முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Postcards from "Scotch"land




















கருத்துகள்

  1. நன்றாக இருக்கின்றன்
    சில கமெண்டுகள் ( குறை சொல்லன்னா எப்பிடி ! )

    1. எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா, நீலம் , வெள்ளை, பச்சை எல்லாம் கொஞ்சம்
    சாம்பலடிச்சி இருக்கு !

    2. தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும், உதாரண்திற்கு ( படங்கள் 2460, 1619). சாயக்கூடாது ( படங்கள் 2403,2596)

    பட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை!

    பதிலளிநீக்கு
  2. வாத்தி, படம் எல்லாமே அம்சம். ஆமா இதெல்லாம் நீங்க எடுத்ததா? பட்டாம் பூச்சியும், இடிஞ்ச வீடும் சூப்பரோ சூப்பரு

    பதிலளிநீக்கு
  3. அட்ரா சக்கை அட்ரா சக்கை...

    அடுத்தது ஸ்டாம்ப் from அயர்லாண்ட்???

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அருமை!!!

    முக்கியமாக சாய்மனை கொடுத்துவைச்சிருக்கிறது. இடுகையோட தலைப்புக்கு ஓரளவு உதவியிருக்குன்னு நினைக்கிறேன். ;)

    மேலும் எதிர்பார்க்கிறேனாக்கும்.

    -மதி

    பதிலளிநீக்கு
  5. பாபா, இளா,

    நாந்தான்.. நானேதான்.. நம்புங்கப்பு! :)

    தேவ்,

    இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் :)

    உதய்,

    ஸ்டாம்ப் from அயர்லாண்ட்??? போயிட்டு வந்து போட்டுருவோம்! :)

    மதி,

    சாய்மனை கொடுத்துவைச்சிருக்கறது படமெடுக்கவும் தலைப்புக்கும் மட்டுமே உதவியது.. எனக்கு இல்லைன்னு சொன்னா நம்பனும் :)

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. mm...m..

    a n& சொன்ன படங்கள் எது எதுன்னு தெரியலையே!

    பதிலளிநீக்கு
  7. A n& ஜி,

    குருவே சரணம்! அடிக்கடி வரணும்! :)

    // குறை சொல்லன்னா எப்பிடி // குறையா? நீங்க வேற... அடிக்கடி வந்து மண்டைல குட்டி சொல்லிக் குடுங்க...

    // தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும்// Agreed. மண்டைல ஏத்திக்கறேன்...

    // எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா // இங்க ஊரு பேருக்கு ஏத்தாமாதிரி எப்பவும் மப்பும் மந்தாரமாவுமே இருக்கு! :)

    இந்த மாதிரி நேரங்களில் இந்த சாம்பலடிக்கற குறையை போக்க என்ன செய்ய வேண்டும்?

    மிகக் குறைந்த அளவுக்கு ஷட்டரைக் குறைத்து EV0 பாலன்ஸ் செய்வது உதவுமா?

    படம் எடுக்கும்போதே இந்த சாம்பலடிப்பதை கண்டறிய ஏதேனும் வழி உள்ளதா? அல்லது ஹிஸ்டோகிராம் தான் ஒரே வழியா?

    அல்லது வேற வழியில்லாமலும் எடுக்கத்தெரியாமலும் இப்படி எடுத்துத் தொலைத்துவிட்டால் போட்டோஷாப்பில் சரிசெய்ய என்ன செய்யனும்?

