முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!


"மாப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?"

"மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.."

"டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்"

"வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.."

"டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!"

மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர புத்தியிருக்கு! சான்சு கிடைச்சா கடலைமேல கடலைன்னு போட்டுத்தாக்க அம்புட்டு ஜொள்ளு ஸ்டாக் இருக்கு. கல்யாணம்னு வந்தா மட்டும் பொண்ணு பார்க்கறதுல தொடங்கி, மண்டபம் பார்த்து கல்யாணம் கட்டி கொழந்தை பெத்து ஒரு சம்சாரியா வாழறதுல மட்டும் ஏன் இத்தனை குழப்பம்?! நாமெல்லாம் நெஜமாவே இந்த விசயத்துல வெவரம் தெரியாத மக்குகளா? இல்லை உலகம்தான் ரொம்ப மாறிடிச்சா இல்ல நம்ப லெவலே அம்புட்டுதானா இல்ல இந்த விசயமே ஒன்னுமே இல்லாத ஓவர் பில்ட்டப்பா?

இந்த காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கற கில்லாடிகளை விடுங்க! அவிங்கெல்லாம் கொடுத்து வைச்ச தெய்வங்க!(கல்யாணம் வரைக்கும்! ) இதுக்கு வழியில்லாமையோ இல்ல வீட்டுல பார்க்கற பொண்ணைத்தான் கட்டுவன்னு (என்னது ரெண்டும் ஒன்னுதானா?! )இருக்கற இலட்சிய மக்களுக்கு கல்யாணப்பேச்சு ஆரம்பிக்கறதுல இருந்து தாலிகட்டி முடிக்கற வரைக்கும் எத்தன அவஸ்தை! எத்தன போராட்டம்! எத்தன அரசியல்! இதுக்கு அப்பறம் சம்சாரசாகரத்தை நடத்தறதுல காதலிச்சவங்களும் ஒன்னுதேன்! வீட்டுல காட்டுன புள்ளைய கட்டுனவங்களும் ஒன்னுதேன்! கல்யாணம்கறது என்னத்துக்கு செய்யறோம்?! கழுத வயசான ஒரே காரணத்துக்காகவா? இல்லை அந்தந்த வயசுல அதது செய்யலைன்னா அதது அப்டியப்படி நடந்துரும்னு பொலம்பற பெருசுகளுக்காகவா? இல்லை ஊரெல்லாம் பண்ணிக்கறாங்க... அதனால நானும் செஞ்சுக்கிட்டு இந்த குட்டைல குதிச்சுட்டேங்கற ஊருடன் ஒத்துவாழ் மனப்பான்மையா? இல்லை எதிரெதிர் சீவனுங்க இணைஞ்சு வாழ்றதுல ஆண்டவன் ஒளித்துவைத்துள்ள இன்பங்களையும் துன்பங்களையும் கண்டுபிடிச்சு அனுபவிக்கற அளவுக்கு நமக்கு அறிவு முதிர்ச்சி வந்துருச்சுன்னா? இல்லை வாழ்க்கைனா இதுதானான்னு தேடுகிற நாடகத்துல இதுவும் ஒரு பார்ட்டா? கல்யாணத்துக்கு முன்னாடி மனுசனா இருந்தமா இல்லை கல்யாணத்துக்கப்பறம்தான் மனுசத்தன்மைனா என்னன்னே தெரியுதா? பொறுக்கித்தனத்துக்கும் பொறுப்புப் பருப்புகளாகறதுக்கும் இதுதான் வித்தியாசமா? இதைப்பத்தியெல்லாம் எனக்கு ரொம்ப காலமா எனக்கு ஒரு யோசனை! அந்த யோசனையின் விளைவுதான் இந்த பதிவு!

யோசிச்சு போட்ட பதிவுன்னு சொல்லறதால ஒடனே இளவஞ்சி "சித்தார்த்து" ஆயிட்டாப்புல... இனி தத்துவமா கொட்டப் போறாப்புலன்னு ஒரு நெனப்ப வளர்க்காதீக! எல்லாத்துக்கும் இருங்கற, வந்த, கேட்ட, பார்த்த கொழப்பங்கள் எனக்கும் இருந்ததால, உங்களுக்கும் இருக்கும்கற நம்பிக்கை எனக்கு அதீதமாக உள்ளதால(பொறவு நீங்கமட்டும் வானத்துல இருந்தா குதிச்சீங்க?!), உங்களையும் சேர்த்து கொழப்பறதுக்காகதான் இந்த தொடர்! கல்யாணத்துக்கு ரெடியா இருக்கறவுக "ஆஹா..இவனுங்க என்ன இப்படி புட்டுபுட்டு வைக்கறானுங்களே"ன்னு ஆச்சரியப்படுங்க.. கல்யாணம் கட்டு வாழுறவுக.."வாங்க பங்காளி! கஸ்டங்களை சொல்லி ஒப்பாரி வைக்க மாட்டுன நீ"ன்னு ரவுன்னு கட்டி ஒக்காற ரெடியாகுங்க.. புள்ளைகுட்டிகளை வளர்த்து ஆளாக்குன பெருசுங்க "சின்னப்பயக.. இதுக்கே கூடிப்பொலம்பறானுங்க.. இன்னும் வாழ்க்கைல எத்தனை இருக்கு"ன்னு மண்டைல குட்ட தயாராகுங்க.. இதெல்லாம் இல்லாம இப்பத்தான் வீட்டுல இருந்து விடுதலையாகி சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கற சிறுசுக எல்லாம் சிலேட்டுல எச்ச போட்டு தொடைச்சு பலப்பத்தால மேல ஒரு 'உ' போட்டு தயாராகுங்க! நாலு விசயம் கத்துக்கறீங்களோ இல்லையோ... பொழுதாவது போகும்! பார்த்துறலாம் ரெண்டுல ஒன்னு! இது எங்கதான் போயி முடியுதுன்னு!

நான் ஆம்பளைங்கற ஒரே காரணத்தால இந்த பதிவு ஆம்பளைப்பயக கண்ணோட்டத்தில்தான் இருக்கப் போகுதுங்கறதையும் இப்போதே சொல்லிடறேன்! ஏன்னா எனக்கு இந்த விசயத்துல பொம்பளைப் புள்ளைகளுக்கு வர்ற கஸ்டம் கொடச்சல்களைப்பற்றி எதுவும் முழுமையா தெரியாது! தெரியாத விசயத்தை தெரிஞ்சமாதிரி எழுதறதுதானே 4ஆவது கேட்டகிரி ஆளுங்களோட வேலைன்னு அங்க மங்களூர்ல ஒருத்தரு மொனங்கறது கேக்குது! ஆனா இந்த விசயத்துல நான் 'தல' கட்சி! தெரியாததை தெரியாதுன்னுதான் சொல்லனும்! ஆமா! பின்ன இந்த விசயம் மட்டும் தெரிஞ்சுட்டா ஆம்பளைங்க எல்லாம் ஏன் இப்படி கூடிப்பொலம்பப் போறோம்! சம்சார சாகரத்தினை ஒரே எட்டுல தாண்டி வாழ்க்கைல முக்தியடைஞ்சுற மாட்டமா என்ன? ஆகவே, இந்த பதிவினை படிக்கும் அக்கா, தங்கைகளே!!! சும்மா வேவு பார்க்கற மாதிரி எல்லாத்தையும் படிச்சுட்டு கமுக்கமா நமுட்டுச்சிரிப்போட இடத்தை காலி செய்யக்கூடாது! எங்கயாவது எதுலயாவது எங்களுக்கு தப்பான புரிதல்கள் இருந்தா கொஞ்சம் கொமட்டுல குத்தியாவது சொல்லிட்டுப்போங்க! ஓகேவா?!

