முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...

இந்த மாத PiT போட்டிக்கான கடைசி தேதி 15ஆம்! வழக்கமான எனது சோம்பேறித்தனத்தால் கடைசிதேதி 18ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு நாளில் கோட்டை விட்டுட்டேன். இருந்தாலும் இருக்கற இரண்டு படங்களைக்காட்டி அழ எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லையாதலால் இங்கே! ஹிஹி..







கருத்துகள்

  1. அடடா அருமையா இருக்கு. நீங்க போட்டில கலந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. shkumarதலை என்ன இது? கலக்கல். அநியாயமா முதல் பரிசை கோட்டை விட்டிட்டீங்களே

    பதிலளிநீக்கு
  3. படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...

    தனிமைனா வெறும் மனிதர்கள் இருக்குற மாதிரியே எல்லாரும் சிந்திக்கிற பட்சத்தில் உங்கள் படைப்பு அருமை...

    இதை நீங்க முதல் வாரத்திலே வெளியிட்டிருந்தால் போட்டியில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. தல .. முதல் படம் .. பல சேதி சொல்லுது .. தனிமை உணர்வை பார்த்ததும் வர வச்சிருச்சு ..

    பதிலளிநீக்கு
  5. படம் 1:- பெருங்கூட்டத்தில் தனியொருவன்

    படம் 2:- அவர்களுக்கான காத்திருப்பில்..!

    :))

    தோன்றும் தலைப்புக்களை அனுப்பலாம். இளவஞ்சி.. எல்லோருக்கும் ஒரு கிலோ அல்வா தருவார் என்று கூறிக்கொள்கிறேன்.

    எப்படீ... நாங்க படத்துக்கு தலைப்பு வச்சி... தனி போட்டியே ஆரம்பிச்சுடுவோம்ல..

    பதிலளிநீக்கு
  6. தல

    படத்தை பத்தி கமெண்ட் அடிக்க ஒன்னும் இல்ல...அம்புட்டு அழகு ;))

    கலக்கல் ;)

    பதிலளிநீக்கு
  7. பிரேம்ஜி, முரளிகண்ணன், பாலாஜி,

    ஊக்கங்களுக்கு நன்றி! :) போட்டி விதின்னா விதிதான்! அதனால அடுத்தமுறை மறக்காம முன்னாடியே கலந்துக்கறேன்.


    யாத்ரீகன்,

    நன்றி... எப்பலேர்ந்துயா இந்த குடுமி?! :)

    பாபா, தருமி, நிமல், அமல், கோபிநாத்,

    உங்களுக்கும் நன்றின்னேன்! :)

    பதிலளிநீக்கு
  8. தல பாலாபாய்,

    அடங்க மாட்டிங்களா?! :)

    என்னே ஒரு கவித்துவமான இலக்கியச்சிந்தனை! கொழுந்துவிட்டேரியும் உம்ம எலக்கியச்சிந்தனைக்கு எவனொருவன் மிரண்டாவோ பொவண்டோவோ ஊத்தி அணைக்கறானோ அவனுக்கே அடுத்த இலக்கியச்சிந்தனை விருது...

    பதிலளிநீக்கு
  9. //வெட்டிப்பயல் said

    படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...//

    வழிமொழிகிறேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........:-)

    முதல் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. Hi Ilavanji,

    pls do posting frequently... sorry to say I always dissapoint to see old posting for long time. You are really a special blog writter, so please keep posting.

    பதிலளிநீக்கு
  11. Sunny,

    உங்கள் வருகைக்கும் என்மீதான நம்பிக்கைக்கும் நன்றி!

    இப்போதைக்கு பதிவுகள் எழுதுமளவுக்கு நேரமில்லாத ஒரு வாழ்க்கைவட்டத்தில் சூழப்பட்டிருக்கிறேன் என்று மரியாதை நிமித்தமாக சொல்லிக்கொள்ள முடியுமெனினும், இப்பொழுதெல்லாம் உண்மையில் மண்டையில் சரக்கில்லை என்பதுவும் ”என்னத்தை எழுதி..” என்ற சோம்பேறித்தனமுமே உண்மையான காரணமென்பதை வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்வதில் பெருமையடை...

    இதுவும் கடந்துபோகும்... கூடிய சீக்கிரம் வரப்பார்க்கனுங்... :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...

அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்

இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு. கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு. என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அம...