முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர்களுக்கு ஒரு செய்தி...




நண்பர்களுக்கு,

எனது கடைசி இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் ஆட்சேபகரமான வார்த்தை பிரயோகங்களுக்காக தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் வலைப்பதிவாளர் என்ற வகையிலான எனது கருத்துக்களே தவிர தமிழ்மணத்தின் இணை-நிர்வாகி என்ற வகையில் எழுதப்பட்டவைகள் அல்ல! எனது கருத்துக்களில் உண்மையிருக்கிறது என நான் நம்புவதாலும், எழுதப்பட்ட வகையில் என் தவறுகளை மறைக்க விரும்பாததாலும் அந்த பதிவுகளை அப்படியே விட்டு வைக்கிறேன்.

எனவே, தமிழ்மணத்தின் உறுப்பினர் என்றவகையில் அதன் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த முடிவினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

எனது கருத்துக்களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும், தவறுகளை கடிந்துரைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்!

படம் கொடுத்து உதவிய குழலிக்கும் என் நன்றிகள்! :)

கருத்துகள்

  1. திருந்திய சிறுவன் இளவஞ்சி அப்படின்னு ஒரு பதிவு போடலாமா..??

    :) ( ஸமைலியாக்கும்)

    பதிலளிநீக்கு
  2. //படம் கொடுத்து உதவிய குழலிக்கும் என் நன்றிகள்! :)
    //
    ஹி ஹி.... ஒரிஜினலே உங்களுடையது தானே....

    பதிலளிநீக்கு
  3. முந்தைய பின்னூட்டத்தில், ஒரிஜினல் என்பதற்கு பதில் மூலப்படம் என்று தான் எழுதினேன் பிறகு அதை வைத்து ஒரு கடி இருக்குமே என்று ஒரிஜினல் என்றே சொல்லிவிட்டேன்

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. அய்யய்யோ ஸ்மைலியை விட்டுட்டேனே :-))))))

    பதிலளிநீக்கு
  5. இந்த க.க.4வது பாகம்... ?

    ஒன்னும் அவசரமில்லீங்க..

    :)

    பதிலளிநீக்கு
  6. // ராசா (Raasa) said...
    இந்த க.க.4வது பாகம்... ?

    ஒன்னும் அவசரமில்லீங்க..

    :) //

    என்னங்க இவ்வளவு அவசர படறீங்க? உங்க கல்யாணத்துக்குள்ள வெளிவந்துரும், இல்லியா இளா?

    :-)

    பதிலளிநீக்கு
  7. >> திருந்திய சிறுவன் இளவஞ்சி அப்படின்னு ஒரு பதிவு போடலாமா..?? >>

    இதையும் சேர்த்தே Ignore பண்ணுங்க இளவஞ்சி. ;)

    பதிலளிநீக்கு
  8. செந்தழல் ரவி,

    உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்! :) ( ஸமைலியாக்கும்)

    குழலி,

    படம் நான் சுட்டதுதான்! ஆனால் சரியான இடத்தில் டிக் அடித்தது நீங்கதான்!

    நியோ,

    சரியாச்சொன்னீங்க! :)

    மற்றபடி மக்கள்ஸ்,

    சீக்கிரம் வர்றம்ப்பா! :)

    பதிலளிநீக்கு
  9. அப்பாடா, ராசா வார்த்தையை நானும் வழி மொழிகிறேன். 2 நாளா சென்செக்ஸை குமிய வச்சு குத்திட்டு இருக்காங்க... அங்கயும் போக முடியாம, இங்க தமிழ்மணத்துல எங்க குத்த போராங்கன்னு தெரியாம ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன்...

    இப்போதான் நிம்மதி..

    பதிலளிநீக்கு
  10. ///செந்தழல் ரவி,

    உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்! :) /////

    உங்களுக்குப் பரிந்து பேச வந்தால் இதுவும் சொல்வீர்கள் இதற்கு மேலும் சொல்வீர்கள்.... நீங்களும் தவறு செய்து உள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தவறு செய்தவரை சிறியவர் என்றழைப்பது தவறில்லை

    பதிலளிநீக்கு
  11. //அப்பாடா, ராசா வார்த்தையை நானும் வழி மொழிகிறேன். 2 நாளா சென்செக்ஸை குமிய வச்சு குத்திட்டு இருக்காங்க... அங்கயும் போக முடியாம, இங்க தமிழ்மணத்துல எங்க குத்த போராங்கன்னு தெரியாம ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன்...//

    :-)

    பதிலளிநீக்கு
  12. ////செந்தழல் ரவி,

    உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்!////

    உன் வேலைய முதல்ல ஒழுங்காப் பாருய்யான்னு அர்த்தம்....

    ரவி, நமக்கு சம்பந்தமில்லாத இடத்துலே மூக்கை நுழைச்சா இப்படித்தான் மூக்கு சப்பையாப் போவும்.....

    பதிலளிநீக்கு
  13. சரி. இளவஞ்சி. உங்கள் விருப்பம் போல எல்லாம் நல்லபடி நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  14. இளவஞ்சி!'எப்போதும்'உங்களுடன்
    'நண்பர்கள்' நாங்கள் இருக்கிறோம்.

    அன்புடன்,
    (துபாய்)ராஜா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு. எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க... அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு இருப்பவர்க...