சரிடா இளவஞ்சி! இதைப்பத்தியெல்லாம் எழுதற அளவுக்கு உனக்கு எங்க கெடைச்சது அறிவுமுதிர்ச்சின்னு யாராவது கேட்டிங்கன்னா, எனக்கு இருக்க ஒரே தகுதி கல்யாணத்துக்கு 3 வருசமா பொண்ணுபார்த்து அலைந்த "அற்புதமான" அனுபவங்களும், கல்யாணத்துக்கு பிறகான எனது 3 வருட அற்புதமான திருமண வாழ்க்கையும், இந்த பீல்டுக்கு வந்ததுல இருந்து இத்தனை வருசமா காது இருக்கறதே அக்கம்பக்கத்து அரசியலை கேக்கறதுக்குதான்னு முடிவோட கேட்டறிந்த கதைகளும்தான்! இங்க எழுதப்போறதும் இந்த லிமிட்டுக்கு உள்ளதாங்கறதால அநாவசியமா கவலைப்படாதீங்க! ஓரளவுக்காவது தெரிஞ்சதைதான் உணர்ந்ததைத்தான் எழுதப்போறேன்!

இன்னொன்னும் சொல்லிக்க விரும்பறேன்! ஒன்னா கூடி பொங்கறதுன்னு ஆயிருச்சு! பொம்பளைங்கன்னா வரிசைபோட்டு ரிதமா ஒரு கட்டுமானத்தோட ஒப்பாரி வைக்கலாம்! நமக்குதான் அதுக்கும் மண்டைல பத்தாதே! ஆகவே இந்த போக்கத்தப்பயலின் தொடர் போற போக்கை பொறுத்து இங்கயும் அங்கயும் லாஜிக்கே இல்லாம தாவ வாய்ப்புகள் அதிகமிருப்பதால் இது ஒரு அருமையான பின்நவீனத்துவ கட்டுரையாக மலரவும் வாய்ப்பிருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! ( அப்பாடி! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! ஒன்னு, நாலு பேரு புரியலைன்னு திட்டறதுக்கு முன்னாடி காரணத்தை சொல்லியாச்சு! ரெண்டு, நாளைக்கு ஏதாவது இலக்கியத் தேடலுள்ள ஜீவிங்க இணையத்துல இலக்கியம் தேடறேன்னு கூகுள்ல 'பின்நவீனத்துவம்'னு போட்டு தேடுனா "வாழ்க்கைதானப்பு இலக்கியம்"கற நம்ப பதிவு கண்டிப்பா வரும்ல! :) )

ஆகவே மக்களே நான் ரெடி!

நம்ப கஸ்டங்களை பொங்கித் தீர்ப்போம் வாங்கப்பு!

நிற்க: மேற்கண்ட படத்துக்கு வசனம் புரிய / தெரிய வேண்டியதில்லை!

--------

2. மக்கா! நீ மனசளவிலும் தயாரா?
3. தேவையான சில மாற்றங்கள்
4. புள்ள புடிக்கலாம் வாங்கப்பு
5. காதலிக்க நேரமுண்டு காத்திருக்க இருவர் உண்டு
6. கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா

கருத்துகள்

  1. ilavanji,

    sorry for typing in english....

    I've always admired your articles posted.adhu eppadi ivvalavu swarasyama eludhireenga...unga blogsah parthu enakkum eludhanumnu aasai varudhu :-)...(aasai irundha mattum podhuma ? eludha matter venamanu kaekarudhu kadhula viludhu )...anyways...innum pala nalla articles eludha en vazhthukal...unga ammani indha katturaiyah padichutu enna sollranga :-)...juzz kidding...

    Good luck...

    பதிலளிநீக்கு
  2. ஹ ஹா..சாரிங்க.. உங்க கஷ்ட்டத்த பார்த்தா சிரிப்புதான் வருது :)

    //கல்யாணம்கறது என்னத்துக்கு செய்யறோம்?! கழுத வயசான ஒரே காரணத்துக்காகவா? இல்லை அந்தந்த வயசுல அதது செய்யலைன்னா அதது அப்டியப்படி நடந்துரும்னு பொலம்பற பெருகளுக்காகவா? இல்லை ஊரெல்லாம் பண்ணிக்கறாங்க... அதனால நானும் செஞ்சுக்கிட்டு இந்த குட்டைல குதிச்சுட்டேங்கற ஊருடன் ஒத்துவாழ் மனப்பான்மையா? //

    கல்வெட்டுல பொறிக்கணும் இந்த கேள்விகளை. இதுக்கெல்லாம் 'ஆமா' பேடுறவங்க தான் அதிகம்ன்னு நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  3. கொமட்டுலே குத்தறதுக்குத் தயாரா நிக்கறோம்லே!
    //இந்த காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கற கில்லாடிகளை விடுங்க!
    அவிங்கெல்லாம் கொடுத்துவைச்ச தெய்வங்க!(கல்யாணம் வரைக்கும்! ) //

    ஏன்? கல்யாணம் கட்டிக்கிட்டு ரெண்டு வீட்டு ஆதரவும் இல்லாம அலைஞ்சதெல்லாம்
    'காவியத்துலே' சேராதோ?

    முன்னுரைன்னே இம்மாந்நீளத்துக்குப் பொங்கியாச்சு.ஹூம்..............

    ம்ம்ம்ம் அப்புறம்?

    பதிலளிநீக்கு
  4. அலுவலகம் சென்றவுடன் செய்யப்போகும் முதல்வேலை அந்த அரேபியச் சொற்களுக்கு கோனார் உரை(யை நண்பரிடம் கேட்டு) எழுதுவதுதான்.
    :-)

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள துளசி,
    உங்க காதல் கதையை எடுத்து விடுவது?
    ஆவலுடன் கதைக் கேட்க காத்திருக்கும்,
    உஷா

    பதிலளிநீக்கு
  6. சே, சே , எதுக்கு ஒப்பாரி எல்லாம் வைக்கிறது? நாங்க எல்லாம் ஞானிகள் மாதிரி. எதுக் கிடைக்கிறதோ அதை
    மனப்பூர்வமாய் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம்.
    (அதெல்லம் எதை எப்படி வழிக்கொண்டு வருவது என்று பாட்டி, அத்தை, அம்மா என்று எத்தனை டீச்சருங்க வாழ்க்கை பாடம் சொல்லிக் கொடுத்திருக்காங்க)
    உங்க மாதிரி காணாததை கண்டா மாதிரி வழியற்தும், நாலு நாள் கழிச்சி சட்டி சுட்டதடா என்று தத்துவ பாடல் பாடுவதும் எங்களுக்கு பழக்கமில்லைங்க. என்ன ஒண்ணு, டார்ச்சர் அதிகமான, பார்த்து கட்டி வெச்ச அப்பா, அம்மாவுக்கு டோஸ் விழும். கெணத்துல தள்ளீட்டீங்களே, நல்லா பார்த்து பிடிச்சீங்க, உங்களுக்குன்னு கெடச்சாங்க பாருங்க, கிளிய வளத்து பூனக்கிட்ட கொடுத்துட்டீங்களே என்று நாலு திட்டு திட்டினா, மனசு சரியாகிவிடும்.

