முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவனும் அவளும் பின்னெ நானும்!!




என் முதல் சிறுகதை முயற்சி இது. நான் முன்பே இட்ட பதிவு தான் என்றாலும் ஏனோ தமிழ்மணத்தில் list ஆகமாட்டேன் என்கிறது. இலக்கிய உலகம் ஒரு உன்னதமான படைப்பை கவனிக்காமல் தவறவிட்ட பாவம் வரக்கூடாது என்பதற்காக மறுபடி இங்கே.. ஹிஹி..

(இப்படி காதை கொடுங்க... கைல வேற சரக்கு இல்லை !)

------------------------------------------------------------

அவன்: "எனக்கு தெரியுண்டி.. நீ இந்த பஸ்ஸில தான் ஏறி இருப்பன்னு.. ராத்திரி 11 மணிக்கு வீட்ட விட்டுட்டு இப்பிடி ஓடறியே.. நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா?"

அவள்: "அய்யோ.. கடவுளே.. என்ன வுட்டுடு... இதுக்கு மேலயும் உன் கொடுமைய தாங்க முடியாது,,, இதுக்கு மெல எனக்கு சாவு தான் நிம்மதி... என்ன வுட்டுடு... நான் எங்கயோ போறேன்... இங்கயும் கத்தி மானத்த வாங்காத"

நான்: "ஆஹா... நைட்டு பஸ்சுல ஏதாவது பிகரு மடியும்னு பார்த்தா... இப்பிடி ஊட்டு சண்டைய இங்க வந்து போடறாங்க..!!.. இவளும் நல்ல ஆன்ட்டி தான்... ஆன ரொம்ப முத்தலு!"

அவன்: "யாரு? நானாடி கொடுமை பன்னறேன்? எச்சகல நாயே.. இப்பொ என்ன மசுருக்கு நீ சேலம் போற? உன் பழய லவ்வர பாக்க தானே?"

அவள்: "ஏன்யா இப்பிடி கத்தற? இப்பிடி பேசி பேசித்தான என்ன உசுரோட கொல்லுற... எல்லாம் தெரிஞ்சி தான கல்யாணம் பண்ணிகிட்ட... அப்பறம் எதுக்குயா பழசயே பேசி பேசி என்ன நாசம் பன்னற... இங்க பாருடா... நீ வச்ச சிகரெட்டு சூடுங்க... நீ எல்லாம் மனுசனா மிருகமா...?..."

நான்: "அட... கதை இப்பிடி வேற போகுதா... இவன் மூஞ்சிக்கு இவ ரொம்ப அதிகந்தான்...வச்சி அனுபவிக்கறத விட்டுட்டு... ஆஹா...இடுப்பு தெரியுது... இந்த கட்டய மேய்க்க தெரியாத இவனெல்லாம் ஒரு டொங்ஸ்ஸு... தூ... எங்கிட்ட மட்டும் கெடச்சா..ம்ம்ம்!"

அவன்: "காட்டுறி... அப்படியே மொத்த ஒடம்பயும் எல்லாருக்கும் அவுத்து காட்டு.. தேவடியா நாயே... ரெண்டு புள்ள பெத்த அப்பறமும் உனக்கு என்னாடி இந்த தெனவு..? எனக்கு புடிக்கலைன்னு தெரிஞ்சும் அவனுக்கு எதுக்கு போன் பேசுற? இப்படி ஊரு மேயறதுக்கா என்ன கல்யாணம் பண்ண? நீ எங்கயோ போயி சாவு... புள்ளைங்கள எதுக்குடி தூக்கிகிட்டு போற?"

நான்: "ஐயோ பாவம்... எல்லாரும் பாக்கறாங்க... இந்த கத்து கத்தறான்... அந்த பசங்கள பார்த்தா பாவமாத்தான் இருக்கு... அது யாரு பக்கத்துல... இவங்க கூட வந்த மாதிரி தெரியலயே..? நல்ல தெரச்சியா கும்னுதான் இருக்கா... சூப்பர் தித்திங்க... ஒரு 15 வயசு இருக்குமா? இவ எங்க இந்த நேரத்துல போறா? கைல என்ன அது ஸ்கூல் பேக்கா? கெடச்சா இன்னைக்கி மஜாதான்!"


