முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் வலைப்பதிவாளர்கள்/எழுத்தாளர்கள் சந்திப்பு!!!

வலைப்பதிவர் சமுதாயமே! வலைத்தமிழின் வாழ்விடங்களே!!

அலைகடலென திரண்டு வாரீர்!!
Photobucket - Video and Image Hosting



நேரங்காலம் :
தேதி 9 ஜூலை ஞாயிறு காலை நேரம் 10 மணிக்கு

சந்திக்கும் இடம்:
லால்பார்க்கில் மெயின்கேட்டைத் தாண்டி உள்ள மொட்டைப்பாறைக்கு முன்னால் (சொன்னமாதிரியே சூட்கேசுடன் வந்துடுங்க!
கோட்வேர்டு: தீப்பெட்டி-கருப்பட்டி-வெறும்பொட்டி )

நிகழ்ச்சி நிரல்

வரவேற்பு உரை :ஷக்திப்ரபா

தமிழ் வணக்கம் பாடல் :ஷைலஜா

வந்தவர்களைப் பற்றிய அறிமுகம் :அவரவர்களே!

விருந்தினர் அறிமுகம் :ஐய்யப்பன் (Jeeves)

விருந்தினர் உரை :திலகபாமா

வலைப்பதிவாளர்கள் உரை :அனைவரும் தங்கள் வலை அனுபவங்களைப் பற்றி பேசுதல்

உருப்படியான ஒரு செயல் திட்டம் :தேடல் எனும் தலைப்பிலும் பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றினைப் பற்றியும் 3 நிமிடக் கவிதைகள் எழுதிக் கொண்டுவந்து விருப்பமுள்ளோர் வாசிக்கலாம்

மதிய உணவு : ( ஷைலஜாவின் கைவண்ணத்தில் ) 1 மணிக்கு (கண்டிப்பாக 1 மணிக்கு மட்டுமே! அதுவும் கோட்வேர்டு சரியாச் சொன்னவங்களுக்கு மட்டுமே! :) )

அப்பறம்?! :அரட்டை அல்லது விளையாட்டு (தூங்கப்படாது ஆமா!!)

நன்றிஉரை: நண்பர்களில் யாராவது

நடுநடுவுல கொறிக்கறதுக்கு அவங்கவங்க ஏதாவது வாங்கிக்கிட்டு வந்துருங்கப்பு. செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயலாம். கோக்கு பாண்டா அலவ்டு! சோமசுரா பானங்களுக்கு தடா! (மனம் தளராதீங்க! இளஞ்சிங்கங்களே! நன்றி உரைக்கு அப்பறம் விருப்பப்பட்டவுக தனியா கழண்டுக்கலாம்! :) )

பங்கேற்பாளர்கள்:

இதுவரை வர்ரேன்னு சொன்னவங்க சுட்டிகள். லைட்டா எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துக்கிட்டு வந்துட்டீங்கன்னா நிறைய ஹிஹி க்களை தவிர்க்கலாம்! விடுபட்டவர்கள் இங்கே ஒரு பின்னூட்டம் போடுங்க! அல்லது மின்னஞ்சல் போடுங்க - iyappan_k@yahoo.com.

Kongu Rasa --- http://raasaa.blogspot.com
Iyappan --- http://iyappan.blogspot.com, http://kaduveli.blogspot.com, http://payananggal.blogspot.com ( Shared with ilavasakoththanar )
Viziyan(Umanath Selvan ) --- http://vizhiyan.wordpress.com, http://vizhiyan.wordpress.com
Vibagai --- http://www.manidham.com, http://www.rajfm.com, http://vibagai.blogspot.com
Ravindaran Antony --- http://tvpravi.blogspot.com ( Senthazal Ravi)
Udhay --- http://soundparty.blogspot.com
Sudharshan Gopal --- http://konjamkonjam.blogspot.com
Ilavanji --- http://ilavanji.blogspot.com
Thilagabama --- http://mathibama.blogspot.com
Maravandu ganesh --- http://ilakkiyam.wordpress.com
Balasundaram --- http://ta.wikipedia.org ( some part of aRiviyal part )
Harikrishnan --- http://www.harimozhi.com
Ramachandiran --- http://raamcm.blogspot.com
Lalitha Ram --- http://classical-music-review.blogspot.com
Desigan --- http://www.desikan.com/blogcms
புகைப்படம்: போன மாதம் லால்பார்க் போனபோது எடுத்தது...