    இனி லைன்ல கட்டிக்கிட்டு வந்து, உங்க தோஸ்துங்க அழுது புலம்புவாங்க பாருங்க. சின்ன பசங்களா, இவங்க பேச்ச கேக்காதீங்க :-)

    பதிலளிநீக்கு
  7. கல்யாணம் செய்வதற்கு மிக முக்கிய காரணம் நம்ம வீட்டு பெரியவங்க, சொந்த பந்தம், அக்கம் பக்கம் உள்ளவங்களோட இம்சை தாங்கமதான். அவங்களுக்கு என்ன அக்கறைனா? நாம பட்ட கஷ்டங்கள அடுத்த தலைமுறையும் படனுமேங்கற ஒரே நல்ல எண்ணம்தான் :)
    உங்களின் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  8. வாங்க அனானி! //unga blogsah parthu enakkum eludhanumnu aasai varudhu :-) // அப்பறம் என்னங்க? அப்படியே வந்து ஜோதில ஐக்கியமாகிருங்க! ஒரு நளைக்கு கொறைஞ்சது 5 மணிநேரம் கோவிந்தோ! கோவிந்தோ!!! :)

    சுகா, //உங்க கஷ்ட்டத்த பார்த்தா சிரிப்புதான் வருது // என்ன விளையாட்டு இது? நம்ப கஸ்டங்க.. இதெல்லாம் நம்ப கஸ்டம்! நான் தனிமனுசனில்லை! எனக்கு பின்னாடி பாதிக்கப்பட்ட / படப்போற ஒரு சமுதாயமே இருக்கு! :)

    துளசியக்கா,

    //ஏன்? கல்யாணம் கட்டிக்கிட்டு ரெண்டு வீட்டு ஆதரவும் இல்லாம அலைஞ்சதெல்லாம்
    'காவியத்துலே' சேராதோ?// கண்டிப்பாக வருவாக! ஆனா இவங்கெல்லாம் பொண்ணு பார்க்கற மொத பார்ட்ல வரமாட்டாக! ஒரு 4 அத்தியாயம் கழிச்சு அவங்களுக்கு வருவோம்!

    பாலராஜன்கீதா, கண்டுபுடிச்சீங்கன்னா மறக்காம இங்க போடுங்க! என்னத்த புதுசா இருந்துறப்போகுது.. எங்களுக்கு தெரியதது?!

    உஷா, உங்களோட கதைகேக்க நானும் சேர்ந்துக்கறேன்! :)

    மக்களே! உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. சே, சே , எதுக்கு ஒப்பாரி எல்லாம் வைக்கிறது? நாங்க எல்லாம் ஞானிகள் மாதிரி. எதுக் கிடைக்கிறதோ அதை
    மனப்பூர்வமாய் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம்.
    (அதெல்லம் எதை எப்படி வழிக்கொண்டு வருவது என்று பாட்டி, அத்தை, அம்மா என்று எத்தனை டீச்சருங்க வாழ்க்கை
    பாடம் சொல்லிக் கொடுத்திருக்காங்க)
    உங்க மாதிரி காணாததை கண்டா மாதிரி வழியற்தும், நாலு நாள் கழிச்சி சட்டி சுட்டதடா என்று தத்துவ பாடல் பாடுவதும் எங்களுக்கு பழக்கமில்லைங்க. என்ன ஒண்ணு, டார்ச்சர் அதிகமான, பார்த்து கட்டி வெச்ச அப்பா, அம்மாவுக்கு டோஸ் விழும். கெணத்துல தள்ளீட்டீங்களே, நல்லா பார்த்து பிடிச்சீங்க, உங்களுக்குன்னு கெடச்சாங்க பாருங்க, கிளிய வளத்து பூனக்கிட்ட கொடுத்துட்டீங்களே என்று நாலு திட்டு திட்டினா, மனசு சரியாகிவிடும்.
    இனி லைன்ல கட்டிக்கிட்டு வந்து, உங்க தோஸ்துங்க அழுது புலம்புவாங்க பாருங்க.
    சின்ன பசங்களா, இவங்க பேச்ச கேக்காதீங்க :-)

    பதிலளிநீக்கு
  10. //இதெல்லாம் இல்லாம இப்பத்தான் வீட்டுல இருந்து விடுதலையாக சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கற சிறுசுக எல்லாம் சிலேட்டு எச்ச போட்டு தொடைச்சு பலப்பத்தால மேல ஒரு 'உ' போட்டு தயாராகுங்க! //
    சிலேட்டு வாங்கி 'உ'போட்டு வச்சிட்டேங்க.. ஒழுங்கா அதுல எழுதறா மாதிரி எதுனா சொல்லலை.. அந்த சிலேட்டை எடுத்து ஒரே.. சரி சரி.. எதுக்கு அதெல்லாம்.. நம்ம தான் அஹிம்சாவாதியாச்சே..

    முத பாரால (இல்லை வாழ்க்கைனா இதுதானான்னு தேடுகிற நாடகத்துல இதுவும் ஒரு பார்ட்டா? ) கேட்ட கேள்விகளுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க.. காத்திகிட்டு இருக்கேன்:)

    பதிலளிநீக்கு
  11. ஓர் அசாதாரணமான, அவ்வளவு எளிதில் யாரும் கட்டவிழ்க்க முடியாத வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றி நீங்கள் உங்கள் நடையில், உத்தியில் - விளையாட்டாகச் சொல்லிக்கொண்டே சென்று படாரென நெஞ்சைத்தொட்டுவிடும் பாங்கில் - சொல்லப் போகிறீர்கள். வரவேற்கிறேன் பலத்த எதிர்பார்ப்புகளோடு.

    அந்த ஜோக்கு போட்டு இருக்கீங்களே; அதன் வசனத்தைப் படிச்சிட்டு சிரிப்பாணி தாங்கல... :-)

    பதிலளிநீக்கு
  12. அனுசுயா,

    //நாம பட்ட கஷ்டங்கள அடுத்த தலைமுறையும் படனுமேங்கற ஒரே நல்ல எண்ணம்தான்// இருந்தாகும் இருக்கும்க! யோசிக்கவேண்டிய பாயிண்டு! :)

    உஷா,

    //எல்லாம் ஞானிகள் மாதிரி. எதுக் கிடைக்கிறதோ அதை
    மனப்பூர்வமாய் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம்// அது சரி! எங்க போயிறப்போறீங்க! இந்த பாயிண்ட்டுக்கே ஒரு பதிவு பத்தாது!

