முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறுமை

Image hosted by Photobucket.com

பொசுக்கும் வெயிலில்
ஆளரவமற்ற தெருவில்
பொங்கும் வியர்வையுடன்
மெல்ல கூவியபடிசெல்லும்
பழைய பேப்பர்காரனின்
குரலில்

சாலையோர நெரிசலில்
கடந்துசெல்லும் வாகனங்களை
சலனமின்றிப் பார்க்கும்
குருட்டுப் பிச்சைக்காரனின்
முகத்தில்

இருசக்கர வாகனத்தில்
கணவனை பிடித்தபடி
குழந்தையை அணைத்தபடி
எங்கோ வெறிக்கும்
இளம் மனைவியின்
பார்வையில்

பாதாளச் சாக்கடையில்
மனசை இரும்பாக்கி
உடம்பையே கருவியாக்கி
அடைப்பை நீக்குபவன்
அசைவுகளில்

கையில் மஞ்சள்பையுடன்
நெற்றியில் யோசனையுடன்
முன்பதிவு வரிசையில்
களைத்த முதியவரின்
முகத்தில்

உணர்வுகள் செத்துப்போய்
பேச்சையே உணர்வாக்கி
எப்போது முடிப்பானென
படுத்துக்கிடக்கும் விலைமகளின்
தேகத்தில்

வெறுமைகளால் என்றும்
வெறுமைகளைமட்டுமே
உணர்த்தமுடிவதில்லை

கருத்துகள்

  1. இளவஞ்சி! வெறுமை பதிவு அருமை.தொடர்ந்து எழுதவும்.

    பதிலளிநீக்கு
  2. * பேப்பர்காரனின் குரலில், எதிர்பார்ப்பு
    * பிச்சைக்காரனின் முகத்தில் எதிர்பார்ப்பு
    * மனைவியின் பார்வையில் எதிர்பார்ப்பு
    * அடைப்பை நீக்குபவன் அசைவுகளில் எதிர்பார்ப்பு
    * முதியவரின் முகத்தில் எதிர்பார்ப்பு
    * விலைமகளின் தேகத்தில் எதிர்பார்ப்பு

    பதிலளிநீக்கு
  3. அருணன், அனானிமசு: உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உயிரோட்டமாய் இருக்கிறது கவிதை உண்மையும் கூடவோ.?

    பதிலளிநீக்கு
  5. nalla kavithai iLavanji
    unga blog paththina munnuraiyai
    koncham maaththunga en intha
    pammaaththu :-)


    enRum anbakalaa
    maravantu

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி சார்

    அது என்ன சார் எல்லா கவிதைகளிலும்
    முடிவு கொஞ்சம் conventional_ஆ இருக்க மாட்டேங்குது.

    கவிதை அருமை.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...