முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் !

இது உள்குத்து போஸ்டரா? இல்லை கும்மாங்குத்து போஸ்டரா?!

ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) ) தருமபுரிங்க... அது மாவட்டம்ப்பா! தருமபுரில எங்க? அங்கன இருந்து 15 மைலுங்க.. பாலக்கோடு! பாலக்காடா? கோடா? சரி...பாலக்கோட்டுல?! பக்கந்தான்.. அங்க இருந்து 5 மைலு... மாரண்டஹள்ளி... அடப்பாவி! அங்க இருந்து?! வடக்கால 3 மைலு நடந்தா.. ஏழுகுண்டூர்! எங்க பாட்டனுக்கு முப்பாட்டனுல இருந்து நாங்க வரைக்கும் இங்கதான் பசங்களுக்கு முடியிறக்கி காது குத்தறது. முனியப்பன் சாமி சிலையெல்லாம் இந்த தலைமுறை வைச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் நடுகல் தான் சாமி. மலையின் அடிவாரத்துல இருந்து மேலவரைக்கும் ஏழு குண்டுப்பாறைகள் இருப்பதால் ஏழுகுண்டு முனியப்பன்! :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்...

தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...

இந்த மாத PiT போட்டிக்கான கடைசி தேதி 15ஆம்! வழக்கமான எனது சோம்பேறித்தனத்தால் கடைசிதேதி 18ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு நாளில் கோட்டை விட்டுட்டேன். இருந்தாலும் இருக்கற இரண்டு படங்களைக்காட்டி அழ எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லையாதலால் இங்கே! ஹிஹி..

காத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள்

அன்பே! என் குளிர்கால குமுட்டி அடுப்பே! சுகமாகத்தான் இருக்கிறது ஒரு பொட்டலம் சுண்டலில் விரல்கள் துழாவி பஞ்சப்பனாதியாய் பகிர்ந்துண்னுவதும் சகிக்கத்தான் முடிவதில்லை சுண்டலுக்கு காசு கொடுக்கும் அற்ப(புத) தருணங்களில் மட்டும் நீ வெட்கம் மேலிட கடற்கரை மணலில் முகம் புதைக்கும் மர்மம் கற்றுக்கொண்டது காதலில் செலவினம் அதிகம் பெருமைதான் எனக்கும் பொட்டலத்தின் அடிநுனியில் மாட்டிய கடைசி சுண்டலுக்கான அடிதடியில் உன் வெற்றி அதையும் மீறிய வலிகள் என் கையில் விழுந்த உன் கடைவாய்ப் பற்களின் கடிதடங்கள் கற்றுக்கொண்டது காதலென்றால் வலிகள் தாங்கனும் ரோஸ்கலர் பிடிக்குமென்றே நம்பினேன் நீ ஒன்றுக்கு இரண்டாய் பஞ்சுமிட்டாய் கேட்டபோது அதிர்ந்துதான் போனேன் பஞ்சுமிட்டாய் குச்சிகளை நீ மட்டுமே சாயம் போக சப்பிய போது கற்றுக்கொண்டது காதலில் விட்டுக் கொடுக்கனும் சிலிர்க்கத்தான் செய்கிறது விரலோடு விரல் கோர்த்து முகமோடு முகம் வைத்து வாயோடு உறவாட உடலோடு விளையாட குமட்டலே மிச்சம்! சிக்கெடுக்காத தலையில் விரல்கள் சிக்க விளக்காத வாயின் கப்பு தாக்க கம்மாங்கூட்டின் வீச்சம் தூக்க கற்றுக்கொண்டது காதலில் காமமும் இருக்கனும் பதவிசாகத்தான் இருக...

அடுத்தது புடிச்ச பதிவொன்னும் போடனுமாமில்ல?!

பதிவுலக நண்பர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்லறதுன்னு தெரியலை! என்னத்த எழுதறதுன்னு தெரியாம கோட்டி புடிச்சபடி நம்ம மக்கா எல்லாம் பேரரசு கிட்ட மாட்டுன பரத் குத்துப்பாட்டுக்கு ஆடுற கணக்கா கணக்கு வழக்கில்லாம வகைதொகையில்லாம அடிச்சாடுறதை காதுகளில் பொகையோடு படிச்சபடி இருக்கற என்னைய கூப்புட்டு புடிச்ச படம் போடுங்க.. புடிச்ச பதிவு ஒன்னு சொல்லுங்கன்னு சொல்லி என் வயத்துல பாலை வார்க்கறாக. அதை சாக்கா வைச்சே இந்த வருசம் ரெண்டு பதிவு தேத்திட்டேன்! :) இருந்தாலும் இந்த தொடர் வெளாட்டுக்குன்னு எழுதறது நெசமாவே தாவு தீருது! அழைப்பு வைத்த தருமிசாருக்கு நன்றிகள்! போனவருசம் நான் எழுதுனதுல எனக்குப்பிடிச்சது எதுன்னு சொல்லனுமாம். எனது மூன்றாண்டு கால பதிவுலக வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் என் எழுத்துப் பணிக்கான (ஹிஹி.. ) கடின உழைப்பு என்பது கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன... வேணாம் ரொம்ப பழசு... புரட்சித் திருமா தேய்ஞ்சு நடிகர் திருமா ஆன... வேணாம் வெவகார மேட்டரு... என்னாத்துக்கு எதுக மொகன? நேராவே சொல்லிடறேன்... 2005ல 50 பதிவுக... 2006ல 32 பதிவுக.. 2007ல 21 பதிவுக.. என்னா ஒரு வேகம்.. முன்னேத்தம் பாருங்க... இதுல இந்த...