    //அதெல்லம் எதை எப்படி வழிக்கொண்டு வருவது என்று பாட்டி, அத்தை, அம்மா என்று எத்தனை டீச்சருங்க வாழ்க்கை
    பாடம் சொல்லிக் கொடுத்திருக்காங்க// இங்கதாங்க எங்களுக்கு நாங்களே வைச்சுக்கிட்ட சூனியம் இருக்கு! இப்படி சொல்லிக்குடுக்க யாருமே இல்லாம சுயம்பு, சுயமா சிந்திக்கறம்னு சொல்லிக்கிட்டே சுண்ணாம்பாய்க்கிட்டு இருக்கோம்! :(

    பொன்ஸ்,

    சிலேட்டு வாங்கியதற்கு நன்றி! //நம்ம தான் அஹிம்சாவாதியாச்சே.. // எதுவரைக்கும்? கல்யாணம் வரைக்குமா?:)

    தருமிசார்!

    //வரவேற்கிறேன் பலத்த எதிர்பார்ப்புகளோடு.// ஐயையோ!! பயமா இருக்கே!

    //வசனத்தைப் படிச்சிட்டு சிரிப்பாணி தாங்கல... :-) // பார்த்தீங்களா! இதுதான் திருமணவாழ்க்கையின் ஒரெ ப்ளஸ் பாயிண்ட்டு! இல்லாள் என்ன சொல்லவர்றாங்கன்னு புரிஞ்சுக்கறதுக்காக மண்டைய ஒடைச்சுக்கறதுல புரியாத மொழியெல்லாம் புரிய ஆரம்பிச்சுடும்! சும்மா தமாசுங்க!! :)))

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. வஞ்சியாரே, என்னத்த சொல்ல , பாட்டி, அம்மா எல்லாம் சொல்லிதந்த வித்தை என்றால், வகுப்பா எடுப்பாங்க?
    அதெல்லாம் போகிற போக்கில் விடுகிற கமண்டையும், செயல்ல காட்டுகிற வீரத்தையும் பார்த்து நாங்களா தெரிஞ்சிக்கிட்டதுதான். இந்த கலையும் சொல்லி தெரிவதில்லை தாங்க :-)

    பொன்ஸ், சிலேட்ட தூக்கிக்கிட்டு உன்னை யார் இங்க வரச் சொன்னது? வகுப்பு மாறி வந்துட்டியேமா....

    பதிலளிநீக்கு
  14. திருதிருமணத்தைப் பத்தி விறுவிறுன்னு சொல்லப் போறீங்களா...சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க. சொல்லிக் கொடுத்தவன் புத்தனில்லே.

    அது சரி...// இதைப்பத்தியெல்லாம் எழுதற அளவுக்கு உனக்கு எங்க கெடைச்சது அறிவுமுதிர்ச்சின்னு யாராவது கேட்டிங்கன்னா, எனக்கு இருக்க ஒரே தகுதி கல்யாணத்துக்கு 3 வருசமா பொண்ணுபார்த்து அலைந்த "அற்புதமான" அனுபவங்களும், கல்யாணத்துக்கு பிறகான எனது 3 வருட அற்புதமான திருமண வாழ்க்கையும், இந்த பீல்டுக்கு வந்ததுல இருந்து இத்தனை வருசமா காது இருக்கறதே அக்கம்பக்கத்து அரசியலை கேக்கறதுக்குதான்னு முடிவோட கேட்டறிந்த கதைகளும்தான்! //

    ஒவ்வொரு வரியும் இவ்வளவு பெருசா இருந்தா எப்படி? வரியப் படிச்சு முடிக்கும் போது தொடக்கத்துல படிச்சது மறந்து போகுதுங்களே.

    பதிலளிநீக்கு
  15. நிற்க: மேற்கண்ட படத்துக்கு வசனம் புரிய / தெரிய வேண்டியதில்லை!//

    என்ன இளவஞ்சி இப்படி சொல்லிட்டீங்க? வசனம் புரிஞ்சா இன்னும் கொஞ்சம் சிரிக்கலாமில்லையா..? யாரையாவது புடிச்சி டிரான்ஸ்லேட் பண்ணி போடுங்க..

    மத்தபடி பழம் தின்னு கொட்டை போட்ட நான் என்னத்த சொல்றது..?

    நீங்க சொன்னதெல்லாம் சரின்னு சொல்லணும்னுதான் தோன்றது... ஆனா வீட்டுக்கு போணுமே..

    எப்படியோ நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகங்கிறது உண்மைனா.. எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கணும்.. கஷ்டமோ, நஷ்டமோ அத அனுபவிக்கணும் என்று கூறி வாழ்த்தும்.. (சபிக்கும்னு வேணும்னாலும் வச்சிக்கலாம்:-))

    பதிலளிநீக்கு
  16. கொமட்டுலே குத்தறதுக்குத் தயாரா நிக்கறோம்லே!//

    ஏங்க துளசி,

    இப்படி சொல்லி சொல்லியே எங்கள இன்னும் எத்தன காலத்துக்குத்தான் பயமுறுத்துவீங்க?

    உங்க மாதிரி காணாததை கண்டா மாதிரி வழியற்தும், நாலு நாள் கழிச்சி சட்டி சுட்டதடா என்று தத்துவ பாடல் பாடுவதும் எங்களுக்கு பழக்கமில்லைங்க. //

    இதென்னமோ உண்மைதான் Usha (என்னமோ தெரியலை உஷஅ பேர அடிச்சா இப்படித்தான் வருது).. உங்களுக்குத்தான் சுடற சட்டிய புடிச்சி புடிச்சி பழக்கமாயிருச்சே. அப்புறம் எங்க சுடறது..



    கல்யாணம் செய்வதற்கு மிக முக்கிய காரணம் நம்ம வீட்டு பெரியவங்க, சொந்த பந்தம், அக்கம் பக்கம் உள்ளவங்களோட இம்சை தாங்கமதான். அவங்களுக்கு என்ன அக்கறைனா? நாம பட்ட கஷ்டங்கள அடுத்த தலைமுறையும் படனுமேங்கற ஒரே நல்ல எண்ணம்தான் //

    அடடா.. இதென்னங்க அனுசுயா இப்படி சொல்லிட்டீங்க.. ?

    பதிலளிநீக்கு
  17. //பொன்ஸ், சிலேட்ட தூக்கிக்கிட்டு உன்னை யார் இங்க வரச் சொன்னது? வகுப்பு மாறி வந்துட்டியேமா.... //
    என்னக்கா, ஏதோ க்ளாஸ் எடுக்கறாரு.. சாமியார் ஆகுறதுக்கு முன்னாடி தான் இதெல்லாம் ப்ரீயா இருக்கும்.. அப்புறம் இதே வகுப்புக்கு பல ஆயிரம் கொடுத்து வரவேண்டி இருக்கும்.. அதான் இப்போவே...

