முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டயட்டு அட்ராசிடிஸ்!


அடல்ட் வாழ்வில் உடம்புக்கு திருப்தியா செய்யவேண்டியது உணவும் உடலுறவும்.


இதில் இரண்டாவது ஏற்கனவே நம்ப நாட்டுல கடும் வறட்சில ஓடிக்கிட்டு இருக்கு. கிடைச்சதையெல்லாம் இல்வாழ்க்கை சமூகசூழல் ஒழுக்கவிதி பொருளாதாரம் சாதிமத கட்டுப்பாடுகள்னு ஆயிரத்தெட்டு கொடைச்சல்ல கிடைச்சும் கிடைக்காத குற்றவுணர்வுல பொதுப்புத்தி ( அதாங்... பெரும்பான்மை )வாழ்க்கைய ஏற்கனவே மருகலில் ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இதுல முதலாவது உணவையும் குற்றவுணர்ச்சி தூண்டப்பட்டேதான் செஞ்சு அழியனுமா? சாப்பாட்டை சந்தோசமா அனுபவிச்சு சாப்பிடறதுல அப்படி என்னய்யா குற்றம்? வீகன் பேலியோ ஆர்கானிக்குன்னு விதவிதமா கெளப்பிக்கெளப்பி சும்மா இருக்கறவங்களை மருகிமருகி சாப்பிடவைச்சு அய்யோ முடியலயே தப்புசெய்யறோமோன்னு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டு தவிக்கனுமாங்கறேன்?

நம்முடைய மனோபாவத்துக்கு ( Attitude ) பொருந்தாத தேவையில்லாத அவசியமில்லாத செயல்களை எல்லோரும் செய்யறாங்களேன்னு கடமையாய் செய்வது பின்பு செய்ய இயலாமல் போவது குற்றவுணர்வை மட்டுமே கொடுக்கும். ஸ்போர்ட்ஸ்மேனாக இருப்பதும் குறிப்பிட்ட டயட்டை கட்டுக்கோப்பாய் செய்வதும் அவரவர் தேர்வு. சுயதேர்வாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் பலன்கள் மகிழ்சியை அளிக்கும். இல்லைன்னா இருக்கறதையும் அழிக்கும்.


பருமனாக இருப்பது என் உடல்வாகு. உடலை பிட்டாக வைத்திருப்பது விருப்பம் எனில் அதற்கான சரியான முயற்சிகளே நன்மை தரும். ஒருவாரத்தில் 10கிலோ குறைப்போம், குகைமனுசனாட்டம் சாப்புடுவோம் இலைதழைய தின்னு இடுப்பை குமிட்டி அடுப்பாக்குவோங்கறதெல்லாம் நோவாம நோம்பிகும்பிட நினைக்கும் விருந்தும் மருந்தும் மூனுநாள் கேட்டகிரி. அதை சரியாகப்புரிந்துகொண்டு செய்பவருக்கு பலன் கிடைத்துவிட்டுப்போகட்டும். கோடிவீட்டு கோமலா செய்யறா எதுத்தூட்டு இஞ்சினியரு ஜிஎம் டையட்டறாரு மேனேஜர் ஆயிர்வேதிக்ல பாஞ்சேநாள்ள 20கிலோ கரைச்சாருன்னெல்லாம் கதகேட்டு அப்டியே செய்யப்போகி உடல்நலம் மனநலம் ரெண்டும் கெடுத்துக்காதிங்க.

வெற்றிக்கு குறுக்குவழி கிடையாது. அதேபோல் இன்றைய அவசர பொருளாதாரவழி வாழ்வியலில் ஓசிச்சோறு என்பது இல்லை எல்லாத்துக்கும் விலையுண்டு. நல்லதோ கெட்டதோ அதை மக்களிடம் விற்கவைக்கும் எளிய வியாபார தந்திரம் குற்றவுணர்ச்சியை தூண்டிவிடுதல்.


