முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...

இந்த மாத PiT போட்டிக்கான கடைசி தேதி 15ஆம்! வழக்கமான எனது சோம்பேறித்தனத்தால் கடைசிதேதி 18ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு நாளில் கோட்டை விட்டுட்டேன். இருந்தாலும் இருக்கற இரண்டு படங்களைக்காட்டி அழ எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லையாதலால் இங்கே! ஹிஹி..







கருத்துகள்

  1. அடடா அருமையா இருக்கு. நீங்க போட்டில கலந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. shkumarதலை என்ன இது? கலக்கல். அநியாயமா முதல் பரிசை கோட்டை விட்டிட்டீங்களே

    பதிலளிநீக்கு
  3. படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...

    தனிமைனா வெறும் மனிதர்கள் இருக்குற மாதிரியே எல்லாரும் சிந்திக்கிற பட்சத்தில் உங்கள் படைப்பு அருமை...

    இதை நீங்க முதல் வாரத்திலே வெளியிட்டிருந்தால் போட்டியில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. தல .. முதல் படம் .. பல சேதி சொல்லுது .. தனிமை உணர்வை பார்த்ததும் வர வச்சிருச்சு ..

    பதிலளிநீக்கு
  5. படம் 1:- பெருங்கூட்டத்தில் தனியொருவன்

    படம் 2:- அவர்களுக்கான காத்திருப்பில்..!

    :))

    தோன்றும் தலைப்புக்களை அனுப்பலாம். இளவஞ்சி.. எல்லோருக்கும் ஒரு கிலோ அல்வா தருவார் என்று கூறிக்கொள்கிறேன்.

    எப்படீ... நாங்க படத்துக்கு தலைப்பு வச்சி... தனி போட்டியே ஆரம்பிச்சுடுவோம்ல..

    பதிலளிநீக்கு
  6. தல

    படத்தை பத்தி கமெண்ட் அடிக்க ஒன்னும் இல்ல...அம்புட்டு அழகு ;))

    கலக்கல் ;)

    பதிலளிநீக்கு
  7. பிரேம்ஜி, முரளிகண்ணன், பாலாஜி,

    ஊக்கங்களுக்கு நன்றி! :) போட்டி விதின்னா விதிதான்! அதனால அடுத்தமுறை மறக்காம முன்னாடியே கலந்துக்கறேன்.


    யாத்ரீகன்,

    நன்றி... எப்பலேர்ந்துயா இந்த குடுமி?! :)

    பாபா, தருமி, நிமல், அமல், கோபிநாத்,

    உங்களுக்கும் நன்றின்னேன்! :)

    பதிலளிநீக்கு
  8. தல பாலாபாய்,

    அடங்க மாட்டிங்களா?! :)

    என்னே ஒரு கவித்துவமான இலக்கியச்சிந்தனை! கொழுந்துவிட்டேரியும் உம்ம எலக்கியச்சிந்தனைக்கு எவனொருவன் மிரண்டாவோ பொவண்டோவோ ஊத்தி அணைக்கறானோ அவனுக்கே அடுத்த இலக்கியச்சிந்தனை விருது...

    பதிலளிநீக்கு
  9. //வெட்டிப்பயல் said

    படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...//

    வழிமொழிகிறேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........:-)

    முதல் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. Hi Ilavanji,

    pls do posting frequently... sorry to say I always dissapoint to see old posting for long time. You are really a special blog writter, so please keep posting.

    பதிலளிநீக்கு
  11. Sunny,

    உங்கள் வருகைக்கும் என்மீதான நம்பிக்கைக்கும் நன்றி!

    இப்போதைக்கு பதிவுகள் எழுதுமளவுக்கு நேரமில்லாத ஒரு வாழ்க்கைவட்டத்தில் சூழப்பட்டிருக்கிறேன் என்று மரியாதை நிமித்தமாக சொல்லிக்கொள்ள முடியுமெனினும், இப்பொழுதெல்லாம் உண்மையில் மண்டையில் சரக்கில்லை என்பதுவும் ”என்னத்தை எழுதி..” என்ற சோம்பேறித்தனமுமே உண்மையான காரணமென்பதை வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்வதில் பெருமையடை...

    இதுவும் கடந்துபோகும்... கூடிய சீக்கிரம் வரப்பார்க்கனுங்... :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...