    பதிலளிநீக்கு
  18. உஷா,

    //போகிற போக்கில் விடுகிற கமண்டையும், செயல்ல காட்டுகிற வீரத்தையும் பார்த்து நாங்களா தெரிஞ்சிக்கிட்டதுதான்//

    ஆஹா! என்ன அநியாயம் இது?! ஒரே வீட்டுல வளர்கிற அக்காதங்கச்சிங்க இதெல்லாம் புரிஞ்சுக்கறீங்க! ஆனா அண்ணந்தம்பிளுக்கு இதெல்லாம் தெரியறதில்லை! அப்படின்னா உங்களுக்கு தெரிஞ்ச ஒரு மொழில மட்டும் பேசிக்கறீங்களா?! இல்லை இதெல்லாம் புரிஞ்சுக்கற அளவுக்கு எங்களுக்கு மண்டைல பத்தாதா? அதற்கு யார் காரணம்?! எங்க மூளை இந்த விசயத்துல வளராதது யார் செய்த சதி?!

    மக்களே! விழிப்புணர்வடைவீர் :)))

    பொன்ஸ்,

    இந்த விசயத்துல அக்கா பேச்சு கேக்காதீக! நீங்களாவது கவனமா நோட்ஸ் எடுத்து அண்ணந்தம்பி இருந்தா சொல்லிக்கொடுத்து அவிங்க அறிவுக்கண்ணை திறந்து விடுங்க!! :)

    ராகவன்,

    இனி சின்னச்சின்னதா எழுத முயற்சி செய்யறேன்!

    ஜோசப்சார்,

    பாலராஜன்கீதா அவங்க கண்டுபுடிச்சு சொல்லறேன்னு சொல்லியிருக்காங்க!!

    //மத்தபடி பழம் தின்னு கொட்டை போட்ட நான் என்னத்த சொல்றது..?//

    இங்க ஏதாவது தப்பாபோன மண்டைல குட்டுங்க! :)))

    முத்துகுமரன்,

    உங்கள் வருகை பதிவேட்டில் குறிக்கப்பட்டது! கட் அடிக்காம எல்லா வகுப்புகளுக்கும் வாங்க! :)

    மக்களே! இந்த முயற்சி ஆண்களின் திருமணம் பற்றிய குழப்பங்களுக்கான ஒரு தெளிவு காணும் முயற்சியே! ஆகவே பொம்பளையாளுங்க எல்லாம் உங்களைத்தான் குத்தம் சொல்லறோம்னு சூடாவாதீக! :))

    பதிலளிநீக்கு
  19. பொன்ஸ்,

    // சாமியார் ஆகுறதுக்கு முன்னாடி//

    முடிவே செஞ்சுட்டீங்களா?! அட என் சொக்கா!

    சாமியாராகவிங்க எல்லாம் சம்சாரசாகரத்தினை நீந்திக்கடக்க துப்பற்று பாதிவழியில எஸ்கேப் ஆனவுக! ஆனா நாங்கள்லாம் அப்படியில்லை! ஒ.பு.ஒ கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள்!

    கரண்டிகள் வளைந்தாலும் பூரிக்கட்டைகள் உடைந்தாலும் கடைசிவரை போராடும் துணிவுமிக்க தீரர்கள் நாங்கள் என்பதை இங்கே என் அன்புச்சகோதரிக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்! :))

    பதிலளிநீக்கு
  20. இளவஞ்சி
    அதென்ன இப்போ நிறைய பதிவில பொண்னுபார்க்கறத பத்தி வருது. பிள்ளை பார்க்கறது, கல்யாணம் பண்ணி ஒரு வழிக்கு கொண்டு வரத பத்தி யாரும் எழுத மாட்டேங்கிறாங்க. அதையும் உங்க மனைவிகிட்ட கேட்டு எழுதுங்க இளவஞ்சி.
    உஷா வஞ்சியாரே என்று அழைத்ததை பார்த்தால் எனக்கு வஞ்சியான் வஞ்சியான் என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  21. ஒ.பு.ஒ கட்சியின் - அது என்ன புதுக் கட்சி?

    //கரண்டிகள் வளைந்தாலும் பூரிக்கட்டைகள் உடைந்தாலும் கடைசிவரை போராடும் துணிவுமிக்க தீரர்கள் நாங்கள் என்பதை இங்கே என் அன்புச்சகோதரிக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்! //
    வீரர்கள் மிகுந்த கட்சி போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப அவசியமான தொடர், எப்போ முதல் பகுதி?

    பதிலளிநீக்கு
  23. //எனக்கு இருக்க ஒரே தகுதி கல்யாணத்துக்கு 3 வருசமா பொண்ணுபார்த்து அலைந்த "அற்புதமான" அனுபவங்களும்//

    //இப்பத்தான் வீட்டுல இருந்து விடுதலையாகி சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கற சிறுசுக எல்லாம் சிலேட்டுல எச்ச போட்டு தொடைச்சு பலப்பத்தால மேல ஒரு 'உ' போட்டு தயாராகுங்க! //

    மண்டையை தடவிப்பார்த்தபடி, உவன்னா போடுற பழக்கமில்லாத காரணத்தால், சிலேட்டை மட்டும் துடைச்சி வச்சிட்டு உக்காந்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  24. பொன்ஸ், பார்த்தாயா? நாலு பசங்க வந்தாச்சு. உம் இதுங்க எல்லாம் என்னத்த கத்துக்கிட்டு... ' அதெல்லாம்
    தேறாத கேஸ் :-))

    சிஷ்யை, நாமோ....................... வாழ்க்கைப்பட்டால், எப்படி முருங்கை மரம் ஏற வேண்டும் என்று தெளிவாய் தெரிந்துக் கொண்டுதான் கழுத்தை நீட்டுகிறோம்!

    பொன்ஸ், டும் டும் டும் படம் பார்த்தாயா? உடனே ஜோ புராணம் பாடிக் கொண்டு, வஞ்சியின் சிஷ்யப்பிள்ளைகள் ஓடி வருவார்கள் பாரு, ஆனால் நான் சொல்லவந்தது, மாதவன் "ஒரு பெண்ணைப் பார்த்ததும், ஜில் என்று இருக்க வேண்டும், ஓடி ஓடி காதலிக்க வேண்டும்...நீங்க என்ன சொல்றீங்க" என்று டயலாக்ஸ் விடும் பொழுது, ஜோ கேவலமாய் ஒரு லுக் விட்டு விட்டு," நீங்க உளறினா, நானும் உளற வேண்டுமா?" என்பாள். அதுதான் பெண்.

    தேன் துளி, அது என்னவோ, இந்த ஒப்பாரியைக் கேட்டு கேட்டு போர் அடித்துவிட்டது :-)))))))))))) இங்குப்
    இப்பொழுது சிலேட்டை தூக்கிக் கொண்டு வரும் பிள்ளைகள், நாலு வருஷம் ஆனதும், இதே மேட்டரில் ஓவென்று அழுதுக் கொண்டு பதிவு போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  25. தேன் துளி,

    //பிள்ளை பார்க்கறது, கல்யாணம் பண்ணி ஒரு வழிக்கு கொண்டு வரத பத்தி யாரும் எழுத மாட்டேங்கிறாங்க.//

    இதுக்காகதான் முன்னாடியே நான் சொல்லிட்டேன்! //ஆனா இந்த விசயத்துல நான் 'தல' கட்சி! தெரியாததை தெரியாதுன்னுதான் சொல்லனும்!// என்னங்க அநியாயமா இருக்கு?! எங்களுக்கு என்னா நடக்குதுன்னே இங்க தெரியாம, தெரிஞ்சுக்கறதுக்காக இப்பத்தான் மொத தப்படிய வைக்கறோம்! இதுல பொண்ணுங்க சைடு என்னா நடக்குதுன்னு கண்டுபிடிச்சு சொல்லனுமா?! சரி விடுங்க! இது கண்ணாடி மாதிரி! ஒரு சைடு க்ளியர் ஆக ஆக அடுத்தசைடு க்ளியர் ஆகித்தானே ஆகனும்?! :)

    ***

    பொன்ஸ்,

    //ஒ.பு.ஒ கட்சியின் - அது என்ன புதுக் கட்சி? //

    இது ஆம்பளைங்களுக்காகவே ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் "ஒன்னுமே புரியல ஒலகத்துல" கட்சி! ஹிஹி...

