYAG)

    பதிலளிநீக்கு
  11. இனிமை . நன்று 11G அவர்களே ...:)
    shivatma

    பதிலளிநீக்கு
  12. //விடுமுறையில் தூதாக
    பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா

    பிறந்தநாள் பரிசென
    நீ பிடித்துவந்து
    நாம் பறக்கவிட்ட
    விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த
    நீலம்தெளித்த பட்டாம்பூச்சி


    சிலநாட்களே வாழ்ந்துமடியும்
    பட்டாம்பூச்சிகளுக்குள்
    பிரிவுத்துயர் இல்லையென
    விட்டுச்சென்ற கசந்த
    அந்த கடைசி முத்தம்

    மன்னிக்கவும்,
    நான் இப்பொழுது
    பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//

    மேலே உள்ள வரிகள் நன்று. ரொம்ப ரசிச்சேன்

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அருமை. உங்கள் வலைப்பூவை தினமலரில் பிரசுரித்துள்ளோம். இரண்டாம் பக்கம் வெளியாகி உள்ளது. தினமலர் வெளிநாடுகளில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இன்டர்நெட்டிலும் நீங்கள் அதைப் படிக்கலாம்.
    http://www.dinamalar.com/2005oct07/flash.asp

    தினமலர், மதுரை.

    பதிலளிநீக்கு
  14. மக்களே! உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    shivatma - 11G யா? சீக்கிரமே உங்களுக்கு Dr & திருமா சந்திப்பு அமையக்கடவது! :)

    Nagarathinam,

    பிரசுரித்தமைக்கும் தகவலுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  15. //நான் இப்பொழுது
    பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை//
    இறுதிவரியில் கவிதையின் உச்சம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...