முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருடன் போலீஸ்


வாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல!


கான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு!


அதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம இருக்க கூட்டத்துல மறைஞ்சு மறைஞ்சு வளையவரனும். தீபாவளிக்கு அண்ணந்தம்பிக எல்லோரும் ஒரே பிட்டுதுணில அடிச்ச ஒரே மாதிரி பேண்ட்டுசட்டை போடனும். பொழைக்கதெரியாதவங்கன்னு பிழைப்புவழி கண்டவங்க சொல்லக்கேட்கையில ப்ச்சுன்னு மொனவிகிட்டு அமைதியாய் தலைகுனிஞ்சுக்கனும். இதெல்லாம் அப்பப்ப சிரமமா இருந்தாலும் செய்யற ஆளுமேல ஒரு பாசமும் பிடிமானமும் இருந்தால் பெருசாதோணாது. ஆனால் அதுக்கு பதின்ம அழுத்தங்களை கடந்துவரவரைக்கும் காத்திருக்கனும்.

டைரக்டர் போலீஸ் காலனில வாழ்ந்திருப்பாரு போல. முடிஞ்சவரை திரைல கொண்டுவந்துட்டாப்ல. குச்சானுக என காவலர்களின் வாழ்க்கையை வெளில எந்தவித சமரத்துக்கும் லஞ்சலாவனியங்களுக்கும் இடம்கொடாத சீரியசிந்தனை காந்திமகான்கள் எவர் ஒருவரும் சிரிப்பாக அவமானகரமாக நக்கலாக உன்னத கருத்துக்களை உதிர்த்துவிட்டு செல்லலாம் தான். ஆனால் நாட்டில் போலீஸ் டாக்டர் வக்கீல் அரசியல்வாதிகள் எல்லோரும் நேர்மைத்திலகங்களாக இருக்கவேண்டும்னு கட்டாயப்படுத்தும் நாம்தான் இவர்கள் எல்லாம் நம்முள் நம்மிடம் இருந்து வருபவர்களே என்பதையும் நம்முடைய சமரச அளவுகோல்கள் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்வதில்லை. எப்பொழுதும் உயர்வாக பேசி நெஞ்சை நிமிர்த்திக்கனும்னு சொல்லலை. உள்ளது உள்ளபடிக்கு தெரிஞ்சுக்க என்ன தடை இருக்கமுடியும்?


மூக்கு நரேனின் சீன் யூடூபில் சிக்கலை. கிடைத்தால் பகிர்கிறேன். (மேல ) பகிர்ந்துட்டேன் :) ) அதுவரை "வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன்" முரளிகண்ணனின் காவலர்கள் பற்றிய அருமையான கட்டுரையை ( http://muralikkannan.blogspot.com/2013/04/blog-post.html ) படித்துவைங்க. அடுத்த முறை அவர்களை சுட்டெரிக்கும் வெயிலில் காய்வதை காணும்வேளையில் ஒரு கரும்புஜீஸ் வாங்கிக்கொடுத்து சினேகமாய் குடிங்கசார்னு கேட்டுக்கலைன்னாலும் அவங்க பெருசா ஒன்னும் நினைக்கப்போறதில்லை. ஆனால் நம்மைபோலவே எல்லா வாழ்க்கை அழுத்த மாய்மாலங்களும் கொண்ட சம சகஜீவி ஒருத்தர்னு நினைச்சுக்கறதில் ஒன்னும் பெருசா நமக்கு நட்டமில்லை. :)

நேர்மை என்பது ஒரு உண்மையில் எல்லா உயரிய உணர்வுகளையும் போலவே தோலுரித்துப்பார்த்தால் ஒரு நொய்மை. அவரவர் வரையரைக்குள் அளவும் வீச்சும் மாறும் ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. கட்டாயம், கவுரவம், மரியாதை, பழக்கவழக்கம் வளர்ப்பு, பிடிவாதம், பிடிமானம், கண்மூடித்தனமான நம்பிக்கை, சுயவருத்திக்கொளல் என எல்லாம் கலந்துகட்டிய ஒரு பிம்பம் அது. இயல்பாய் மூக்குநோண்டி சுண்டிவிடறாப்ல அது அந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு படு இயல்பான காரியம். இதை இயல்பாக செய்யாட்டித்தான் அவர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். மற்றவர் நினைப்போ கஷ்டமோ வருத்தமோ எதுவும் அவர்கள் இந்த நொய்மையில் இருப்பதை மாற்றாது.



:)

கருத்துகள்

  1. யாருப்பா இந்த ஆளு ... புதுசா இந்தப் பக்கம் வந்திருக்காரு!

    // (மேல ) பகிர்ந்துட்டேன் :)// திறக்கலை

    பதிலளிநீக்கு
  2. நீங்க திட்டுனீங்களேன்னு தான் அங்கன எழுதுனதை இங்கன சேமிக்க வந்தேன் :))

    பதிலளிநீக்கு
  3. //நீங்க திட்டுனீங்களேன்னு தான் ...//

    உடம்புல அந்தப் பயம் எப்போதும் இருக்கட்டும்!

    அந்த காணொளி திறக்கவில்லையே........

    பதிலளிநீக்கு
  4. https://www.youtube.com/watch?v=gvZKrf_0-rI

    இதாங்க யீடியூப் லின்க், ஏன் உங்க ஊர்ல திறக்கலைன்னு தெரிலயே :(

    பதிலளிநீக்கு
  5. the uploader has not made this video available in your country. பாவப்பட்ட நாடுங்க எங்க நாடு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...