    ***
    சுதர்சன்,

    //எப்போ முதல் பகுதி? //

    கூடிய சீக்கிரம்! :)

    ***

    மோகன்தாஸ்,

    //சிலேட்டை மட்டும் துடைச்சி வச்சிட்டு உக்காந்திருக்கேன்//

    இதுபோக எனக்கு இங்க தருமஅடி விழுந்தா ஒரு கை கொடுங்க! :)

    ***

    உஷா!

    //உம் இதுங்க எல்லாம் என்னத்த கத்துக்கிட்டு... ' அதெல்லாம்
    தேறாத கேஸ் :-)) //

    நாங்கெல்லாம் பார்க்க அப்பாவியா இருந்தாலும் பனங்காட்டு நரிங்க! இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி எங்க உளரல்களை... ச்சி... கருத்துக்களை இங்கே புடம்போடுவதை நிறுத்தமாட்டோம்! :)))

    ***

    ஒ.பு.ஒ கழக கண்மணியே!

    பார்த்திட்டாயா?! இன்னும் நீ சிலேட்டில் எச்சு துப்பி அழிக்கக்கூட ஆரம்பிக்கவில்லை! அதற்குள் நம்மை அழித்து நம் அறிவுப்பெட்டகத்தினை அறிய கருத்துக்களால் நிரப்பப்படுவதை காணச்சகியாத சாணக்கிகளின் வார்த்தைகளை கேட்டிட்டாயா?

    வீணர்களின் வார்த்தைகளில் மயங்கி விடாதே!

    வாழ்வில் நாம் வெல்லும்வரை ஓய்ந்து விடாதே!

    நாளைய வெற்றி நமதே!

    பதிலளிநீக்கு
  26. இளவஞ்சி, தைர்யமா எழுதுஙக. இன்னும் எத்தனையொ பேரு இந்தப் புலம்பல் செய்யத்தான் போராங்க.எழுதினால் தெளிவு வந்துவிடும். நான், துளசி,உஷத் தங்கச்சி எல்லொரும் சம்சாரக்கடலில் நீந்தித் கரைக்கு (ஆல்மொஸ்ட்)
    வந்தாச்சு. எதுக்கும் உங்க வீட்டு அம்மாகிட்டே கன்சல்ட் செய்து எழுதுவது நல்லது.பின்னூட்டங்கள் மாறலாம். மனைவி உஙகளோடயெ தான் இருப்பார். இதை உங்களை பயமுறுத்த சொல்ல வில்லை.just a word of caution.:-)))))!

    பதிலளிநீக்கு
  27. முத்துகுமரன்,

    //இந்த நாடும் நமதே!! :-)) //

    ஆனாலும் இது கொஞ்சம் ஓவரப்போவ்! :)))

    ****

    மானு,

    நான் முன்னாடியே சொல்லிட்டேன்!

    //இந்த முயற்சி ஆண்களின் திருமணம் பற்றிய குழப்பங்களுக்கான ஒரு தெளிவு காணும் முயற்சியே! ஆகவே பொம்பளையாளுங்க எல்லாம் உங்களைத்தான் குத்தம் சொல்லறோம்னு சூடாவாதீக! :)) //

    இருந்தாலும் நாம எங்க அவிங்க சைடு மேட்டரெல்லாம் ஒன்னாக்கூடி கண்டுபுடிச்சிடுவோமோன்னு கலக்கத்துல இருக்காக! :)))

    //just a word of caution.:-)))))! //

    கடமைன்னு வந்துட்டா நான் பந்த பாசத்துக்கு இடமே கொடுக்கறதில்லை!! ஹிஹி...

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  28. தலை..

    எந்தெந்தப்பதிவையோ தேவையான பதிவுன்றாங்க! இத்தை உட்டுட்டாங்க..

    என்ன, ஒரு ஆறு வருசம் லேட்டு! நாளது வரை புத்திசாலியா இருக்கிற பயபுள்ளைங்களாச்சும் திருந்தட்டும்.

    அப்பால, உசாக்காவுக்கு ஸ்பெசல் நன்னி.பின்னே,அவங்களோட ஒப்புதல் வாக்குமூலம் இந்தப்பதிவுக்கான அவசியத்தை அதிமாக்கிடுச்சில்ல!

    பதிலளிநீக்கு
  29. சுரேசு தம்பி,
    இது ஒப்புதல் வாக்குமூலம் இல்லை, நாங்க என்ன குத்தம் செஞ்சோம், ஒப்புதல் வாக்குமூலம் தர ????
    இது யதார்த்தம், உண்மை அது உங்களுக்கு உறுத்துகிறது.

    தேன் துளி, அதுதானே, பிள்ளை பார்த்த விவரத்தை எல்லாம் நாம எழுதுகிறோமா? என் கதையை எழுதினா, சீரியல் தோத்துடும். கண்ணீர் கதை. கல்யாணத்துக்கு முன்னாடி வழிஞ்ச வழியல் என்னா? மோகம் முப்பது நாள் முடிவதற்கு
    முன்பே, கல்யாணத்துக்கு முன்னாடி உளறியதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளகூடாது என்று அறிவித்த கூத்து என்ன? கேக்காதீங்க... :-(((((

    பதிலளிநீக்கு
  30. பதிவுக்கு அஸ்திவாரம் பலமா இருக்குதே! அதாவது வந்து..நா என்ன சொல்ல வரேன்னா.... (உங்களுக்கு வேற வேலை இல்லையான்னு ஒருத்தி என் தலைல இடிக்கிறா..நான் வரட்டா) :-))

    பதிலளிநீக்கு
  31. சுரேஷ்,

    //என்ன, ஒரு ஆறு வருசம் லேட்டு!//

    அந்த ஆறு வருசத்துல கத்துக்கிட்டதுதானே இதெல்லாம்! :)

    ***

    உஷா,

    //இது யதார்த்தம், உண்மை அது உங்களுக்கு உறுத்துகிறது. // கொஞ்சம் பொறுங்க! (சோம்பேறி இளவஞ்சி... இப்படி பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி!? எழுதுடா அடுத்த பதிவை!)

    ***

    சிவா,

    //அதாவது வந்து..நா என்ன சொல்ல வரேன்னா.... //

    புரியுது! :))))

    பதிலளிநீக்கு
  32. வாத்தியார் இளவஞ்சி அவர்களே,

    என்னுடைய தனிப்பட்ட கருத்து.. திருமணம் என்பது சமுதாயத்தில் (குறிப்பாக இந்திய சமுதாயத்தில்) அனைவரும் செய்யவேண்டிய கடமையாக பார்க்கபடுகிறது.. திருமணத்தை ஒரு சடங்காகவே நான் பார்க்கிறேன். வாழ்க்கை என்பது அதையும் தாண்டிய நெடிய பயணம்,அதில் தனிமை என்பது கடவுளின் வரம்..