கருத்துகள்

  1. பத்து மணிக்கு நீங்கெல்லாம் போயிடுங்க.. நான் கரெக்ட்டா 'ஒரு' மணிக்கு வந்து நம்ம கடமைய செவ்வனே ஆற்றிடுறேன்.. :)

    கோட்வேர்ட் இப்பவே சொல்றேன் : *பெட்டி-*பட்டி-*பொட்டி

    பதிலளிநீக்கு
  2. அது சரி, கடலலை என திரண்டு வாரதுக்கு ஒங்க ஊர்ல கடல் இருக்கா..

    ஹூம்.. பணக்கார ஊர்.. மதியம் சாப்பாடெல்லா போடறீங்க.. இங்க வெறும் போண்டா காப்பிதான் அதுவும் டட்ச் ஸ்டைல்..

    டோண்டு சார்..பாருங்க.. ஏதாச்சும் செய்ங்க சார்.. மானம் போவுது!

    பதிலளிநீக்கு
  3. http://sandanamullai.blogspot.com, - சுதர்ஷனோட நட்பு வட்டம் யாரோ எழுதறதுன்னு நினைச்சேன்.. அவரே தான் எழுதறாரா?

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் நல்லபடி நடக்க எனது வாழ்த்துகள். நாந்தான் வர முடியாது. அதுனால என்ன....நெனப்பெல்லாம் அங்கதான் இருக்கும். பெங்களூரும் எங்களூர் ஆயிற்றே.

    நண்பர்கள் அனைவரும் கலந்து மகிழ்ந்து உறவாடக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஒற்றுமையும் ஒத்துளைப்பும் எங்கும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. இடம், கடவுச்சொல்,வருகைதருவோர் பட்டியல்.....கைவண்ணம் எல்லாம் சொன்னீங்க.நன்றி
    அப்படியே பக்கத்தில் உள்ள மருத்துவ மனைகள்(குறிப்பா ENT specialists)
    பட்டியலும் கொடுத்திருக்கலாமுல்லே!
    சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்!
    மாநிலங்கள் அளவிளான சந்திப்புகள்
    நிகழ்வதற்கு இச்சந்திப்பு வழிகோலட்டும்

    பதிலளிநீக்கு
  6. ஜோசப் சார், சாப்பாட்டை விடுங்க.. அந்தச் செயல் திட்டத்தைப் பாருங்க!! இன்டரெஸ்டிங்கா இருக்கு.. :)

    இளவஞ்சி, கோட்வர்ட் எனக்கும் தெரிஞ்சிடுச்சு... ;) சரி, வர்றவங்க லிஸ்டைப் பார்த்தா, நீங்க அங்ஙனவே மரத்தடில உட்கார்ந்து க.க 7 ஆரம்பச்சிட மாட்டீங்க தானே! ;)

    பதிலளிநீக்கு
  7. //தமிழ் வணக்கம் பாடல் :ஷைலஜா//
    பாத்துங்க, கன்னடத்துக்காரங்க கும்மாங்குத்து குத்திடப் போராங்க.

    பதிலளிநீக்கு
  8. //அந்தச் செயல் திட்டத்தைப் பாருங்க!! இன்டரெஸ்டிங்கா இருக்கு.. :)//
    அது தாங்க எனக்கு பயமா இருக்கு.. ஆனாலும் 1 மணிக்கப்புறம் நிகழ்ச்சி நிரல் நல்லாத்தான் இருக்கும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். பொறாமையாகயிருக்கிறது.

    நல்ல புகைப்படங்களை (:-)) எடுத்து போடுங்க.

    பதிலளிநீக்கு
  10. ராசா,

    // 'ஒரு' மணிக்கு வந்து // என்ன மேன் வெளையாட்டு இது?! நீங்க இல்லாம அங்க யார் கவிதை படிக்கறது? :)

    ****
    ஜோசப் சார்,

    // கடலலை என திரண்டு வாரதுக்கு ஒங்க ஊர்ல கடல் இருக்கா..// ஹிஹி... இப்படி எங்களை மட்டும் கேளுங்க... உங்க ஊருல மீட்டிங்னு சொல்லிக்கிட்டு நாலே நாலு பேரு அதுவும் ஸ்டேஜ்ல மட்டும் ஒக்கார்ந்துக்கிட்டு இதையே சொன்னா கண்டுக்காம விட்டுருவீங்க! :)

    // மதியம் சாப்பாடெல்லா போடறீங்க.. // எல்லாம் ஷைலஜா மேடம் கருணை! :)

    ****
    ராசா,

    அது சுதர்சனது இல்லையாம்! எடுத்திட்டேன்!