அவள்: "உனக்கு சந்தேகத்துல பைத்தியம் கீய்த்தியம் புடிச்சிகிச்சா? பெத்த அப்பனுக்கு போன் பண்ணலும் உனக்கு அவன் தான்னு நெனப்பா? உன் கூட தெனமும் சாவறதுக்கு அந்த ஓடுகாலி நாயே மேலு... உன்ன நம்பி வந்ததுக்கு நல்லா குடுத்தையா வாழ்க்க"

அவன்: "இத என்ன நம்ப சொல்லுறியா? நான் என்ன கேனயனா? மனுசன் ட்டார்ச்சடு ஆவறான்னு தெரிஞ்சும் எதுக்குடி திரும்ப திரும்ப அதையே பண்ணற? என்ன நல்லா வச்சிகிட்டனா நான் ஏண்டி உன்ன அடிக்கறேன்? எறங்கி வா.. வீட்டுக்கு போலாம்... கண்டக்டர்... அவள மொதல்ல எறக்கி விடுங்க"

அவள்: "நான் வரல்லையா.. செத்தாலும் உன்னோட வர மாட்டேன்.. எத்தன வாட்டி இதயே சொல்லுவ.. நீ மாற மாட்ட...என்ன வுட்டுடு"

நான்: "எறங்கி போம்மா... போய் ஒரு தடவ படுத்தியான அப்பிடியே சரி ஆகிடுவான்.. அத வுட்டுட்டு... இவ கெளம்பினா அந்த குட்டி கிட்ட சீட்டு போட்டுடலாம்...மெரட்ச்சியாதான் பாக்குறா.. கைய்ய வச்சாலும் பயத்துல வாய தொறக்க மாட்டா போல...!."

அவன்: "சொல்லுறத கேளு.. ப்ளீஸ்.. இந்த ஒரு வாட்டி நான் சொல்லுறத கேளு... இதோட எல்லாத்தயும் மறந்துரு... வீட்டுக்கு போலாம் வா..."

அவள்: "என்னால முடியலயா... முடியல... கூட்டிகிட்டு போனவனும் என்ன உட்டுட்டான்... நம்பி கட்டுன நீயும் என்ன மனுசியா மதிக்கல... செத்து தொலையலாம்னா புள்ளெங்க வேற"

அவன்: "சரி... வா.. போலாம்...உனக்கு என்ன வுட்டா ஏது நாதி? இன்னும் டிக்கெட்டு வாங்கல இல்ல? எறெங்கி தொலைடி... போலாம்... ஆட்டோக்கு வேற நூறு ரூபா அழுவனும்"

அவள்: "இந்தாங்க.. பெரியவள தூக்கிக்கங்க... நாம்ப பொழைக்கற பொழப்புக்கு நாண்டுகிட்டு சாவலாம்... என்னத்த பண்ண? பொம்பளயா பொறந்து ஒருத்தன நம்பி வாழறதும் ஒன்னு... சேரில பன்னிங்களோட பொறளுரதும் ஒன்னு... ம்ம்ம்... நீ எங்க பாப்பா போற... இந்த நேரத்துல தனியா..? பாத்து போயிடுவயா?"

நான்: "ஆஹா.. கெளம்பிட்டா... இன்னைக்கி மச்சம்டா உனக்கு... சீக்கிரம் போடா.. போய் எடத்த போடு... பக்கத்துல உக்கார்ந்த்....!!!"

அவள்: "எழுந்துருடா எச்சகல நாயே... உன் வயசு என்னா..? அவ வயசு என்னா...? இங்க எதுக்குடா வந்து உக்கார்ற...? ஏண்டா இப்பிடி எல்லாம் கெடந்து அலயறீங்க...? அப்படி என்னடா எப்பபாரு அரிப்பு உங்களுக்கு... எழுந்துருடானா என்னடா மொறைக்கற...??

ப்பளார்....!!!"

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...