முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில ஆண்குறிகள்!

******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************




The Hindu ல வாசகர் வட்டத்தை அதிகரிப்பதற்காக ஒரு வெள்ளைக்காரதுரைய வச்சி ஆராய்ச்சி செய்து Font, Headings, Colourனு நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்காங்க! ஒரு தமிழனா இருந்து இதைப்பார்த்து எனக்கு ஒரே பேஜாராப்போச்சுங்க! நம்பநாள இதைசாதிக்கமுடியாதாங்கற ஆதங்கத்துல என்னோட ஆராய்சிக்கு Heading a மட்டும் எடுத்துகிட்டேங்க! நீங்களே சொல்லுங்க? பலன் இருக்கா இல்லையா?

ஹலோ! எனக்கு அடியப்போடறதுன்னு நீங்க முடிவுபண்ணி தேடறது தெரியுது. இதோ இப்பவே நான் ஜூட்டு! :)

கருத்துகள்

  1. நம்ப ஆராய்சி நெஜமாவெ நல்லா வேலை செய்யுதுங்க! நேத்தைக்கு மட்டும் 247 hits!

    ஆனா மறந்தும்கூட ஒருத்தரும் பின்னூட்டம் போடலை. 8 பரிந்துரைகள் வேற! அது ஒன்னே ஒன்னு (-).

    நீங்க பாத்துக்கு சிரிச்சீங்களா, திட்டுனீங்களான்னே தெரியல! அதுக்கும் ஒரு ஆராச்சிமுடிவோட வரனும்னு நெனைக்கரேன். என்னது? என்ன சொல்லுறீங்க?? கொலை விழுமா??? அட தேவுடா!

    பதிலளிநீக்கு
  2. நக்கலோ நக்கல் கலக்குங்க.ரகசியம் புரிந்ததா? இதுக்கு எதுக்கு வெள்ளைக்காரன்னு தெரியல.

    பதிலளிநீக்கு
  3. எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  4. நான் வலைத்தள உருவாக்கப்பணியிலே இருந்த நேரத்திலே ஒரு முறை நானும் எங்கள் கம்பெனி பிசினஸ் டெவெலப்மெண்ட் மேனேஜரும் அதற்கு எந்த மாதிரியான விளம்பரம் கொடுப்பது என்று பேசிக்கொண்டு இருந்தோம். பேனர் அட்வர்டைஸிங் ரொம்ப கலக்கலா போய்க்கொண்டு இருந்த நேரம் அது.

    ஒரு கருப்பு நிற பேனரில் வெள்ளை நிறத்தில் கேள்விக்குறி மட்டும் போட்ட பேனரை போடலாம் என்று சொன்னேன், அவருக்கும் பிடித்துவிட்டது. போட்டோம், ஏகப்பட்ட ஆள்வரவு கிடைத்தது.

    பதிவுக்கு மக்கள் வரவு அதிகரிக்க நல்ல உத்தி தான் :-).

    பதிலளிநீக்கு
  5. இளவஞ்சி..

    இதென்ன முட்டாள்தனம்..? உலகம் முழுவதும் பல பெண் பதிவர்களும் தங்களது வீட்டில் இருந்து தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடன் யாரோ ஒரு விருந்தினர் இருந்து இது போன்ற தலைப்பில் செய்திகள் வந்தால் அவர்களுக்குச் சங்கடமா இருக்காதா? உங்களுடைய நோக்கம் அனைவரின் கவனத்தையும் கவர்வதுதான் என்றால் வேறுவிதமாக யோசியுங்களேன்.. இப்படியா தலைப்பு வைப்பது? வன்மையாகக் கண்டிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. //உலகம் முழுவதும் பல பெண் பதிவர்களும் தங்களது வீட்டில் இருந்து தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடன் யாரோ ஒரு விருந்தினர் இருந்து இது போன்ற தலைப்பில் செய்திகள் வந்தால் அவர்களுக்குச் சங்கடமா இருக்காதா? //

    இதை நான் வழிமொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. நானும் இதை ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. ஹிஹி. என்னையும் சேர்த்துக்குங்க!

    நானும் ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. நானும் இதனை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்!

    டொய்..டொய்..டொய்..டொய்

    பதிலளிநீக்கு
  10. நானும் வன்மையா கண்டிக்கிறேன்பா...

    பதிலளிநீக்கு
  11. இத்தின விதமான தமிழன்கள் இருக்கினமா இங்க :-))

    பதிலளிநீக்கு
  12. உண்மைத் தமிழன்,

    // உங்களுடைய நோக்கம் அனைவரின் கவனத்தையும் கவர்வதுதான் என்றால் // அதேதாங்க! அதைச் சொல்லறதுக்குத்தான் இந்தப்பதிவு!

    என்னங்க செய்யறது? பரபரன்னு தலைப்பு வைக்கலைன்னா யாரு படிக்க வர்றா?! ஹெல்மெட்டு வேண்டாம்னு சொல்லற மேட்டருக்கே "என் சாவை எவன்லே தடுக்கறதுன்னு?"தான் தலைப்பு வைக்க வேண்டியிருக்கு! :)

    உங்களுடைய கடுமையான கண்டனங்களை ஏற்றுக்கொள்கிறேன்! (ஆனாலும் உங்களுக்கு இத்தனை ரசிகருங்க இருக்கக்கூடாது! ஒரு செல்ல மினி இம்சையா போறபக்கமெல்லாம் உங்க புகழ் பரப்பறாங்க!
    :) )


    சினேகிதி,

    உங்களுக்கு ஏதும் புதுதமிழருங்க தோணலையா? :)

    பதிலளிநீக்கு
  13. we always need a white skin's approval to get satisfaction in any field, this is remnents of our colonial past , hindu should change it's attitude to get more readers not a colourful dress for the nasty old lady
    I presonally admire your technique.

    பதிலளிநீக்கு
  14. சந்திப்பு பதிவர்ர்கிட்ட சொல்லுங்க. காம்ரேட் வெள்ளைக்காரத்துரையிடம் எழுத்துப்பார்க்க, கண்ட்ராக்ட் கொடுத்ததெல்லாம் கோகோகோலா நாட்டுக்குள்ளே புகுந்த ரேஞ்சுல வருமா வராதான்னு ஒரு பதிவு போடுவாரான்னு பாப்போம்

    பதிலளிநீக்கு
  15. எந்த தலைப்பு வச்சாலும், இளவஞ்சி எழுதுனதின்னா உடனே வந்திருவேங்க! என்ன சொல்ல வர்ரேன்னா, தலைப்பினால இங்க வரலைங்க.. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  16. என் தலைவன் ஊத்த தமிழனுக்கு என்னவோ அவமானம் செய்வது போல இருக்கே, இளவஞ்சி! ஆட்டோ அனுப்பவா?

    பதிலளிநீக்கு
  17. நானும் வருவேன் ஆட்டைக்கு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...