    ****
    ராகவன் ஜீ,

    We miss you! :(

    பதிலளிநீக்கு
  11. தருமிசார்,

    ஆனாலும் இது அநியாயம்! மேல போட்டிருக்கற பெஞ்சுபோட்டோ போட்டோ மாதிரி இல்லையா?! :)

    ****
    sivagnanamji

    // அப்படியே பக்கத்தில் உள்ள மருத்துவ மனைகள் //

    சொன்னா சிரிக்கக்கூடாது! பக்கத்துல NIMHANS னு புகழ்பெற்ற மனநல மருத்துவமனைதான் இருக்கு! :)

    ****
    பொன்ஸ்,

    // கோட்வர்ட் எனக்கும் தெரிஞ்சிடுச்சு... //

    OK! உங்களுக்கு ஒரு பார்சல்! :)))

    க.க 7! இத வேற ஞாபகப்படுத்திட்டீங்களா! சரி விடுங்க! க்.க6 படி இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சு சந்தோசமா இருப்பாக! கொஞ்ச நாள் போகட்டும்! :)

    ****
    மகேஸ்,

    // கன்னடத்துக்காரங்க கும்மாங்குத்து குத்திடப் போராங்க. //

    விடுவமா?! எத்தன கைப்புள்ள படம் பார்த்திருக்கோம்! "என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு?!"ன்னு ஒரு பிட்ட போட்டுறமாட்டோம்?

    ****
    மோகன் தாஸ்,

    // நல்ல புகைப்படங்களை (:-)) //

    புரியுதுங்ங்! சிறிசுக அப்டீப்டி இருக்கறத எடுக்கச்சொல்லி எனக்கு பெண்டெடுக்காம விடமாட்டீக போல! :)

    பதிலளிநீக்கு
  12. நானும் கலத்துக்கலாமா இளவஞ்சி, வந்தாலும் மதியம் போலதான் வர முடியும். பரவாயில்லையா? ராசா மாதிரி 1 மணிக்கு இல்லே

    பதிலளிநீக்கு
  13. நான் வரப்பவும், இப்படியே ஒண்ணு அரேஞ்ச் பண்ணல.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

    பதிலளிநீக்கு
  14. annaa... elavasam.blogspot.com - athu ilavasakoththanaarthu
    ..

    payananggal thaan.. rendu perum sernthu ezutharathungannOv...

    பதிலளிநீக்கு
  15. இளா,

    // நானும் கலத்துக்கலாமா //

    யோவ்! உம்மைத்தான் நேத்துல இருந்து இதுக்காக வலை வீசி தேடறோம்!

    // வந்தாலும் மதியம் போலதான் வர முடியும் // சாப்பாட்டு நேரத்துக்காவது கரீட்டா வந்துங்க! :) முடிஞ்சா சுதர்சன்கோபாலை கூப்டு பேசுங்க!

    ****
    சுரேஷ்,

    உமக்கு இல்லாததா? உங்கூருல இருந்து வாறப்ப எங்களுக்கு ஆளுக்கு ஒரு ஐபோடு வாங்கிட்டு வந்தீங்கன்னா ஜமாய்ச்சிறலாம்! ஹிஹி... (இங்க புள்ளைங்க எல்லாம் காதுல மாட்டிக்கிட்டு போடற படத்துல எங்காதுல பொகை! )

    ****
    Jeeves,

    கொஞ்சம் டைம் குடுங்க.. மாத்திடறேன்! மத்தபடி எல்லாரு பேரும் இருக்கா?!

    பதிலளிநீக்கு
  16. யோவ் இன்னாங்கையா...நீங்களும் நடத்துறீங்களா...நாங்களும் நெல்லையில ஒரு சந்திப்பு நடத்துறோம்ல...:))

    பதிலளிநீக்கு
  17. டுபுக்குவோட முப்பெரும் விழாவுக்கு போட்டியா இது...ஒரு கோட்டரும் பிரியானியும் இல்லாம என்னாது இது..வாழ்த்துக்கள்... :-)

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் இளவஞ்சி

    நான் பெங்களூரை விட்டுக் காலி பண்ணினாப்புறம் சந்திப்பை வைக்கிறீர்களே, உங்களுக்கெ இது நியாயமா:-(

    பதிலளிநீக்கு
  19. நல்லாயிருங்கப்பூ......அடுத்த முறை நான் வரும் போது ஒண்ணு வையுங்க.

    பதிலளிநீக்கு
  20. டுபுக்ஸ்,

    // நீங்களும் நடத்துறீங்களா...நாங்களும் நெல்லையில ஒரு சந்திப்பு நடத்துறோம்ல //

    சந்தோசமுங்கண்ணா! பெங்களூரு வந்துட்டு அப்படியே நெல்லை போயிருங்க! (சால்னா பாக்கெட்ட மறந்துறாதீங்க! :) )

    ****
    ஷ்யாம்,

    // ஒரு கோட்டரும் பிரியானியும் இல்லாம //

    அண்ணாச்சி, அலைகடலென திரளச்சொன்னது உண்மைதான்! அதுக்காக அரசியல் மாநாடுன்னே முடிவு செய்யறதா?

    ****
    கானா பிரபா,

    அடடா! நீங்களும் இங்க இருந்தவுங்க தானா? அடுத்தமுறை வாங்க! ஜமாச்சிறலாம்.. :)

    ****
    இகொ...

    உங்களுக்கும் அதே அதே! :)))

    பதிலளிநீக்கு
  21. இங்கேயும் ஒரு பார்ஸல்:-))))
    ( ஒரு ரெண்டு பேருக்கு போதுமானது)

    பதிலளிநீக்கு
  22. Hello Illavanji,

    I am angry that you have not called me who leave comments in almost all the blogs. I am none other than Mr/Ms. Anonymous.

    பதிலளிநீக்கு
  23. துளசி கோபால்,
    // இங்கேயும் ஒரு பார்ஸல்:-)))) //

    உங்களுக்கு இல்லாததா?! ஆனா பார்சல் வந்து சேர்றதுக்குள்ள உங்க ஊர்க்காரங்க கண்ட்டாமினேட்டட் ஃபுட்னு இமிக்ரேசன்லயே தடுத்துற போறாங்க! :)

    ****
    அன்பு அனானி,

    யாரப்பா நீ? :)))

    இது ஒரு open அழைப்பு! பெங்களூருல இருக்கற யாரு வேனா வரலாம்! வர்றேன்னு இதுவரை சொன்னவுக சுட்டி மட்டும் இங்க போட்டிருக்கேன்!

    ஊர்ல இருந்தீங்கன்னா கட்டாயம் வாங்க!

    பதிலளிநீக்கு
  24. //தேடல் எனும் தலைப்பிலும் பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றினைப் பற்றியும் //
    பஞ்ச பூதங்களை சேர்த்து ஒரு கவிதை இங்கு இருக்கிறது ... சந்திப்பில் படிக்க விரும்புபவர்கள் பார்க்கலாம்

    http://govikannan.blogspot.com/2006/07/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  25. கோவி,

    // சந்திப்பில் படிக்க விரும்புபவர்கள் பார்க்கலாம் //

    தகவலுக்கு நன்றி!

    அப்படியே நீங்க ஒரு எட்டு வந்துட்டுப்போங்க! :)

    பதிலளிநீக்கு
  26. அய்யா Zebigleb,

    என்னருமை வெள்ளக்கார தொரையே!

    // It's a pity I'm not able to translate //

    என்ன வைச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே? :)))

    பதிலளிநீக்கு
  27. சந்திப்பு நல்லபடியா முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
    புடிச்ச படத்தையெல்லாம் சீக்கிரமே போடுங்க.
    இந்த நேரம் பாத்து நான் பெங்களூர்ல இல்லாம இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! :-(

    இளவஞ்சி, ஃப்ரான்ஸ்ல இருந்து வந்த ஆளுக்கு மறுபடியும் தமிழ்ல பதில் சொல்லிருக்கீங்களே! பாவம் இல்ல அவரு!?

    பதிலளிநீக்கு
  28. being absolutely ignorant about the software details....do tell about where the pic(from your bog homepage) can be got for my own self

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...