முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டயட்டு அட்ராசிடிஸ்!


அடல்ட் வாழ்வில் உடம்புக்கு திருப்தியா செய்யவேண்டியது உணவும் உடலுறவும்.


இதில் இரண்டாவது ஏற்கனவே நம்ப நாட்டுல கடும் வறட்சில ஓடிக்கிட்டு இருக்கு. கிடைச்சதையெல்லாம் இல்வாழ்க்கை சமூகசூழல் ஒழுக்கவிதி பொருளாதாரம் சாதிமத கட்டுப்பாடுகள்னு ஆயிரத்தெட்டு கொடைச்சல்ல கிடைச்சும் கிடைக்காத குற்றவுணர்வுல பொதுப்புத்தி ( அதாங்... பெரும்பான்மை )வாழ்க்கைய ஏற்கனவே மருகலில் ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இதுல முதலாவது உணவையும் குற்றவுணர்ச்சி தூண்டப்பட்டேதான் செஞ்சு அழியனுமா? சாப்பாட்டை சந்தோசமா அனுபவிச்சு சாப்பிடறதுல அப்படி என்னய்யா குற்றம்? வீகன் பேலியோ ஆர்கானிக்குன்னு விதவிதமா கெளப்பிக்கெளப்பி சும்மா இருக்கறவங்களை மருகிமருகி சாப்பிடவைச்சு அய்யோ முடியலயே தப்புசெய்யறோமோன்னு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டு தவிக்கனுமாங்கறேன்?

நம்முடைய மனோபாவத்துக்கு ( Attitude ) பொருந்தாத தேவையில்லாத அவசியமில்லாத செயல்களை எல்லோரும் செய்யறாங்களேன்னு கடமையாய் செய்வது பின்பு செய்ய இயலாமல் போவது குற்றவுணர்வை மட்டுமே கொடுக்கும். ஸ்போர்ட்ஸ்மேனாக இருப்பதும் குறிப்பிட்ட டயட்டை கட்டுக்கோப்பாய் செய்வதும் அவரவர் தேர்வு. சுயதேர்வாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் பலன்கள் மகிழ்சியை அளிக்கும். இல்லைன்னா இருக்கறதையும் அழிக்கும்.


பருமனாக இருப்பது என் உடல்வாகு. உடலை பிட்டாக வைத்திருப்பது விருப்பம் எனில் அதற்கான சரியான முயற்சிகளே நன்மை தரும். ஒருவாரத்தில் 10கிலோ குறைப்போம், குகைமனுசனாட்டம் சாப்புடுவோம் இலைதழைய தின்னு இடுப்பை குமிட்டி அடுப்பாக்குவோங்கறதெல்லாம் நோவாம நோம்பிகும்பிட நினைக்கும் விருந்தும் மருந்தும் மூனுநாள் கேட்டகிரி. அதை சரியாகப்புரிந்துகொண்டு செய்பவருக்கு பலன் கிடைத்துவிட்டுப்போகட்டும். கோடிவீட்டு கோமலா செய்யறா எதுத்தூட்டு இஞ்சினியரு ஜிஎம் டையட்டறாரு மேனேஜர் ஆயிர்வேதிக்ல பாஞ்சேநாள்ள 20கிலோ கரைச்சாருன்னெல்லாம் கதகேட்டு அப்டியே செய்யப்போகி உடல்நலம் மனநலம் ரெண்டும் கெடுத்துக்காதிங்க.

வெற்றிக்கு குறுக்குவழி கிடையாது. அதேபோல் இன்றைய அவசர பொருளாதாரவழி வாழ்வியலில் ஓசிச்சோறு என்பது இல்லை எல்லாத்துக்கும் விலையுண்டு. நல்லதோ கெட்டதோ அதை மக்களிடம் விற்கவைக்கும் எளிய வியாபார தந்திரம் குற்றவுணர்ச்சியை தூண்டிவிடுதல்.