    என்னை போன்ற சிந்தனை உள்ளவர்களுக்கு உங்க பதிவில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்ற எண்ணத்தில் சிலேட்டு, குச்சி, வாட்டர்பேக் உடன்

    ஒரு மாணவன்
    கார்த்திக்

    பதிலளிநீக்கு
  33. கல்யாணம் பண்ணிகுறது கூட பெரிய விஷயம் இல்லீங்க! அதுக்கு பொன்னு தேடுறது இருக்கு பாருங்க மனுஷன் வாழ்க்கை வெறுத்திடுவான். எங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போய் பார்த்து என்னடா எழவு இதுனு ஆகிப் போச்சு. ஒரு பொண்ணு என்னடான்னா கவர்மெண்ட் வேல இருந்தாதான் கட்டுவேன்குது, இன்னொண்ணு அக்கா இருக்க கூடாதுங்குது. அதுக்காக இருக்கிற அக்காவ கொல்லவா முடியும். இன்னொரு பொண்ணு கொஞ்சம் குட்டையா இருந்த உங்களையே கல்யாணம் பண்ணிகிறேன் அப்படிங்குது. அதுக்காக முட்டங்கால மடிச்சு கட்டிகத்தான் முடியுமா.
    http://nanprasanna.blogspot.com/2006/05/3.html
    இதுல எங்கள யாரும் கட்டிக்க மாட்டேங்குறான் அப்படின்னு புலம்பி தள்ளுறது ஒரு கோஷ்டி. என்னடா இவன் இப்படி எல்லாம் பேசுரானே இவனுக்கு தான் எதாவது சோகக் கதயானு நீங்க யோசிக்கலாம். நான் பெண்ணாசைல பட்ட பாடெல்லாம் இந்த பதிவுல எழுதி இருக்கேன் வந்து பாத்துக்குங்க.

    என்னயும் இந்த இஸ்கூல்ல சேத்துகுங்கபா!!
    பிரசன்னா

    பதிலளிநீக்கு
  34. சாரிபா அந்த லின்க் தப்பான எடத்துல சிக்கிகிச்சு. அத தனியா எடுத்து பாத்துகுங்கோ!!
    பிரசன்னா

    பதிலளிநீக்கு
  35. கார்த்திக்,

    //வாழ்க்கை என்பது அதையும் தாண்டிய நெடிய பயணம்,அதில் தனிமை என்பது கடவுளின் வரம்..// அப்படின்னா சொல்லறீங்க...? பொறுங்க.. பேசலாம்!

    பிரசன்னா,

    வாங்கப்பு! உங்க லிங்க்கையும் படிச்சு வைக்கறேன்!

    அதெல்லாஞ்சரி! ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி எல்லாரும் சிலேட்டோட வந்துட்டீங்க சரி! அதுக்காக வாத்தியரு வாத்தியாருன்னு உசுப்பேத்திவிட்டு நாளைக்கு மக்கா என்னை கூடிக்கும்மியடிக்கறப்ப என்னை மட்டும் தனியாளா விட்டு உடம்பை ரணகளமாக்கிறாதீக! :)))

    பதிலளிநீக்கு
  36. //வாழ்க்கை என்பது அதையும் தாண்டிய நெடிய பயணம்,அதில் தனிமை என்பது கடவுளின் வரம்..//

    இதைப் படிச்சதும் கண்ணில இருந்து கரகரன்னு தண்ணி வந்துருச்சு. கடவுள் தந்த வரம், தனிமை, நெடும்பயணம்... தம்பி கார்த்திக் உனக்கு பிடித்த எழுத்தாளர் பாலகுமரனா???

    பாவம், டகடகன்னு பசங்க என்னத்தையோ வாத்தியாரூ சொல்லி தரப் போராரூன்னு வந்து
    ஒக்காருதுங்க. வாத்தியே பெயிலாயிட்டேன்னு சூசகமா முன்னுரையில சொன்னது புரியல
    போல இருக்கு :-)))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  37. //வாத்தியே பெயிலாயிட்டேன்னு சூசகமா முன்னுரையில சொன்னது புரியல
    போல இருக்கு :-)))))))))))))))))))))))))))))))))//

    யக்கோவ்
    தெரிந்தே விரும்பித்!! தோற்றுப் போகும் வகையில் வருவது இது...

    ஆசிரியர் எவ்வழியோ மாணவர்களும் அவ்வழியே. நாங்களித்தியாகத்தைச் செய்யாவிடின் இப்புவி சமமற்று போய்விடாதா:-)).

    பதிலளிநீக்கு
  38. வாழ்க்கையில் ஜெயித்தவங்களை விட தோத்தவங்களுக்குத்தான் நெறைய தெரியும் என்பது நுனிப்புல் மேய்பவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான். (இல்லை தெரிந்தும் இப்படியா?)

    பாலகுமாரன்னா நக்கலா? இரண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு லோல் பட்டதைத்தான் தலைவர் அப்படி பொலம்பி தல்றாரு.

    பதிலளிநீக்கு
  39. உஷா,

    //வாத்தியே பெயிலாயிட்டேன்னு சூசகமா முன்னுரையில சொன்னது புரியல போல இருக்கு //

    பார்த்தீங்களா! இது கூட உங்களுக்குதான் புரிஞ்சிருக்கு! எங்க மக்களுக்கு புரியலை! எவ்வளவு வெள்ளந்தியா இருந்தா இப்படி இருப்பம்னு நெனைச்சுப்பாருங்க!!

    //:-))))))))))))))))))))))))))))))))) //

    எங்க நெலமையெல்லாம் பார்த்தா உங்களுக்கு சிரிப்பு வர வேண்டியதுதான்! அதுக்காக இந்த அளவுக்கா?! இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க்கோவ்! :)

    ***

    முத்துக்குமரன், மோகன்தாஸ்!

    //
    நாங்களித்தியாகத்தைச் செய்யாவிடின் இப்புவி சமமற்று போய்விடாதா:-)). //

    //வாழ்க்கையில் ஜெயித்தவங்களை விட தோத்தவங்களுக்குத்தான் நெறைய தெரியும் என்பது //

    அடாடா! கழகக்கண்மணிகள்னா இப்படித்தான் இருக்கனும்னு இலக்கணமே எழுதறீங்களேயப்பு!!!!

    இது போதும்! இனி எத்தகைய எதிரிகளையும் வெல்ல!!! :)

    பதிலளிநீக்கு
  40. உஷா மேடம்,

    I always wanted to be, the lonely sailor in the voyage of my life. I wish, i get this boon.

    இதுதான் பதிவை படித்ததும் எனக்கு தோன்றியது. இதுதான் என்னுடைய சித்தாந்தமும்(Idealogy).

    அதை அப்படியே சொல்லாமல் என்னால் முடிந்த அளவு தமிழில் மொழி பெயர்த்து எழுதினேன்.