புடிச்ச படமொன்னு போடனுமாமில்ல!?

என் நெஞ்சில் நிறைந்த அன்பு மருத்துவர் தம்பி இராமனாதனும் , நச் கதையில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்த காதல்கோ அருட்பெருங்கோ அவர்களின் மனமுவந்த அழைப்பினை எனக்கு கொடுக்கப்பட்ட ராமனது காலடிகளாய் மகிழ்வோடு ஏற்று இந்த பதிவு. ( ஆஹா! என்னே ஒரு மேடைப்பேச்சு நாகரீகம்! குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... ) When was the last time you did something for the first time? நேரமில்லாததாலும் பல டேக்குகளை சொதப்பி பல பதிவர்களிடம் துப்பு வாங்கியது படி இதனை செய்ய மனமில்லாததாலும் படம் மட்டும் போட்டுட்டேன். ஏன் பிடிச்சதுங்கற விளக்கம் சொல்லனுமாமில்ல?! அப்பாலிக்கா பின்னாடி வர்றேன். இப்பாலிக்கா சென்னை வண்டிக்கு ஓடறேன்! ==== இப்படம் பிடித்ததற்கான காரணமும் சொல்லிடறேன்... படத்தில் இருப்பது முதன்முதலில் கடற்கரையை கண்டு மகிழ்ந்த என் அக்கா பையனும் என் பெண்ணும். அவர்கள் "எவ்ளோ தண்ணி!!!" என கண்கள் விரிய முகம் மலரக்கேட்ட அந்த கேள்விமட்டும் என் கண்ணில் இன்னும் இருக்கிறது. ஆனால், அதுபோன்றதொரு பரவசத்தை நான் கடைசியாக எப்போது கைக்கொண்டேனென யோசிக்கையில்.. ப்ச்... வளர்ச்சியில் ரசம் போன கண்ணாடியாய் மாறிவிட்ட மனசு எந்த உணர்வுகள...

கோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி

எருக்கம்பால் மருந்து முட்டி சிராய்ப்புக்கு போட்டதுண்டா? அய்யனாரு வெட்டுக்கத்தி... ஆடுங்கடா என்னச்சுத்தி... த்த... ஒயுங்க்க சாப்புடலன்னா அந்த மொட்ட மாமாக்கிட்ட புடிச்சு குடுத்துருவேன்! சொர்க்கமே என்றாலும் புல்லட்டு போல வருமா?... பெருசு... வண்டி கொடகொடங்கு... ஓவராயிலிங் விடுங்கப்பு... தாஸு... ஜல்லி அடிக்கலாம்... இந்த மாதிரி லோடுலோடா கொட்டப்பிடாது... வளைகரங்களுக்கு காத்திருக்கும் வளைத்தெடுத்த வண்ணங்கள்... பெருந்துறை நாட்டின் குதுரப்பட... நிழலைத்தேடும் நிழல்... சொன்னா நம்புங்கப்பு... IP வைச்செல்லாம் யாரு பதிவுக்கு வந்தாகன்னு கண்டுபுடிக்க முடியாது... செம ஹாட்டு மச்சி... இளநீர்க்கடை 'சுந்தர' ராமசாமி ஒர்ரூவாய்க்கு STD போடலாம்... பிரஸன்னம் பார்க்க முடியுமா?! TVS 50... ஒரு கனரக வண்டி..." பச்சை வயல் மனசு... தின்னுக்கிட்டே இருக்காதடா எரும! நேத்தைக்கு என்னா நடந்துச்சுன்னு சொல்லறேன் கேளுடா... ஆம்பளைங்க துணி வெளம்பரமாம்! என்னே ஒரு கவர்ச்சி?! ஜெசிலாக்கா... இத்த பார்க்கலையா?! என்ன கொடும சரத்குமார் இது?!