கருப்பா இருந்தா மாப்ள வேலை கிடைக்காது அந்த பீக்கீரீம் அப்பிக்கிட்டா ஒடனே கிடைக்கும், மண்டைல முடியில்லன்னா வாழ்வே போச்சு திங்க வாயிந்தொறக்காது குஞ்சுல மூச்சா பிரியாது அகவே அமேசான் காட்டில உம்ம மண்டைக்குன்னே ஆர்டர் செஞ்சு எடுத்தாந்த மருந்து, குண்டா இருந்தா இல்வாழ்க்கை உட்பட மொத்தவாழ்க்கையே நாசமாகிரும்னு பயமுறுத்தற விளம்பரங்கமேல மொதல்ல காறித்துப்புங்க. நம் உடல் பற்றி நம்மை நாமே கூனிக்குறுகச்செய்யும் எந்த கேடுகெட்ட வியாபாரதந்திரங்களுக்கும் அனுமதி அளிக்கல்கூடாது. எர்வாமாட்டின்ல முடிவந்துதான் அந்த முடியழகை பார்த்துத்தான் ஒரு பொண்ணு கட்டிக்குவான்னா அப்படியொரு மயிருகல்யாணம் எத்தனைநாளைக்கு நிலைக்கும்? நாளைக்கு குர்வாமாட்டின்ல இன்னும் நாளடி அதிகம் முளைக்கும்னா ஆளை மாத்திக்கனுமா? என் உடல் என் அளவு என் நிறம் என் மண்டை இதுல மசுரில்லன்னா மசுரே போச்சுன்னு இருக்கவானாமா? பத்தாயிரம் கட்டி யோகா போறேங்கறது நாப்பதாயிரம் கட்டி டிரெல்மில் வாங்கி துணிகாயப்போடறது குகைமனுசனாவறேன்னுட்டு வவுத்தை நாக்கை காயப்போட்டு வெம்பறது எல்லாம் ஏன் சொந்தக்காசுல சூனியங்கறேன்?

நமக்கு திருப்திதரும் வாழ்க்கைமுறைக்கு சிறப்புசேர்க்கும் அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேம்படுவோம். பேலியோவின் நன்மை நம் சர்க்கரைவியாதிக்கு நல்லதெனில் கார்போஹைறேட் அளவைக்குறைத்து காய்கறிகளை டபுளாக்குங்கள். அவ்வளவுதான் நான் எடுத்துக்கொள்ளவேண்டியது. அதைவிட்டு தடால்னு வாங்கய்யா எல்லாரும் குகைக்கு போவோம்னுட்டு இலைதலையும் கறியுமா ரெண்டுவாரம் தின்னு முடியாம பம்பிப்பம்பி இட்லிக்கு வரனுமாங்கறேன்? என் உணவு என் உரிமை. அதுல நீயென்ன என் குற்றவுணர்வைக்கெளப்பி கொழப்பறது? உம்முடைய ஆட்டிடூட் பேலியோவெனில் செஞ்சு சந்தோசமா இருங்கய்யா. ஆனால் இந்த தகுதி அடுத்தவங்களை தப்புத்தப்பா வாழறங்கன்னு சொல்லும் தகுதியா மாறிடக்கூடாதுங்கறேன். ருசியே வாழ்வல்ல. "ருசி"யும் வாழ்வு.


புடிச்சதை செஞ்சு சாப்டு மகிழ்வாக இருப்பம்யா. உணவு என்பது கலாச்சாரம் பழக்கம் மற்றும் வாழ்வுமுறை. அதுல வியாபார அரசியலெல்ல நுழைச்சு அடிபடாதிங்க.


உணவாயினும் செய்யும் செயலாயினும் நமக்கு பிடிச்சதை பிடித்தால் மட்டுமே செய்வோம். அடுத்தவரை ஒப்புநோக்கி குற்றவுணர்வடையாமல் நம் எல்லை அறிந்து சுயம் தெளிந்து மகிழ்வாய் வாழ்வோம். சாப்பாடும் சம்பாத்தியமும் நாம் வாழ்வதற்கு இருக்கனும். நம் "வாழ்வு" எதுவென்ற தெளிவு நம்மிடமே இருக்கட்டும். அதை விளம்பர உலகுக்கு போலி வாழ்க்கைக்கு அடுத்தவர் விழைவுக்கு அடகுவைச்சுறாம உயிர்த்தலே நம் முன் இருக்கும் சவால்.


ஆகவே எதுக்கும் மடங்கீறாதீக! நாளைக்கு ஞாயிற்றுகெழம கோழியடிச்சு பிரியாணி போடறோம். ஒரு கட்டு கட்டிட்டு குடும்பத்தோட டிவில மொக்கபடம் பார்க்கறோம் :)smile உணர்ச்சிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...