கருப்பா இருந்தா மாப்ள வேலை கிடைக்காது அந்த பீக்கீரீம் அப்பிக்கிட்டா ஒடனே கிடைக்கும், மண்டைல முடியில்லன்னா வாழ்வே போச்சு திங்க வாயிந்தொறக்காது குஞ்சுல மூச்சா பிரியாது அகவே அமேசான் காட்டில உம்ம மண்டைக்குன்னே ஆர்டர் செஞ்சு எடுத்தாந்த மருந்து, குண்டா இருந்தா இல்வாழ்க்கை உட்பட மொத்தவாழ்க்கையே நாசமாகிரும்னு பயமுறுத்தற விளம்பரங்கமேல மொதல்ல காறித்துப்புங்க. நம் உடல் பற்றி நம்மை நாமே கூனிக்குறுகச்செய்யும் எந்த கேடுகெட்ட வியாபாரதந்திரங்களுக்கும் அனுமதி அளிக்கல்கூடாது. எர்வாமாட்டின்ல முடிவந்துதான் அந்த முடியழகை பார்த்துத்தான் ஒரு பொண்ணு கட்டிக்குவான்னா அப்படியொரு மயிருகல்யாணம் எத்தனைநாளைக்கு நிலைக்கும்? நாளைக்கு குர்வாமாட்டின்ல இன்னும் நாளடி அதிகம் முளைக்கும்னா ஆளை மாத்திக்கனுமா? என் உடல் என் அளவு என் நிறம் என் மண்டை இதுல மசுரில்லன்னா மசுரே போச்சுன்னு இருக்கவானாமா? பத்தாயிரம் கட்டி யோகா போறேங்கறது நாப்பதாயிரம் கட்டி டிரெல்மில் வாங்கி துணிகாயப்போடறது குகைமனுசனாவறேன்னுட்டு வவுத்தை நாக்கை காயப்போட்டு வெம்பறது எல்லாம் ஏன் சொந்தக்காசுல சூனியங்கறேன்?

நமக்கு திருப்திதரும் வாழ்க்கைமுறைக்கு சிறப்புசேர்க்கும் அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேம்படுவோம். பேலியோவின் நன்மை நம் சர்க்கரைவியாதிக்கு நல்லதெனில் கார்போஹைறேட் அளவைக்குறைத்து காய்கறிகளை டபுளாக்குங்கள். அவ்வளவுதான் நான் எடுத்துக்கொள்ளவேண்டியது. அதைவிட்டு தடால்னு வாங்கய்யா எல்லாரும் குகைக்கு போவோம்னுட்டு இலைதலையும் கறியுமா ரெண்டுவாரம் தின்னு முடியாம பம்பிப்பம்பி இட்லிக்கு வரனுமாங்கறேன்? என் உணவு என் உரிமை. அதுல நீயென்ன என் குற்றவுணர்வைக்கெளப்பி கொழப்பறது? உம்முடைய ஆட்டிடூட் பேலியோவெனில் செஞ்சு சந்தோசமா இருங்கய்யா. ஆனால் இந்த தகுதி அடுத்தவங்களை தப்புத்தப்பா வாழறங்கன்னு சொல்லும் தகுதியா மாறிடக்கூடாதுங்கறேன். ருசியே வாழ்வல்ல. "ருசி"யும் வாழ்வு.


புடிச்சதை செஞ்சு சாப்டு மகிழ்வாக இருப்பம்யா. உணவு என்பது கலாச்சாரம் பழக்கம் மற்றும் வாழ்வுமுறை. அதுல வியாபார அரசியலெல்ல நுழைச்சு அடிபடாதிங்க.


உணவாயினும் செய்யும் செயலாயினும் நமக்கு பிடிச்சதை பிடித்தால் மட்டுமே செய்வோம். அடுத்தவரை ஒப்புநோக்கி குற்றவுணர்வடையாமல் நம் எல்லை அறிந்து சுயம் தெளிந்து மகிழ்வாய் வாழ்வோம். சாப்பாடும் சம்பாத்தியமும் நாம் வாழ்வதற்கு இருக்கனும். நம் "வாழ்வு" எதுவென்ற தெளிவு நம்மிடமே இருக்கட்டும். அதை விளம்பர உலகுக்கு போலி வாழ்க்கைக்கு அடுத்தவர் விழைவுக்கு அடகுவைச்சுறாம உயிர்த்தலே நம் முன் இருக்கும் சவால்.


ஆகவே எதுக்கும் மடங்கீறாதீக! நாளைக்கு ஞாயிற்றுகெழம கோழியடிச்சு பிரியாணி போடறோம். ஒரு கட்டு கட்டிட்டு குடும்பத்தோட டிவில மொக்கபடம் பார்க்கறோம் :)smile உணர்ச்சிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு. எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க... அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு இருப்பவர்க...