    // பட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை! // ஊக்கங்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  8. தருமிசார்,

    படங்களின் மீது சுட்டியை வைத்தால் தெரிகிற லிங்க்கின் கடைசியில் நம்பர் வருது பாருங்க.. அதை வைத்துத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    படங்களுக்கு தனித்தனியா பெயரிட்டுச் சொல்லாமல் விட்ட சிரமத்திற்கு மன்னிக்க! :)

    பதிலளிநீக்கு
  9. Ilavanji,

    Which camera? Nice shots

    pinony

    பதிலளிநீக்கு
  10. சுட்ஜி,

    எட்டிப்பார்த்தமைக்கு நன்றி!

    pinony,

    அது ஒரு அந்தக்கால பாய்ண்ட் அண்ட் ஷூட்டுங்க :) Sony DSC H1

    பதிலளிநீக்கு
  11. ஸ்காடச்லாந்து போயும் ஸ்காட்ச் அடிக்காமல் கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை வன்மையாக கண்டிக்கின்ற வேளையிலே, படங்கள் அருமையென்று சொல்லிக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. இளவஞ்சி, சாம்பலடிப்பதை/வெளிறிப் போவதை குறைக்க சில வழிகள்
    1. சிறிய அபெர்ச்சர் ( F11, F16 , F22 )
    2.Under expose, பிறகு photoshop பார்த்துக் கொள்ளலாம்
    3. வானதிற்கு ஒருப்படம், நிலத்துக்கு ஒருப் படம், பிறகு இரண்டையும் இணைக்கலாம்.
    4. யோடா சொலவதுப் போல
    Histogram use, you must !!!

    போட்டாஷாப்பில் கொஞ்சம் ஒப்பேற்றலாம். எனது ஒரு அவசர முயற்சி
    முன்

    பின்


    ( உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும். )
    You get the idea right ?

    பதிலளிநீக்கு
  13. ஒளி ஓவியர் இளவஞ்சி வாழ்க. ஒளிக்கொல்லர் இளவஞ்சி வாழ்க. ஓளியாஜலிஸ்ட் இளவஞ்சி வாழ்க. ஒளியாளி இளவஞ்சி வாழ்க. ஒளிப்பேராளி இளவஞ்சி வாழ்க.

    பதிலளிநீக்கு
  14. ராம்ஸ்,

    // கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை // இப்பவெல்லாம் இதுக்கும் கொடுப்பினை இல்லை அய்யா! அந்த சோகக்கதையை கேக்காதீரும்! :(

    A n&,

    டிப்சுகளுக்கு நன்றி! மனசுல ஏத்திக்கறேன்.

    // உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும் // அட ஏங்க நீங்க வேற! :)

    அடுத்தமுறை வர்ணங்களுக்கு முக்கியத்துவம் வருமாறு முயற்சிக்கிறேன். கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  15. அளவா ஒரு கோட்டர் மட்டும் அடிச்சிட்டு எடுத்து இருப்பீங்க போல இருக்கு...எல்லா படமும் சூப்பர்...:-)

    பதிலளிநீக்கு
  16. little angel கையிலே பட்டம்பூச்சி.. அட்டகாசம்.. poetic ஆ இருக்கு

    பதிலளிநீக்கு
  17. இன்றைய கிஸ்கிஸ்:
    போட்டிக்கான பங்களிப்பெல்லாம் அற்புதமாக இருப்பினும் அவற்றைச் சுட்டது சுப்புவா ருக்குவா என்னும் சந்தேகம் சில துப்பிறியும் ஜிங்கங்களுக்கு வந்திருக்கிறதாம்.ருக்கு பிடித்த படங்களைத் தான் எடுத்ததாய் அடிக்கடி படம் காட்டிவரும் சுப்புவின் வண்டவாளங்கள் விரைவில் தண்டவாளம் ஏறுமாமே???

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

வென்றுவாடி என் மகளே!

இ ன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை! என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம கொசுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன்! அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா! ஹிம்! காலம் போற வேகத்துல... இந்த இனியநாள் இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா? தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா? சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை! :( என்னால முடிஞ்சது அவளுக்கான இந்த பதிவுதான்! போய்வாடி என் மகளே! நம்வாழ்வை மொக்கையாக்க மெக்காலே வடிவமைத்த போர்க்களம் வென்றுவாடி என் மகளே! கூட இருக்கத்தான் ஆசப்பட்டோ...

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...