    // இதைப் படிச்சதும் கண்ணில இருந்து கரகரன்னு தண்ணி வந்துருச்சு.

    But why is this due to ?

    FYI.

    I am not an avid reader of tamil novels, nor i am too much familiar with balakumaran.

    Ilvanji sir,

    I am sorry for typing a part of my comments in english.

    பதிலளிநீக்கு
  41. சாரே!!.. எப்படிங்க இப்படி டைமிங்கா அடிக்கரீங்க.. ??

    வெள்ளிக்கிழமையே படிக்காம வுட்டுடனே.. :(

    பதிலளிநீக்கு
  42. வாத்தியாரே,
    பஸ் லேட்டா வந்ததால கொஞ்சம் லேட்டாயிடுச்சு சார்...உள்ளே வரலாமா...
    [எல்லா கிளாஸ¤லேயும் தினம் இதே காரணம் சொல்லி பழகிபோச்சு:-)))) ]
    லேட்ட வந்தாலும் சிலேட்டு, சிலேட்டு குச்சி எல்லாம் இருக்கு.. அப்டிக்கா மூலைல உக்காந்து நானும் கவனிக்கிறேன். இதுல பொண்ணு பாக்க போறத விட்டு மத்த எல்லாத்தையும் இனிமேதான் கத்துக்கணும்:-(

    பதிலளிநீக்கு
  43. சார்,
    இப்படி ஒரு கோர்ஸ் நடப்பது தெரியாததால் (ஒரு பேனர் கீனர் கட்டியிருக்கப்புடாதா) இப்ப தான் வர முடிஞ்சது .இப்போ பாடம் கத்துகிட்டு ஒன்னும் ஆகப்போறதில்லண்ணாலும் ,ஆகா நாம மட்டும் தனியா இல்லண்ற ஒரு திருப்தி கிடைக்கும்கிற நம்பிக்கைல வந்திருக்கேன் சார்..உள்ளேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  44. //பொன்ஸ், டும் டும் டும் படம் பார்த்தாயா? உடனே ஜோ புராணம் பாடிக் கொண்டு, வஞ்சியின் சிஷ்யப்பிள்ளைகள் ஓடி வருவார்கள் பாரு, ஆனால் நான் சொல்லவந்தது, மாதவன் "ஒரு பெண்ணைப் பார்த்ததும், ஜில் என்று இருக்க வேண்டும், ஓடி ஓடி காதலிக்க வேண்டும்...நீங்க என்ன சொல்றீங்க" என்று டயலாக்ஸ் விடும் பொழுது, ஜோ கேவலமாய் ஒரு லுக் விட்டு விட்டு," நீங்க உளறினா, நானும் உளற வேண்டுமா?" என்பாள். அதுதான் பெண்.
    //

    உஷாக்கா, ரொம்ப கரெக்ட், அறிவாளித்தனமா பேசரதா நினைச்சுட்டு முன்னாடி நிக்கற கார்ல ஏறாம கட்டு மரத்துல ஏறி கடல்ல காணம போயிடிராங்க பொண்ணுங்க....

    பதிலளிநீக்கு
  45. //வாங்க அனானி! //unga blogsah parthu enakkum eludhanumnu aasai varudhu :-) // அப்பறம் என்னங்க? அப்படியே வந்து ஜோதில ஐக்கியமாகிருங்க! ஒரு நளைக்கு கொறைஞ்சது 5 மணிநேரம் கோவிந்தோ! கோவிந்தோ!!! :)//

    உங்க பதிவோட நீளத்தை பார்த்தாலே தெரியுது... ஆனா, உங்களாலதான் CPI (Company Performance Inentive) எல்லாம் குறையுதாம் ;-)

    பதிலளிநீக்கு
  46. ராசா,

    //வெள்ளிக்கிழமையே படிக்காம வுட்டுடனே.. :( //

    அப்போ வெள்ளிக்கிழமைதான் வலைல விழுந்தீங்களா?! :)

    ****
    சோழநாடன்,

    //இதுல பொண்ணு பாக்க போறத விட்டு மத்த எல்லாத்தையும் இனிமேதான் கத்துக்கணும்:-( //

    அப்ப அந்த வகுப்பைமட்டும் உங்ககிட்ட விட்டுடறேன்! :)

    ****
    ஜோ,

    என்னது "உள்ளேன் ஐயா"வா?! நீங்ககெல்லாம் பக்கத்து வகுப்புக்கு பாடம் நடத்தவேண்டியவரு! இங்க பயக என்னை துவம்சம் பண்ணா வந்து ஒரு கொரலு விடுங்க! :)

    //ஆகா நாம மட்டும் தனியா இல்லண்ற ஒரு திருப்தி கிடைக்கும்கிற நம்பிக்கைல// ஹிஹி...

    ****
    உதய்குமார்,

    //கார்ல ஏறாம கட்டு மரத்துல ஏறி கடல்ல காணம போயிடிராங்க //

    எப்படியாய்யா இப்படியெல்லாம்?! வாத்தியாரை இப்படி அடிக்கடி புல்லரிக்க வைச்சீங்கன்னா ஒடம்பு என்னத்துக்கு ஆகறது?!

    //ஆனா, உங்களாலதான் CPI (Company Performance Inentive) எல்லாம் குறையுதாம் ;-) // நள்ளிரவுல மாங்கு மாங்குன்னு பதிவுக எழுதி மக்களின் விடுதலைக்காக குரல் விடும் என்னைப்பார்த்து இப்படி சொல்லலாமா?

    (உண்மைகளையெல்லாம் இப்படி சபைல போட்டு ஒடைக்காதீகப்பு!! என்னைப்பார்த்தா பாவமா இல்ல ?! )

    பதிலளிநீக்கு
  47. இப்பத்தான் இந்த பக்கம் வந்தேன்...சரி... முன்னாடியே பாத்து இருந்தாலும் ஒன்னும் ஆகி இருக்காது.. அதெல்லாம் எப்பவோ மாட்டியாச்சு...

    //இப்படி ஒரு கோர்ஸ் நடப்பது தெரியாததால் (ஒரு பேனர் கீனர் கட்டியிருக்கப்புடாதா) இப்ப தான் வர முடிஞ்சது .இப்போ பாடம் கத்துகிட்டு ஒன்னும் ஆகப்போறதில்லண்ணாலும் ,ஆகா நாம மட்டும் தனியா இல்லண்ற ஒரு திருப்தி கிடைக்கும்கிற நம்பிக்கைல வந்திருக்கேன் //
    நானும் அதெ நம்பிக்கையிலதான் வந்து இருக்கேன்.....

    //இப்பொழுது சிலேட்டை தூக்கிக் கொண்டு வரும் பிள்ளைகள், நாலு வருஷம் ஆனதும், இதே மேட்டரில் ஓவென்று அழுதுக் கொண்டு பதிவு போடுவார்கள்//
    இது கூட சரியாத்தான் இருக்கற மாதிரி இருக்கு? ஹூம்..என்னத்த சொல்ல... சரி முழுசா படிப்போம்..
    பி.கு : இந்த பக்கத்திலெயே நிங்க மத்த பதிவுக்கும் link குடுக்கலாமே..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு